காஷ்மீர் விவகாரத்தில், பாகிஸ்தானுக்காக அந்நாட்டுடன் இணைந்து சீனா எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
காஷ்மீருக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்து பிரிவு 370 ஐ இந்தியா ரத்து செய்ததை எதிர்த்து ஐ.நா. சபை இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என்று கூறி, சீனாவும் பாகிஸ்தானும் இணைந்து எடுத்த முயற்சி தோல்வி அடைந்தது.
ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் காஷ்மீர் பிரச்னை தொடர்பாக நடைபெற்ற விவாதத்தில் முடிவு ஏதும் எட்டப்படவில்லை. மேலும் 370- வது பிரிவை நீக்கியது இந்தியாவின் உள்நாட்டு விவகாரம் என்று இந்திய தரப்பில் வாதம் முன்வைக்கப்பட்டது.
ஆனால், காஷ்மீரில் நடக்கும் பிரச்னை என்பது இந்தியாவின் பிரச்னை மட்டும் இல்லை, அது இரண்டு நாட்டு பிரச்னை என்று ஐநா.,வின் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பாகிஸ்தான் தரப்பில் கூறப் பட்டது.
முன்னதாக, ஐநா.,வின் பாதுகாப்பு கவுன்சில் ரகசிய ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது. மொத்தம் 5 நிரந்தர உறுப்பு நாடுகள் உட்பட 15 நாடுகள் இந்த ஆலோசனையில் கலந்து கொண்டன. இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான் மற்றும் சீனாவின் முயற்சி தோல்வி அடைந்தது. இதில் ரஷ்யாவிற்கான ஐ.நா. பிரதிநிதி டிமிட்ரி பாலியன்ஸ்கி கூறியபோது, காஷ்மீர் விவகாரத்தில் இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என கருத்து தெரிவித்தார்.