இன்றைய பஞ்சாங்கம் – மே 16
தினசரி.காம் ஶ்ரீராமஜெயம். ஜெய்ஸ்ரீராம் ஜெய்ஸ்ரீராம்
||श्री:||
!!ஸ்ரீ:!!
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
श्री मते रामानुजाय नम:
ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்
பஞ்சாங்கம்
வைகாசி ~* *3 (16.5.2024 ) வியாழன் கிழமை.
வருடம் ~ க்ரோதி {க்ரோதி நாம சம்வத்ஸரம்}
அயனம் ~ உத்தராயணம்
ருது ~ வஸந்த ருது.
மாதம் ~ வைகாசி மாஸம் { வ்ருஷப மாதம்}
பக்ஷம் ~ சுக்ல பக்ஷம்.
திதி ~ 9.05 am வரை அஷ்டமி பின் நவமி
நாள் ~ {குரு வாஸரம்} வியாழன் கிழமை.
நட்சத்திரம் ~ 8.32 pm வரை மகம் பின் பூரம்
யோகம் ~ த்ருவம்
கரணம் ~ பவம்
அமிர்தாதியோகம்~ சுபயோகம்.
நல்ல நேரம் ~ காலை 10.30 ~ 11.30 & மாலை 5.00 ~ 6.00.
ராகு காலம்~ மதியம் 1.30 ~ 3.00.
எமகண்டம் ~ காலை 6.00 ~ 7.30.
குளிகை ~ காலை 9.00 ~ 10.30.
சூரிய உதயம் ~ காலை 5.54
சந்திராஷ்டமம் ~ மகரம்
சூலம் ~ தெற்கு.
பரிகாரம் ~ நல்லெண்ணெய்.
ஸ்ராத்ததிதி ~ நவமி
இன்று ~
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துக்கள்.
!!स्वस्तिप्रजाभ्यः परिपालयंतां, न्यायेन मार्गेण महीं महीशाः ।
गोब्राह्मणेभ्यः शुभमस्तु नित्यं, लोकाः समस्ताः सुखिनोभवंतु!!
॥ॐ शान्तिः शान्तिः शान्तिः |!
!!धर्मो रक्षति रक्षित:!!
!!लोकः समस्ताः सुखिनो भवन्तु!
சுப ஓரைகள்: அவரவர் இருப்பிடத்தில் சூரிய உதயத்திற்கு தகுந்தவாறு நேரத்தை கூட்டி, குறைத்து கொள்ளவும்.
காலை :
சுக்கிர ஓரை 08.01 முதல் 09.00 வரை
புதன் ஓரை 09.01 முதல் 10.00 வரை
பகல் :
குரு ஓரை 12.01 முதல் 01.00 வரை
சுக்கிர ஓரை 03.01 முதல் 04.00 வரை
புதன் ஓரை 04.01 முதல் 05.00 வரை
இரவு :
குரு ஓரை 07.01 முதல் 08.00 வரை
இன்றைய ராசிபலன்கள்
16.05.2024
மேஷம்
மேஷ ராசிக்கான பலன்கள் ..!
எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வார்கள். மனதில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். பொழுதுபோக்கு செயல்களில் ஆர்வம் ஏற்படும். வழக்கு சார்ந்த விஷயங்களில் பொறுமை வேண்டும். உறவினர்களிடம் சூழ்நிலைக்கு ஏற்ப அனுசரித்து நடந்து கொள்ளவும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். சுபம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : நீல நிறம்
அஸ்வினி : இலக்குகள் பிறக்கும்.
பரணி : பொறுமை வேண்டும்.
கிருத்திகை : தேவைகளை நிறைவேற்றுவீர்கள்.
ரிஷபம்
ரிஷப ராசிக்கான பலன்கள் ..!
தனித்திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஆரோக்கிய செயல்களில் கவனம் வேண்டும். பெரியோர்களின் ஆலோசனைகள் நன்மையை ஏற்படுத்தும். எதிர்பார்த்த உதவிகள் அலைச்சலுக்கு பின்பு கிடைக்கும். வியாபார பணிகளில் புதிய அனுபவம் கிடைக்கும். உறவுகளின் வழியில் சில புரிதல் உண்டாகும். நட்பு நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : இளம்பச்சை நிறம்
கிருத்திகை : வாய்ப்புகள் கிடைக்கும்.
ரோகிணி : ஆலோசனைகள் கிடைக்கும்.
மிருகசீரிஷம் : புரிதல் உண்டாகும்.
மிதுனம்
மிதுன ராசிக்கான பலன்கள் ..!
பிரச்சனைகளுக்கு திடீர் முடிவுகளை எடுப்பீர்கள். சிந்தனைப் போக்கில் மாற்றங்கள் ஏற்படும். மறைமுகமான திறமைகளால் ஆதாயம் ஏற்படும். வேலையாட்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். அக்கம்-பக்கம் இருப்பவர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். ஒப்பந்தம் தொடர்பான எண்ணங்கள் கைகூடும். உத்தியோகத்தில் எதிர்ப்புகளை வெற்றி கொள்வீர்கள். சுகம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
மிருகசீரிஷம் : மாற்றங்கள் ஏற்படும்.
திருவாதிரை : ஒத்துழைப்பு கிடைக்கும்.
புனர்பூசம் : வெற்றிகரமான நாள்.
கடகம்
கடக ராசிக்கான பலன்கள் ..!
செலவுகளின் தன்மைகளை அறிந்து செயல்படவும். குடும்பத்தில் சிறு சிறு விவாதங்கள் ஏற்பட்டு நீங்கும். புதிய முயற்சிகளில் சிந்தித்துச் செயல்படவும். வியாபாரத்தில் சாதகமான சூழல் ஏற்படும். வேகத்தை விட விவேகத்துடன் செயல்படுவது நன்மையை ஏற்படுத்தும். புதிய நபர்களின் அறிமுகம் மூலம் மாற்றம் பிறக்கும். பேச்சுக்களில் பொறுமை வேண்டும். ஆதாயம் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : தென்மேற்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
புனர்பூசம் : வாதங்கள் நீங்கும்.
பூசம் : விவேகத்துடன் செயல்படவும்.
ஆயில்யம் : பொறுமை வேண்டும்.
சிம்மம்
சிம்ம ராசிக்கான பலன்கள் ..!
குடும்ப உறுப்பினர்களின் உணர்வுகளை புரிந்து கொள்வீர்கள். வியாபாரத்தில் மந்தமான சூழல் உண்டாகும். புதுவிதமான சிந்தனைகள் மனதில் ஏற்படும். சஞ்சலமான சிந்தனைகளால் குழப்பம் ஏற்பட்டு நீங்கும். பலம் மற்றும் பலவீனத்தை புரிந்து கொள்வதற்கான சூழ்நிலை உண்டாகும். உத்தியோகத்தில் மாற்றமான வாய்ப்புகள் கிடைக்கும். தாமதம் ஏற்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : ஆகாயநீல நிறம்
மகம் : மந்தமான நாள்.
பூரம் : குழப்பம் நீங்கும்.
உத்திரம் : வாய்ப்புகள் கிடைக்கும்.
கன்னி
கன்னி ராசிக்கான பலன்கள் ..!
புதுவிதமான பயணங்களின் மூலம் மனதில் தெளிவு ஏற்படும். குடும்ப சூழ்நிலை அறிந்து செயல்படுவீர்கள். அயல்நாட்டு தொடர்பான பொருட்கள் மீது ஆர்வமும், ஈடுபாடும் அதிகரிக்கும். எதிர்பாராத சில செலவுகளின் மூலம் சேமிப்பு குறையும். மற்றவர்களின் கருத்துகளுக்கு மதிப்பளித்து செயல்படவும். எந்த ஒரு செயலிலும் திருப்தியின்மை ஏற்படும். விருப்பம் நிறைவேறும் நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : மஞ்சள் நிறம்
உத்திரம் : தெளிவு ஏற்படும்.
அஸ்தம் : ஈடுபாடு அதிகரிக்கும்.
சித்திரை : திருப்தியின்மையான நாள்.
துலாம்
துலாம் ராசிக்கான பலன்கள் ..!
இழுபறியான தனவரவுகள் கிடைக்கும். உடன்பிறந்தவர்களிடம் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் குறையும். அரசு தொடர்பான பணிகளில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். செய்யும் பணிகளில் ஒத்துழைப்பு கிடைக்கும். கலை சார்ந்த செயல்களில் ஈடுபாடு உண்டாகும். மனதில் எண்ணிய நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். அனுபவம் மேம்படும் நாள்.
அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 8
அதிர்ஷ்ட நிறம் : மயில்நீல நிறம்
சித்திரை : தனவரவுகள் கிடைக்கும்.
சுவாதி : எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.
விசாகம் : ஆசைகள் நிறைவேறும்.
விருச்சிகம்
விருச்சிக ராசிக்கான பலன்கள் ..!
மருத்துவத் துறைகளில் இருப்பவர்களுக்கு மதிப்பு மேம்படும். மனதில் புதுவிதமான நம்பிக்கை உண்டாகும். வியாபாரத்தில் புதுவிதமான இலக்குகள் பிறக்கும். அலுவலகத்தில் உடன் பணிபுரிபவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். சொந்த ஊர் தொடர்பான பயண சிந்தனைகள் மேம்படும். உயர் அதிகாரிகளின் ஆலோசனைகள் புதிய மாற்றத்தை உண்டாக்கும். தேர்ச்சி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : சிவப்பு நிறம்
விசாகம் : மதிப்பு மேம்படும்.
அனுஷம் : இலக்குகள் பிறக்கும்.
கேட்டை : மாற்றம் உண்டாகும்.
தனுசு
தனுசு ராசிக்கான பலன்கள் ..!
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். கணவன், மனைவிக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். உழைப்பிற்கு உண்டான அங்கீகாரம் கிடைக்கும். வியாபாரத்தில் புதிய அனுபவம் ஏற்படும். தர்ம காரியங்களில் ஒருவிதமான ஈர்ப்பு உண்டாகும். சில பிரச்சனைகளுக்கு தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். இறை சார்ந்த பிரார்த்தனைகள் கைகூடும். அலைச்சல் நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்
மூலம் : தன்னம்பிக்கை அதிகரிக்கும்.
பூராடம் : அங்கீகாரம் கிடைக்கும்.
உத்திராடம் : பிரார்த்தனைகள் கைகூடும்.
மகரம்
மகர ராசிக்கான பலன்கள் ..!
மற்றவர்களிடத்தில் தனிப்பட்ட விஷயங்களை பகிர்வதை தவிர்க்கவும். குடும்பத்தில் அனுசரித்துச் செல்லவும். எதிலும் கோபமின்றி மற்றவர்களின் கருத்தை கேட்கவும். வழக்குகளில் சில திருப்பங்கள் ஏற்படும். வியாபாரத்தில் புதிய முயற்சிகளில் பொறுமை காக்கவும். உதாசினமான பேச்சுக்களை குறைத்துக் கொள்ளவும். அமைதி வேண்டிய நாள்.
அதிர்ஷ்ட திசை : வடமேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்
உத்திராடம் : அனுசரித்துச் செல்லவும்.
திருவோணம் : திருப்பங்கள் ஏற்படும்.
அவிட்டம் : கவனம் வேண்டும்.
கும்பம்
கும்ப ராசிக்கான பலன்கள் ..!
தம்பதிகளுக்குள் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் விலகும். தடைபட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். சகோதர வகையில் ஒத்துழைப்பு கிடைக்கும். வியாபாரத்தில் இருந்துவந்த மந்த நிலை விலகும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். போட்டித் தேர்வுகளில் சாதகமான முடிவுகள் கிடைக்கும். நன்மை நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : பழுப்பு நிறம்.
அவிட்டம் : கருத்து வேறுபாடுகள் விலகும்.
சதயம் : ஒத்துழைப்பு கிடைக்கும்.
பூரட்டாதி : சாதகமான நாள்.
மீனம்
மீன ராசிக்கான பலன்கள் ..!
பேச்சுக்களில் அனுபவம் வெளிப்படும். வழக்குகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும். எதிலும் சுறுசுறுப்பாக செயல்படுவீர்கள். ஆரோக்கியம் சார்ந்த பிரச்சனைகள் குறையும். நெருக்கடியான சூழல் உண்டாகும். புதிய விஷயங்களில் ஆர்வத்துடன் கலந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் ஆதரவாக செயல்படுவார்கள். பக்தி நிறைந்த நாள்.
அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்
பூரட்டாதி : அனுபவம் வெளிப்படும்.
உத்திரட்டாதி : பிரச்சனைகள் குறையும்.
ரேவதி : ஆதரவான நாள்.
இன்றைய நற் சிந்தனைகள்
விடாமுயற்சி
ஆசையில்லாத முயற்சியால் பயனில்லை. முயற்சியில்லாத ஆசையால் பயனில்லை.
உன்னிடம் மறைந்திருக்கும் ஆற்றல்களை வெளிக்கொணரும் வழி விடா முயற்சியும், தொடர்ந்த உழைப்புமே ஆகும்; வலிமையோ, புத்திசாலித்தனமோ அல்ல.- Sir Winston Churchill
நான் மெதுவாக நடப்பவன்தான்; ஆனால், ஒருபோதும் பின்வாங்குவதில்லை.
– Abraham Lincoln.
தினம் ஒரு திருக்குறள்
நாள்தோறும் திருக்குறள் படிப்போம், நடப்போம் அதன்படி, நல்லறம் வளர்ப்போம்
அதிகாரம் : படைச்செருக்கு
குறள் 775
விழித்தகண் வேல்கொண் டெறிய அழித்திமைப்பின்
ஒட்டன்றோ வன்க ணவர்க்கு.
மு.வ உரை:
பகைவரை சினந்து நோக்கியக் கண், அவர் வேலைக் கொண்டு எறிந்த போது மூடி இமைக்குமானால், அது வீரமுடையவர்க்குத் தோல்வி அன்றோ.
இன்றைய சிந்தனைக்கு
”யானெனும் செருக்கு மனிதர்க்குப் பகை”
‘நமக்குத்தான் அனைத்தும் தெரியும்’ என்ற செருக்குதான் மனிதனின் முதல் பகைவன், “எம்மால்தான்” அனைத்துமே இயலும், நான் அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியில்தான் முடியும்…
எந்த மனதில் ‘செருக்கு’ சூழ்ந்திருக்கிறதோ அங்கு சிக்கல்களும் இருக்கும். ’’நான்’’ அனைவரிலும் சிறந்தவன் என்ற இறுமாப்பு, இறுதியில் தோல்வியையே கொடுக்கும்…
மனிதனுக்கும் மனிதனுக்கும் இடையில் தடையாக இருப்பது இந்த ‘’நான்’’ எனும் செருக்குதான்… !
பணியிடமாகட்டும், மாமியார் மருமகள் உறவுகளாகட்டும், கணவன் மனைவிடையே ஆகட்டும், இங்கெல்லாம் உறவுமுறை கெடுவதற்கு இந்த கேடான எண்ணங்களே காரணம்…!
நண்பர்களிடையே பிரிவு நிகழ்வதும் இந்த எண்ணங்களினால்தான்…!
இன்று செயல்படுவோம், நாளை செயல்படுவோமா…? என்று நமக்குத் தெரியாது. இப்படியிருக்க, நமக்கு இந்த செருக்கு மிகத் தேவைதானா…? என்று சற்று ஆலோசிக்க வேண்டும்…!
ஆம் நண்பர்களே…!
‘நான்’, ‘எனது’ என்பது அறியாமை…!
‘நாம்,’ ‘நம்முடையது’ என்பது அறிவுடைமை…!!
?? நாம் வாழ்வில் முழுமையான நிலையினை அடைய விரும்பினால், ‘’நான்’’ எனும் செருக்கினை முழுமையாக அகற்றிவிடுவதே சாலச் சிறந்தது…!??
- தினசரி.காம்
ரிஷபம௠ராசி ரோகிணி நடà¯à®šà®¤à¯à®¤à®¿à®°à®®à¯ கடகà¯à®• லகà¯à®•à®©à®®à¯ பிறநà¯à®¤ தேதி
௨௦.௦௮.௧௯௮௫ நேரம௠காலை ௪.௩௦மà¯