”மாலறியா நான்முகனும் காணா மலையினை நாம்” என்று தொடங்கும் பாடலை இன்று நாம் காண இருக்கிறோம்
“நிலவுலகினரும், வானுலகினரும், பிற உலகினரும் அறிவதற்கு அருமையானவனது அழகையும், நம்மை அடிமை கொண்டருளிக் குற்றத்தை நீக்கிச் சீராட்டும் பெருங்குணத்தையும் வியந்து பாடிச் சிவனே! சிவனே!! என்று உள்ளம் உருகி அவனை வழிபட நம்மை அழைக்கிறார் மாணிக்கவாசகர்.
இந்த மார்கழி நாளில் நாமும் திருவெம்பாவையை பாடி சிவன் அருள் பெறுவோம்!