Eng Vs Ind ODI: அசத்திய பும்ரா, ஆட்டம் கண்ட இங்கிலாந்து!

eng vs ind first odi - 2026

இந்தியா-இங்கிலாந்து முதல் ஒருநாள் போட்டி
– கே.வி. பாலசுப்பிரமணியன் –

இந்தியாவின் பந்துவீச்சுத் திறமை

ஓவல் மைதனத்தில் இன்று நடைபெற்ற முதல் ஒரு நாள் போட்டியில் இங்கிலாந்து அணி (25.2 ஓவரில் 110 ஆல் அவுட், ஜாஸ் பட்லர் 30, டேவிட் வில்லி 21, பும்ரா 6/19, ஷமி 3/31) இந்திய அணியிடம் (18.4 ஓவரில் விக்கட் இழப்பின்றி 114, ரோஹித் ஷர்மா ஆட்டமிழக்காமல் 76, ஷிகர் தவான் ஆட்டமிழக்காமல் 31) பத்து விக்கட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணியில் விராட் கோலி காயம் காரணமாக இன்று ஆடவில்லை. டாஸ் வென்ற ரோஹித் ஷர்மா இங்கிலாந்து அணியை மட்டையாடச் சொன்னார். ஜானி பெயர்ஸ்டோவும் ஜேசன் ராயும் தொடக்கவீரர்களாகக் களம் இறங்கினர். முதல் ஓவரை முகம்மது ஷமி வீசினார். இரண்டாவது ஓவரை பும்ரா வீசினார். அந்த ஓவரின் நான்காவது பந்தில் ஜேசன் ராய் கிளீன் போல்ட் ஆனார். அதே ஓவரின் ஆறாவது பந்தில் ஜோ ரூட் விக்கட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மூன்றாவது ஓவரில் ஷமி பந்தில் பென் ஸ்டோக்ஸ் அவுட்டானார்.

பும்ரா தனது மூன்றாவது ஓவரில் பெயர்ஸ்டோவை அவுட்டாக்கினார். தன்னுடைய அடுத்த ஓவரில் லிவிங்க்ஸ்டோனை ஆட்டமிழக்கச் செய்தார். எனவே எட்டாவது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி ஐந்து விக்கட் இழப்பிற்கு 26 ரன் எடுத்திருந்தது. பும்ரா 4 ஓவர், 2 மெய்டன், 6 ரன், 4 விக்கட் எடுத்திருந்தார். பும்ராவின் ஐந்தாவது ஓவரில் மொயின் அலி கொடுத்த ஒரு கஷ்டமான கேட்சை ரிஷப் பந்த் பிடிக்கவில்லை.

அதன் பின்னர் இங்கிலாந்து அணி தட்டுத்தடுமாறி 25.2 ஓவரில் அனைத்து விக்கட்டுகளையும் இழந்து 110 ரன் எடுத்தது. பும்ரா 7.2-3-19-6 என்ற ஓவர் கணக்கோடு இங்கிலாந்துக்கு எதிராக குறைந்த ரன் கொடுத்து அதிக விக்கட் எடுத்த பெருமையைப் பெற்றார். இதற்கு முன்னர் 2003 உலகக் கோப்பைப் போட்டியில் ஆஷிஷ் நெஹ்ரா எடுத்த 6/23 சாதனையாக இருந்தது.

111 ரன் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் விளையாட வந்த இந்திய அணி, முதல் பந்தில் ஷிகர் தவான் விக்கட்டை ரன் அவுட்டில் இழந்திருக்கும். நல்லவேளை அதிர்ஷ்டம் தவான் ஆட்டமிழக்கவில்லை.

தவானும் (54 பந்துகள், 31 ரன்) ரோஹித்தும் (58 பந்துகள், 76 ரன்) 18.4 ஓவரில் 114 ரன் எடுத்து வெற்றி இலக்கை எளிமையாக அடைந்தனர். ரோஹித் ஐந்து சிக்சர்கள், ஏழு பவுண்டரிகள் அடித்தார்.

கால் திசையில் அவர் அடித்த சிக்சர்கள் அனைத்தும் பிரமாதம். பும்ரா ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இந்தியா 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

அடுத்த போட்டி 14 ஜூலை லார்ட்ஸ் மைதானத்தில் பகலிரவுப் போட்டியாக நடைபெறும்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

Topics

பஞ்சாங்கம் – ஏப்ரல் 15 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தாமரை வாக்குறுதிகள்’ என்ற பெயரில் பாஜக., தேர்தல் அறிக்கை வெளியீடு!

பாஜக.,வின் 27 வேட்பாளர்களைக் குறிக்கும் வகையில் 27 முக்கிய வாக்குறுதிகளைக் குறிப்பிட்டு தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் உள்ள முக்கிய வாக்குறுதிகள்:

பிரசாரத்தில் இருந்த திமுக., வேட்பாளர்; வீட்டில் 122 பவுன் நகை கொள்ளை!

தேர்தல் நேரத்தில் திமுக வேட்பாளர் வீட்டில் திருடு போன சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாங்கம் ஏப்ரல் 14 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் தீவிபத்து..

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே மடத்துப் பட்டியில் இன்று 13 ஏப்ரல்...

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ஐபிஎல் 2026: சஞ்சு சாம்சனால் தேறும் சென்னை அணி!

ரமாபாய், சவிதா அம்பேத்கர்: இந்திய வரலாற்றில் மறைந்த உருவங்கள்!

ரமாபாயின் வாழ்க்கை வறுமை மற்றும் தனிமை படுத்தப்பட்டதான சூழ்நிலையில் இருந்தது. 1898 இல் மகாராஷ்டிராவில் ஒரு கடலோர கிராமத்தில் அவர் பிறந்தார்

ஆப்கன், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் எல்லையில் புதிய மாவட்டத்தை உருவாக்கும் சீனா!

பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் (PoK), ஆப்கானிஸ்தான் எல்லைக்கு அருகில் சீனா புதிய மாவட்டத்தை அமைக்கிறது; இது இந்தியாவிற்கு கவலை அளிக்கும் அம்சம்.

Entertainment News

Popular Categories