இன்று நாம் மாணிக்கவாசகர் அருளிச் செய்த திருப்பள்ளியெழுச்சியின் 3வது பனுவலை காண இருக்கிறோம்.
”கூவின பூங்குயில் கூவின கோழி” என்று தொடங்கும் இந்த பாடலில் மாணிக்கவாசகர், பரம்பொருளான ஈசன் அறிவினால் அறிந்து கொள்வதற்கு இயலாதவன் ஆனால் எனக்கு எளியவன் என்கிறார். அதாவது நாம் அவனைச் சரணடைந்தால் அவனாகவே நமக்கு அருள்வான் ஆதலால் நாம் அனைவரும் அவன் பாதம் சரணடைய அழைக்கிறார்.
இந்த பாடலில் அமைந்துள்ள முழுப்பொருளையும் நமக்கு அழகாக நயத்துடன் விளக்க இருக்கிறார் திரு. பால சீனிவாசன் அவர்கள்.