342 தொகுதிகளைக் கொண்ட பாகிஸ்தான் நாடாளுமன்றத்துக்கு வரும் ஜூலை 25 -ஆம் தேதில் தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியுள்ளது. இதில் கராச்சி தொகுதியில் போட்டியிடுவதற்காக, பிரபல முன்னாள் கிரிக்கெட் வீரரும், தெஹ்ரீக் இ இன்சாஃப் கட்சியின் தலைவருமான இம்ரான் கான் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளார். இம்ரான் கான் ஒன்றுக்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட உள்ளதாக அவரது கட்சியின் மூத்த தலைவர் ஆசாத் உமர் (Asad Umar) தெரிவித்துள்ளார். கடந்த 2013-ஆம் ஆண்டு தேர்தலில் இம்ரான் கான், ராவல்பிண்டி, மியான்வலி, பெஷாவர், லாகூர் (Rawalpindi, Mianwali, Peshawar, Lahore) ஆகிய தொகுதிகளில் வேட்புமனு தாக்கல் செய்தது குறிப்பிடத்தக்கது.
To Read this news article in other Bharathiya Languages
பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் கராச்சி தொகுதியில் போட்டியிடும் இம்ரான் கான்
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari