1917 முதல் 2023வரை தங்கம் விலை அறிவியல் கண்காட்சியில் ஆர்வமுடன் பார்த்த பெற்றோர்கள்
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே, திருவேடகம், மேற்கு விவேகானந்த மேல்நிலைப்பள்ளியில், கலை மற்றும் அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
இந்தப் பள்ளியின் செயலாளர் சுவாமி பிரம்மானந்தர், நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்தார்.
விவேகானந்தா கல்லூரி முதல்வர், முனைவர் வெங்கடேசன், சுவாமி அத்யாத்மானந்த ஆகியோர், நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் மாதவன் வரவேற்றார்.
இந்தக் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில், 130 படைப்புகள் இடம்பெற்றன. இந்திய வரைபடத்தில் 1330 திருக்குறளை எழுதி சாதனை படைத்திருந்தனர். மேலும், ராக்கெட்டின் செயல் விளக்க மாதிரி, ரத்தம் சுத்திகரித்தல், சாண எரிவாயு தயாரித்தல், ஜேசிபி எந்திர மாதிரி செயல் விளக்கம், போன்ற படைப்புகளை, மாணவர்கள் சிறப்பாகச் செய்திருந்தனர். குறிப்பாக தங்கம் விலையைக் குறிப்பிட்டு வைத்திருந்தது, பெற்றோர்களைக் கவர்ந்தது.
சோழவந்தான் அருகில் உள்ள பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் கலை மற்றும் அறிவியல் கண்காட்சியைப் பார்வையிட்டனர்.
கண்காட்சி ஒருங்கிணைப்பாளர்கள் சங்கரலிங்கம், துரை, கிருஷ்ணசாமி, மகாலிங்கம், சித்திரவேல், கார்த்திகேயன் ஆகியோர், கலை மற்றும் அறிவியல் கண்காட்சிக்கு படைப்புகளைச் செய்வதற்கு மாணவர்களை ஊக்குவித்துப் பேசினர்.
பள்ளி உதவி தலைமையாசிரியர் அச்சுதலிங்கம் நன்றி கூறினார். கலை மற்றும் அறிவியல் கண்காட்சியில் சிறந்த படைப்புகளுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன.