
மீண்டும் தாக்குதலுக்கு வாய்ப்பு?
ஹார்முஸ் நீரிணை மீண்டும் மூடல்: ஈரான் தனது பிடிவாதத்தை மீண்டும் காட்டத் தொடங்கியுள்ளது. இஸ்ரேல் லெபனான் மீது தாக்குதலை நிறுத்தாததால், ஆத்திரமடைந்த ஈரான் ஹார்முஸ் நீரிணையை (Strait of Hormuz) மீண்டும் முழுமையாக மூடிவிட்டது. இது ட்ரம்ப் கொடுத்த 2 வார அவகாசத்தை ஆபத்தில் தள்ளியுள்ளது.
ட்ரம்ப் & நெதன்யாகு அவசர ஆலோசனை: இந்தச் செய்தி வந்த அடுத்த சில நிமிடங்களில், ட்ரம்ப் மற்றும் நெதன்யாகு தொலைபேசி வழியாகப் பேசியுள்ளனர்.
ட்ரம்ப்பின் ரியாக்ஷன்: வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கரோலின் லெவிட், “ஈரான் நீரிணையைத் திறக்கவில்லை என்றால், பேச்சுவார்த்தைக்கு இடமில்லை” என்று கூறியுள்ளார். 2 வார அவகாசம் முடிவதற்கு முன்பே ட்ரம்ப் தனது தாக்குதல் உத்தரவை மீண்டும் பிறப்பிக்க வாய்ப்பு உள்ளதாகத் தெரிகிறது.
இஸ்ரேலின் அதிரடி: இஸ்ரேல் பாதுகாப்புப் படைகள் (IDF) ஈரானின் அணுசக்தி மையங்களை நோக்கித் தங்கள் வான்வழித் தாக்குதலைத் தொடங்கத் தயாராகிவிட்டன.
லெபனான் பதற்றம்: லெபனானில் இருந்து ஹிஸ்புல்லா அமைப்பு இஸ்ரேலின் டெல் அவிவ் (Tel Aviv) நகர் மீது 50-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியுள்ளது. இதற்குப் பதிலடியாக இஸ்ரேல் இன்னும் கொடூரமான தாக்குதலை பெய்ரூட்டில் நடத்தி வருகிறது.
மீண்டும் பதற்றம்! ஈரான் எச்சரிக்கையும்… இஸ்ரேல், அமெரிக்காவின் அதிரடி பதிலும்…
ஹார்முஸ் நீரிணை: ஈரானின் IRGC கடற்படை நீர்சந்தியில் புதிய வழித்தடங்களை அறிவித்துள்ளது. “கடல் கண்ணி வெடிகள் இருப்பதால், எங்களின் அனுமதி இல்லாமல் வரும் கப்பல்கள் அழிக்கப்படும்” என்று ஈரான் எச்சரித்துள்ளது.
அமைதி ஒப்பந்தம் கிட்டத்தட்ட “வெண்டிலேட்டரில்” இருக்கும் நிலையில், ட்ரம்ப், நெதன்யாகுவின் அதிகாரப்பூர்வ வார்த்தைகள் உலகை அதிர வைத்துள்ளன.
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்: தனது சமூக வலைதளத்தில் மற்றும் ஒரு குறுகிய வீடியோ உரையில் மிகவும் ஆக்ரோஷமாகப் பேசியுள்ளார்: நான் பாகிஸ்தான் தலைவர்கள் மீது கொண்ட மரியாதையால் 2 வாரம் அவகாசம் கொடுத்தேன். ஆனால் ஈரான் மீண்டும் ஹார்முஸ் நீரிணையை மூடி விளையாடுகிறது.
இது ஒரு மிகப் பெரிய தவறு. இப்போதே நீரிணையைத் திறந்து, உங்களின் அணுசக்தித் திட்டங்களை நிறுத்தவில்லை என்றால், அந்த 2 வாரம் வரை நான் காத்திருக்கப் போவதில்லை. அடுத்த 24 மணிநேரத்தில் ‘Operation Fury’ மீண்டும் தொடங்கலாம்.
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு: ஈரான் உடனான இந்த தற்காலிகத் இடைவெளி லெபனானுக்குப் பொருந்தாது. ஹிஸ்புல்லா ஒழிக்கப்படும் வரை அங்கு குண்டுவீச்சு தொடரும்.
எங்கள் விரல் இன்னும் துப்பாக்கி விசையில்தான் இருக்கிறது. எந்த நேரத்திலும் போருக்குத் திரும்ப நாங்கள் தயார். ஈரான் இப்போது மிகவும் பலவீனமாக உள்ளது, அதை நாங்கள் சரியாகப் பயன்படுத்துவோம்.



