― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeதமிழகம்முதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்! காத்திருந்த பேரதிர்ச்சி!

முதலிரவில் மனைவியை தனியறைக்கு அனுப்பிய கணவன்! காத்திருந்த பேரதிர்ச்சி!

- Advertisement -

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்களை மயக்கி அவர்களை பாலியல் ரீதியில் வங்கி காசாளர் பயன்படுத்தியது அம்பலமாகியுள்ளது.

இந்த குற்றங்களுக்கு உடந்தையாக இருந்த அவரது தாய் உள்ளிட்ட 5 பேர் தலைமறைவாகியுள்ளனர். திருச்சி மாவட்டம் மணப்பாறையைச் சேர்ந்த 36 வயதான எட்வின் ஜெயக்குமாருக்கு தஞ்சையைச் சேர்ந்த பெண்ணுடன் கடந்த டிசம்பர் 2ஆம் தேதி திருமணம் நடைபெற்றது.

ஆனால் அதற்கு மறுநாளே அந்தப் பெண்ணுக்கு பெரும் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது எட்வின் ஜெயக்குமார் முதலிரவுக்கு மறுத்துள்ளார்.

மாறாக எட்வின் ஜெயக்குமார் தனியறையில் தங்கியிருந்தார். புதுமணப்பெண் தனியறையில் அடைக்கப்பட்டார். எட்வின் அறையிலிருந்து ஆபாசமான சப்தம் மட்டும் தொடர்ந்து வந்ததை, இரண்டு நாட்களாக புதுமணப்பெண் கவனித்துள்ளார்.

கணவருக்கு தெரியாமல் அவரது செல்போனை எடுத்து மனைவி பார்த்தபோது, எட்வினுடன் பணிபுரியும் பல பெண்கள் வாட்ஸ் ஆப்பில் ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்பியிருந்தனர். கணவரிடம் இதுபற்றி அந்தப் பெண் கேட்டபோது தான் அப்படித்தான் இருப்பேன் என்றும் வெளியில் சொன்னால் கொன்று விடுவேன் என்றும் தனது மனைவியை எட்வின் மிரட்டியுள்ளார்.

மேலும் 15 செல்போன்களை வைத்துக் கொண்டு எந்நேரமும் அவற்றில் வாட்ஸ் ஆப்பில் யாருடனாவது பேசிக் கொண்டும் உரையாடிக் கொண்டும் இருந்தார். மேலும் உண்மையை தெரிந்து கொண்டதால் மனைவியை அடித்து துன்புறுத்தி கொடுமை செய்து வந்துள்ளார்.

இந்த நிலையில் ஒருநாள் கணவர் தூங்கிய பின்னர், அவரது செல்போன்களை ஒவ்வொன்றாக எடுத்துப் பார்த்துள்ளார் அந்தப் பெண். அதில் 10 பெண்களுடன் எட்வின் ஆபாசமான கோலங்களில் இருந்த வீடியோக்கள் இருந்ததைப்பார்த்து புதுமணப்பெண் அதிர்ச்சியடைந்தார்.

பின்னர் அதனை தனது தனது செல்போனுக்கு பகிர்ந்து கொண்டார். வல்லம் அனைத்து காவல் நிலையத்தில், புதுமணப்பெண் கொடுத்த புகாரில், பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் இடம்பெற்றுள்ளன.

வங்கிக்கு வரும் பெண் வாடிக்கையாளர்கள், பக்கத்து வீட்டு எதிர்வீட்டுப் பெண்கள், என கண்ணில் படும் பெண்களை எல்லாம் அவர்களுக்குத் தெரியாமல் ஆபாசமாகப் புகைப்படங்களை எடுத்து வைத்திருந்தார் எட்வின்.

வங்கி பெண் வாடிக்கையாளர்களின் வங்கிக் கணக்கு புத்தகங்களிலிருந்து அவர்களது விபரங்களை திரட்டி, அவர்களிடம் ஆபாசமாக பேச்சு கொடுத்துள்ளார் எட்வின். பாத்ரூமில் ஆடையின்றி நின்றபடி பல பெண்களுடன் வீடியோ காலில் எட்வின் பேசியதாக முதல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ளது.

தான் விருப்பத்துக்கு இணங்கிய பெண்களுடன் எட்வின் ஜெயக்குமார் தனிமையில் இருந்த வீடியோக்களை பதிவு செய்துள்ளதாகவும் சொல்கிறது முதல் தகவல் அறிக்கை. மேலும் எட்வின் தன்னுடன் பழகிய பெண்ணை மிரட்டும் ஆடியோக்களும் அவரது செல்போனில் இருந்தன.

அதில் பத்துக்கும் மேற்பட்ட பெண்களுடன், வாட்ஸ் அப்பில் ஆபாசமாக எட்வின் ஜெயக்குமார் உரையாடியுள்ளதும் அம்பலமாகியுள்ளது. அனைத்தையும் அறிந்துகொண்டதால் அப்பெண்ணுக்கு கொடுமை அதிகமானது.

இதையடுத்து அந்தப் பெண், தனது வீட்டாரை தொடர்பு கொண்டு கதறி அழுதுள்ளார். அவரது சகோதரர்கள் உடனடியாக அவரைமீட்டு தாய்வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். டிசம்பர் 2-ம் தேதி திருமணமான அந்தப் பெண், ஜனவரி 6ம் தேதி தாய் வீட்டிற்கு திரும்பி விட்டார்.

மொத்தமே ஒரு மாதம் தான் கணவர் வீட்டில் அவர் வசித்துள்ளார். தொடர்ந்த தஞ்சை சரக டிஐஜி லோகநாதனிடம் அந்தப் பெண் புகாரளித்தார். அதையடுத்து ஜாமினில் வெளிவரக் கூடிய பிரிவுகளில் எட்வின் உள்ளிட்ட 5 பேர் மீது புகார் பதிவு செய்துள்ளனர். தன் மீது புகார் பதிவானதை அறிந்த எட்வின் மதுரை உயர் நீதிமன்ற கிளையில் முன்ஜாமின் பெற்றுள்ளார்.

எட்வினின் மனைவி, தனது கணவருக்கு எதிரான அனைத்து ஆதாரங்களையும் மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் சமர்ப்பித்தார். எட்வின் மீது ஜாமினில் வெளிவர முடியாத 2 வழக்குகளைப் பதிவு செய்து அவரைக் கைது செய்யும்படி வல்லம் அனைத்து மகளிர் போலீசாருக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

நீதிமன்ற உத்தரவின் பேரில், எட்வின் ஜெயக்குமார் மற்றும் அவரது குடும்பத்தினர் 5 பேர் மீது வல்லம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட்டதை அடுத்து தலைமறைவான எட்வின் உள்ளிட்ட 5 பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version