நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழக முதல்வர் மீது துணை பேராசிரியை ஒருவர் பாலியல் புகார் அளித்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாகை மாவட்டம் திருக்குவளை அண்ணா பல்கலைக்கழகத்தில் முதல்வராக இருப்பவர் துரைராசன் இவர் அதே கல்லூரியில் துணைப்பேராசிரியராக பணிபுரியும் பெண்ணிற்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக புகார் எழுந்துள்ளது.
கல்லூரி முதல்வர் துணைபேராசிரியைக்கு தொடர்ந்து பல நாட்களாக பாலியல் தொந்தரவு கொடுத்து வந்துள்ளதாக தெரிகிறது இந்நிலையில் அவற்றை பொறுத்துக்கொண்டு கல்லூரியில் பணியாற்றிய ஆசிரியை சில நாட்களுக்கு முன்னர் கையெழுத்து வாங்க சென்றபோது தனது ஆசைக்கு இணங்கும்படி முதல்வர் அழைத்துள்ளதாக கூறப்படுகிறது.
ஆத்திரமடைந்த அப்பெண் தனது செல்போனில் ஆடியோவாக பதிவு செய்து காவல் துறையினரிடம் இதுகுறித்து புகார் கொடுத்துள்ளார். ஆதாரமாக அந்த செல்போன் ஆடியோ பதிவையும் காவல்துறையினரிடம் ஒப்படைத்துள்ளார்.
இதையடுத்து இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் கல்லூரி தலைமையகத்திற்கு இதுகுறித்து அறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வர் மீது பெண் ஆசிரியை கொடுத்த புகார் தவறானது என கல்லூரி மாணவர்கள் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து தனிப்படை அமைத்து இது குறித்து விசாரணை நடத்துமாறு காவல்துறையினர் கூறியுள்ளனர். இந்து முன்னணி அமைப்பு மற்றும் மகளிர் அமைப்புகள் சார்பாக கல்லூரி முதல்வர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என ஆங்காங்கே சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து இச்சம்பவம் குறித்து முழுமையான அறிக்கை வெளிவந்த பிறகு தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இதையடுத்து கல்லூரி முதல்வரே அங்கு பணியாற்றும் ஆசிரியர்களுக்கு பாலியல் தொந்தரவு கொடுப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.