பசும்பொன் தேவர் அய்யாவின் சமாதிக்கு தமிழக கட்சிகள் படையெடுப்பது வாக்குவங்கி ஒன்றுக்காக என்பது ஒன்றும் ரகசியமல்ல
உண்மையில் தேவருக்கு இருந்த அளவு மக்கள் செல்வாக்கு யாருக்குமில்லை,மிகபெரிய வரவேற்பு அவருக்கு இருந்தது.
சுதந்திரம் பெற்ற சலசலப்பில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்ததே தவிர தேவருக்கான வாக்குவங்கி பெருகிகொண்டேதான் வந்தது
காங்கிரஸை ஒழிக்கத்தான் அவர் சில இடங்களில் திமுகவினை ஆதரித்தார், அவர் காலம் முடிந்ததும் திமுக அந்த வாக்கு வங்கியினை தன்னோடு தந்திரமாக இணைத்தது உபயம் காமராஜர்
காமராசர் தன்னை மிகபெரிய ராஜதந்திரியாக எண்ணி செய்த காரியம் அவரையும் வீழ்த்தி, காங்கிரசுக்கும் சமாதி கட்டிற்று
1971ல் ராம்சாமி கோஷ்டி தமிழகத்தில் மிகபெரிய அளவில் தேச உணர்ச்சி பெருகுவதை அறிந்து வங்கப்போரில் பெருவெற்றி பெற்ற நேரம் தேசாபிமானம் வளர்வதை அறிந்து எரிச்சல்பட்டுத்தான் ராமர்ப்படத்தை செருப்பால் அடித்து மக்கள் கவனத்தை திருப்பியது
1965ல் பாகிஸ்தானுடன் வெற்றிபெற்ற நேரம் இந்தி எதிர்ப்பு கலவரம் செய்தார்கள் அல்லவா அப்படி
இந்த இந்துவிரோதம் பொறுக்கமுடியாமல் வேறு வழியின்றித்தான் எம்ஜி ராமசந்திரனை ஆதரித்தது தேவர் சமூகம், அதை மறுக்கமுடியாது
ராமசந்திரன் சக்கரவர்த்தியாய் முடிசூடி நிற்க தேவரின் வாக்குவங்கி அதாவது திமுகவுக்கு எதிரான வாக்குவங்கி மகா முக்கியம்
அதை அப்படியே கையில் எடுத்து அதேபோல் முடிசூட்டினார் ஜெயா
இந்த கணக்கு மிக எளிது, தேவரை கொண்டாடுவோருக்கு தேசவிரோத இந்துவிரோத திமுகவினை பிடிக்காது, திமுகவினை எதிர்ப்போருக்கு அந்த வாக்கு எளிதாய் சேரும்
இந்த அடிப்படை சூத்திரத்தில்தான் தேவர் குருபூஜைக்கு அதிமுக தலமைகள் ஓடின, சசிகலாவினை ஜெயா பகைக்கமுடியா காரணமும் இதுதான்
திமுக தலமை அலறிஅடித்து ஓடி விபூதி கொட்டி விளையாடுவதும் இதனால்தான்
இன்றும் அந்த தேவரின் இனம் தேசபற்றோடுதான் இந்து அபிமானத்தோடுதான் இருக்கின்றது, ஆனால் அதை கையில் எடுக்கும் வித்தை பாஜகவுக்கு தெரியவில்லை
உண்மையில் தேவர் கனவு கண்ட இந்தியா இதுதான், இன்றைய காங்கிரஸ் அல்லாத இந்து தேசிய ஆட்சியினைத்தான் அவர் விரும்பினார்
அதை பாஜகதான் கொடுத்திருக்கின்றது, இந்த உண்மையினை இன்னும் தேவர் பக்தர்களிடம் பாஜக சரியாக சேர்க்கவில்லை, அதை சரியாக செய்தால் இங்கே பாஜக எனும் தேசிய கட்சி எளிதாக அரியணை ஏறும்
காரணங்கள் இன்றி காரியம் இல்லை
அப்பழுக்கற்ற அந்த தேசாபிமான சிங்கம் சமாதியில் இருந்தபடி இங்கு தேசவிரோத இந்துவிரோத சக்திகளுக்கு சவால் விட்டுகொண்டேதான் இருக்கின்றது, அதை பாரத தேசிய கட்சிகள் சரியாக கண்டுகொண்டால் மிகபெரிய திருப்பங்கள் அரங்கேறும்
தேசாபிமானியின் வாரிசாக அண்ணாமலை அங்கு நாளை செல்லவேண்டும், அதற்கான முழு தகுதியும் உரிமையும் அவருக்குத்தான் இருக்கின்றது
அவர் கால்பட்டால் நிச்சயம் தேவரின் ஆன்மா மகிழும், அந்த மகான் கனவுகண்டதெல்லாம் இப்படிபட்ட தேசாபிமான இளஞ்சிங்கங்கள் இங்கு உருவாக வேண்டும் என்பது மட்டும்தான்
- ஸ்டான்லி ராஜன்
பசும்பொன் வழியில் பாரதம்..!
காலம் சில சத்தியவான்களை, பரிசுத்தமான தேசாபிமானிகளை, அப்பழுக்கற்ற தேசமகான்களை, சனாதான சீலர்களை அவர்கள் வாழும் காலம் ஒதுக்கிவைக்கும்
ஆனால் பின்னாளில் அவர்கள்தான் வரலாற்றில் நிகழ்ந்துவிட்ட பெரும் மோசடிக்கும், அன்று அதர்மக்காரர்கள் செய்த எல்லா சூதுக்களுக்கும், வஞ்சக திட்டங்களுக்கும் சாட்சிகளாய் நிற்பார்கள்
அவர்களை படிக்கபடிக்கத்தான் இத்தேசத்தில் எப்படிபட்ட வஞ்சகங்கள் நிகழ்ந்தன என்பதும், தேசம் அந்நியராலும் அவர்கள் அடிவருடிகளாலும் எப்படியெல்லாம் மோசடிக்குள்ளாக்கபட்டது என்பதும், சனாதான தர்மத்தையும் இந்த அருமையான பாரதத்தையும் ஒழிக்க நிகழ்ந்த சதிகள் பற்றியும் தெரிந்து கொள்ளமுடியும்
சாவர்க்கர், வ.உ.சி, பாரதி,நேதாஜி, வ.வே.சு அய்யர், நீலகண்ட பிரம்மச்சாரி என வெகுசிலர் அந்த கொடும் காலத்தின் சாட்சியாய் நிற்கின்றார்கள்
வாழும்பொழுது இவர்கள் ஒதுக்கபட்டு, விரட்டபட்டு பாராரிகளாக, ஒடுகபட்டவர்களாக, அந்நிய ஆட்சியில் தாழ்த்தபட்டவர்களாக அனாதைகளாக செத்தாலும், இந்த பிரபஞ்சம் அவர்களுக்கு காலத்தின் வாசலில் மிகபெரிய இடம் கொடுத்திருக்கின்றது
அவர்கள்தான் அன்றுநடந்த பல மோசடிகளை சொல்லிகொண்டே இருக்கின்றார்கள்
இன்றும் இத்தேசத்துக்கு எதுதேவை, எது தேவையில்லை? எக்குரல் எழவேண்டும், எக்குரல் அடங்க வேண்டும்? இந்தியாவின் தாத்பரியமும் மகோன்னதமும் என்ன? எதெல்லாம் இங்கு மீட்கபடவேண்டும் என ஒளிகொடுத்து வழிகாட்டி நிற்கின்றார்கள்
அன்று ஒதுக்கபட்ட இந்த மூலகற்கள்தான் வருங்கால இந்தியாவுக்கு அஸ்திபாரமாய் நிற்கின்றன
அந்த வரிசையில் வருபவர்தான் தென்னாட்டு நேதாஜி, பாண்டிநாட்டு சிங்கம் பசும்பொன் தேவர் அவர்கள்
அந்த தெற்கத்தி மகான் இன்றைய வலுவான இந்தியாவினை, தன் மரபிலும் கலாச்சாரத்திலும் மேலெழும் சக்திவாய்ந்த இந்தியாவினை 1940களிலே கனவு கண்டான்
காங்கிரஸ் ஒரு காலமும் இந்தியாவுக்கு நல்லது செய்யாது, அதன் அமைப்பும் தன்மையும் இயக்கமும் எக்காலமும் வெள்ளையனுக்கு ஆதரவானதே என முதலில் சொன்னவன் அவனே
காங்கிரஸ் இருக்கும் வரை இந்தியா தன் கலாச்சாரத்தை மீட்டெடுக்காது, இங்கு தேசியம் காக்கபடாது என முதலில் எச்சரித்தது அந்த பெருமகனே
ஓசையில் இருந்தே ஆபத்தை கணிக்கும் மான் போல, மோப்பத்திலே நீரை உணரும் யானை போல, கழுகின் நிழலிலே எச்சரிக்கை அடையும் முயல்போல அவன் அன்றே காங்கிரஸின் அயோக்கியதனத்தை எச்சரித்தான்.
அந்த மனிதர் முரண்பாடுகளின் உச்சமாக இங்கு செதுக்கபட்டார், சாதி வெறியன் என்றும், அடிப்படைவாதி என்றும் முத்திரை குத்தபட்டு தூற்றபட்டார்
ஆனால் பொய் ஊரை சுற்றிவிட்டு ஒதுங்கிவிட்ட நிலையில் உண்மைகள் மெல்ல வெளிவரும்பொழுது அந்தமனிதன் அதிசய பிறப்பு , ஒரு வரம் எனும் வெளிச்சம் பரவ ஆரம்பித்தாயிற்று
இன்று அவரை புரிந்துகொள்வது கொஞ்சம் சிரமம் அல்ல, சிரமமே அல்ல
இங்கு நடக்கும் தேசவிரோத குதர்க்க ஆட்டமும், இந்துக்களுக்கு நாடும் கிடையாது, உரிமையும் கிடையாது, அவர்கள் ஆலயமே அவர்களுக்கு சொந்தமில்லை, ஆலயம் அழியவேண்டும், சனாதானம் சரியவேண்டும், என பல சக்திகள் செய்யும் சதிதான் இங்கு தேவர் எவ்வளவு முக்கியமான தேசாபிமானி என்பதை சொல்ல வைக்கின்றது
வீழ்ந்துவிட்ட காங்கிரஸும், தேச விரோத இந்துவிரோத வெறுப்பில் உச்சத்தில் இருக்கும் திமுகவும் இப்பொழுது தேவரின் பெருமையினை உணர்த்தும்
இன்றைய மோடி அரசு தேவர் கண்ட “வலுவான இந்தியா, வளமான ஆன்மீகம் “என்பதை உணர்த்தும்.
தமிழகம் மட்டுமல்ல இந்தியாவின் மிக்பெரிய அடையாளம் பசும்பொன் முத்துராமலிங்க தேவர்
அந்த மிக சிறிய கிராமத்தில் பிறந்த அவர் இளமையிலே தாயினை இழந்தார், ஆனால் கல்வியிலும் நாட்டுபற்றிலும் முருபபெருமானின் கைபிடித்தும் வளர்ந்தார்
அதிகம் படித்ததில்லை தேவர், பத்தாம் வகுப்புவரைதான் படித்திருந்தார் ஆனாலு அற்புதமான பிறவி ஞானமும் ஆங்கில புலமையும் அவருக்கு இயல்பாய் வந்தது
அதைவிட அழகானது அவரின் தமிழ்
ஆம் அவரின் பேச்சின் அழகும், வன்மையும், நுட்பமும், அருவியென கொட்டும் தமிழும் அவர் ஒரு தனிபிறப்பு என்பதை சொன்னது
நாயன்மாரின் பக்தியும் , திருவாசகத்தின் வரிகளும், பாண்டியரின் வீரமும் கலந்த மொத்த உருவாக அவர் வலம் வந்தார்.
பெரும் நிலக்கிழாரான அவருக்கு ஆன்மீகமும் நாட்டுபற்றும் இருகண்களாயின
மிக சிறுவயதிலே பொதுவாழ்க்கைக்கு வந்தார். அந்த உணர்ச்சிகரமான பேச்சு அவருக்கு மிகபெரும் பலம், முதல் பேச்சே சாயல்குடியில் விவேகானந்தரை பற்றி 3 மணிநேரம் பேசிய பேச்சாய் இருந்தது
துண்டு சீட்டெல்லாம் இல்லை
பட்டுகோட்டை அழகிரி, வைகோ இன்னபிற திராவிட குஞ்சுகளுக்கெல்லாம் பேச்சுகலை எப்படி இருக்க்கவேண்டும் என சொல்லிகொடுத்ததே அவர்தான்.
ஆன்மீகம் அரசியலும் உலக அரசியலும் இயல்பாய் வந்து அவர் நாவில் முழங்கின
மிக முக்கியமானது முருகபெருமானின் பாடல்களும் சங்க பாடல்களும்
அவருக்கு 25 வயதாகும் பொழுது அவரின் பொதுவாழ்வு ஆரம்பிக்கின்றது , அதுவரை டி.எம் நாயர் போன்றோர் தனியாக போராடிகொண்டிருந்த குற்றபரம்பரை சட்ட எதிர்ப்பு போராட்டத்தை மிக தீவிரமாக முன்னெடுக்கின்றார் தேவர். அச்சட்டம் மகா கொடுமையானது, இந்தியா முழுக்க இருந்தெனினும் மதுரை பக்கம் அதிகமாய் இருந்தது
அச்சட்டம் பற்றி இன்னொருநாள் பார்க்கலாம், அச்சட்டத்தின் விளைவுகளில் ஒன்று குற்றபரம்பரை என சொல்லபடும் குடும்பம் எப்பொழுதும் காவலர் கண்முன்னே இருத்தல் வேண்டும், ஒருவகையான அடிமை நிலை, வேலை வெட்டி எல்லாம் இரண்டாம் பட்சம்
அச்சட்டம் அன்று நீக்கபடவில்லை எனினும் தேவர் கொடுத்த அழுத்தமே பின்னாளைய வெற்றிக்கு காரணம்
அதன் பின் காங்கிரஸில் இணைந்தார் தேவர், நாட்டுபற்றும் ஆற்றலும் கொண்டோர் காங்கிரஸில் இணைந்த காலமது.
நீதிகட்சி போன்றவை ஒருவித பிரிவினை கோஷ்டி, இந்துவிரோத கட்சி என்பதால் தேவர் அதில் இணையவில்லை,
குற்றபரம்பரை சட்டம் நீக்கபட்டதில் நீதிகட்சி முரண்பட்டது என்பது இன்னொரு காரணம்
பிரிவினைவாத பிரிவினை கட்சிக்கும் தேசியவாதியான தேவருக்கும் பொருந்தவில்லை அதுதான் பின்னாளைய சிக்கலுக்கு காரணம்
இந்நிலையில் 1937 தேர்தல் வந்தது, அது சொத்து உடையவரே வாக்களிக்க முடியும் எனும் காலம்
அதில் வெள்ளை அரசாங்கம் நீதிகட்சி பின்னால் இருந்தது. காங்கிரஸ் தேவரை கையில் எடுத்தது.
நீதிகட்சி ராமநாதபுர அரசர் சேதுபதியினையே களத்திற்கு கொண்டுவந்தது, ஆயினும் மன்னரை தோற்கடித்தார் தேவர்
ஆங்கில அரசும் நீதிகட்சியும் அரண்டு போன தருணமது, ராஜாஜி முதல்வரானார் அவரின் சிஷ்ய கோடிகளாக காமராஜரும் தேவரும் இருந்தார்கள், கோஷ்டி பூசல் என்பது காங்கிரசின் சாபம் அல்லவா? அதனால் காமராஜர் சத்யமூர்த்தி பக்கம் சென்றார்
தேவர் ராஜாஜி பக்கமே இருந்தார்
இந்நிலையில் ராம்சாமியும் நீதிகட்சியும் செய்யா ஒரு காரியத்தை சமூக சீர்திருத்ததை ஒரு பிராமணர் முன்னெடுத்தார் அவர் பெயர் வைத்தியநாத அய்யர்
ஆம் மதுரை ஆலயத்தில் தாழ்த்தபட்டோரும் நுழையவேண்டும் என போராடியவர் அவர்தான், ஆனால் அய்யர் அல்லவா பெரும் மக்கள் சக்தி இல்லை, இந்த இடத்தில் தன் படையோடு வந்த தேவர் அய்யருக்கு பலமாக நின்று அம்மக்களை உள்ளே செல்ல அனுமதித்தார், பெரும் சாதனை அது.
தாழ்த்தபட்டோருக்கான உரிமையினை அவரே பெற்று கொடுத்தார், (அந்த தேவரைத்தான் பின்னாளில் தாழ்த்தபட்டோர் எதிரி என முத்திரை குத்தியது காமராஜரின் காங்கிரஸ், மிக பெரிய அநீதி அது)
தொழிலாளர்களுக்கான தமிழக தலைவராக விளங்கியவரும் அவரே, வ.உ.சிக்கு பின் அந்த இடம் அவருக்குத்தான் வந்தது
இந்த தலித் புரட்சியாளர்கள், திராவிட வீரர்கள் யாரும் தொழிலாளர் தலைவனாக அக்காலத்தில் இருந்ததே இல்லை. காரணம் அவர்கள் ஏரியாவே மத பிரிவினை தேசபிரிவினை என்றேதான் இருந்தது
பசுமலை ஆலை தொழிலாளர் கூட்டமைப்பு முதல் டிவிஎஸ் தொழிலாளர் கூட்டமைப்பு வரை தேவரே நடத்தி அவர்களுக்கான உரிமையினை பெற்றும் கொடுத்தார்
காங்கிரஸில் பெரும் இளம்தலைவராக அவர் வளர்ந்தபொழுதுதான் திரிபுரா மாநாட்டில் நேதாஜிக்கும் காந்திக்கும் முட்டிகொண்டது. நேதாஜி காங்கிரஸில் இருந்து விரட்டபட்டார். முழு தேசியவாதியான நேதாஜியுடன் தயக்கமே இல்லாமல் வெளிவந்தார் தேவர்
நேதாஜியினை மதுரைக்கு அழைத்து வந்து பெரும் மாநாடு நடத்தியதெல்லாம் தேவரின் முத்திரைகளில் ஒன்று
நேதாஜிக்கு தமிழகம் முழு பலமாய் இருக்க தேவர் முதல் காரணம்
அதன் பின் உலக யுத்தம் தொடங்கியது, நிலமையினை கண்காணித்த வெள்ளை அரசு காங்கிரஸ் ஒத்துழைப்புடன் தேவரை சிறையில் தள்ளியது, உலகமும் இந்தியாவும் மொத்தமாக குழம்பிய காலத்தில் நேதாஜி பர்மாவில் இருந்து போராடிய காலத்தில் தேவர் சிறையிடபட்டார்
காங்கிரஸ் அதை கண்டிக்க கூட இல்லை.
1946ல் விடுதலையானார் தேவர், அப்பொழுது நேதாஜி இல்லை மாறாக அப்பொழுது நடந்த சென்னை மாகாண தேர்தலில் அமோக வெற்றிபெற்றார், அதன் பின்பே குற்றபரம்பரை சட்டம் முழுவதுமாக ஒழிந்தது
1949ல் தீவிர அரசியலுக்கு வந்தார் தேவர், தனி மனிதனாய் காங்கிரஸை அன்றே எதிர்த்து கடும் தேசபற்று பேசினார், அவருக்கு பின் 1979ல் மொரார்ஜி பேசினார், அதன் பின் பாஜகதான் பேசிற்று
சுதந்திர இந்தியாவில் முதன் முதலில் காங்கிரஸின் தேசவிரோத செயல்கள் சிலவற்றை துணிச்சலாக பேசியவர் தேவர், அவர் வழி வந்தவர்தான் மோடி
காங்கிரஸையும் அதே நேரம் அழிச்சாட்டிய திராவிட கும்பலையும் ஒருசேர கண்டித்தவர் தேவர். அதில் நாட்டுபற்றும் மத அபிமானமும் கலந்திருந்தது
தேவரின் சொற்படி கேட்டிருந்தால் காஷ்மீர் சிக்கல் இந்த அளவு வந்திருக்காது, சீனாவுடனான நிலை இந்த அளவு மோசமாயிராது, நாட்டுபற்றில் அவர் சொன்ன கருத்துக்கள் எதுவும் காங்கிரஸின் காதுகளுக்கு எட்டவில்லை
பாராளுமன்றத்தில் காங்கிரஸை எதிர்த்து, நேருவின் பைத்தியகார சர்வாதிகார முடிவினை எதிர்த்து முதலில் முழங்கியது அவர்தான்
அதுதான் காங்கிரஸை எதிர்த்து முழங்கி நாட்டுபற்றில் பாராளுமன்றம் கண்ட முதல் குரல், காஷ்மீர் பற்றியும் சீனா பற்றியும் பாகிஸ்தான் பற்றியும் பேசிய முதல் குரல் அவர்தான்
அந்தவழி வந்துதான் இன்று சிங்கமென அமர்ந்திருந்து நாட்டுக்கு மகத்தான காரியங்களை செய்யும் அமித்ஷா & கோ
இதை அன்றே சொன்னவர்தான் தேவர்
தேவரின் பலம் தேர்தல் தோறும் தெரிந்தது, ராமநாதபுரம் முதல் தேனிவரையிலான பகுதி அவரின் கோட்டையாக திகழ்ந்தது, திராவிட கழகமோ காங்கிரசோ அப்பக்கம் வரமுடியவில்லை, எனினும் வேறு பகுதியில் குறிப்பாக காவேரி கரைகளில் வட தமிழ்நாட்டில் திராவிட கழகத்தின் வளர்ச்சி காங்கிரஸின் கோட்டையினை லேசாக அசைத்தது, தலித்துகளை வளர்க்கும் நிலைக்கு காங்கிரஸ் ரகசியமாக இறங்கியது
இந்நிலையில்தான் முதுகுளத்தூர் கலவரம் நிகழ்ந்தது, இம்மானுவேல் சேகரன் கொலை எல்லாம் நிகழ்ந்த கொடும் காலங்கள் அவை, தேவரை முதல் குற்றவாளியாக்கினார்கள்
மதுரை ஆலயத்தில் தலித் நுழைய போராடிய, தன் நிலங்களை எல்லாம் தலித்துகளுக்கு பிரித்து கொடுத்த, தலிதுக்கள் தொழிலாளராய் இருந்த தொழிற்சாலைகளிலெல்லாம் அவர்களுக்கு உரிமை பெற்றுகொடுத்த தேவர் அந்த கொலையில் குற்றம்சாட்டபட்டதில் அரசியலும் இருந்தது
காங்கிரஸின் எதிரி என்றும் இன்னும் பல காரணங்களுக்காக அந்த கைது நடந்தது, அவர் தீவிர இந்துமதவாதி என்பதும் கூடுதல் காரணம். ஆனால் ஆதாரமே இல்லை என விடுதலை செய்யபட்டார் தேவர்
அதன் பின் காங்கிரஸ் ஆட்சியினை ஒழிக்க காமராஜரின் எதிர்கள் எல்லாம் ஒன்று கூடினர், சூத்ரதாரியாக ராஜாஜி இருந்தார், திமுக வந்தது , அப்பொழுது ராஜாஜி ஒரு பார்ப்பான் என்பது அவர்களுக்கு மறந்தே விட்டது.
தேவரும் தேசாபிமானியான ராஜாஜிக்காக ஆதரவு தெரிவித்தார்
காங்கிரஸ்தான் தேச ஆபத்து என அவர் கருதினார், திமுகவினை அவர் ஒரு பொருட்டாக அன்று கருதவில்லை
நாட்டுபற்றிலும் ஆன்மீகத்திலும் விவேகானந்தார் போல் திகழ்ந்தார், 1963ல் இதே அக்டோபர் 30ல் அவரின் அவதார தினத்திலே மறைந்தார்
தேவரின் வாழ்வினை கவனித்தால் பல நல்ல விஷயமும் தெரியும்
அவர் அப்பழுக்கற்ற தேசியவாதி அதைவிட அற்புதமான முருக பக்தர். முதன் முதலில் பாராளுமன்றத்தில் ஆங்கிலத்தில் முழங்கிய தமிழன் அவர். திராவிட இம்சைகளின் முழக்கமெல்லாம் அந்த தேசியவாதி முன் நிற்கமுடியாது
அவரின் நாட்டுபற்று வணங்கதக்கது அஹிம்சை மற்றும் ஆயுதவழி என இரண்டுக்குமே முன்னால் நின்ற பெருமகன் அவர்
மத பாகுபாடு அவர் கண்டதில்லை, இஸ்லாமிய மக்களுடன் வளர்ந்ததால் கடைசிவரை அந்த நல்லுறவு நீடித்தது. அன்றிருந்த இஸ்லாமியரின் மனநிலையும் அதற்கு சரியாக இருந்தாது.
சாதி அபிமானம் அவருக்கு இருந்ததில்லை இருந்திருந்தால் தாழ்த்தபட்டோர் ஆலய நுழைவு, தொழிலாளர் சிக்கல் போராட்டம் செய்திருக்கமாட்டார் மற்றும் தன் சொந்த நிலத்தை எல்லாம் கொடுத்திருக்க மாட்டார்.
அவரின் வாழ்வு சொல்வது ஒன்றே ஒன்றுதான்
அவரின் அர்பணிப்பான நாட்டுபற்றுக்கும் மகா சுத்தமான இந்து மத அபிமானத்துக்குமே அவர் குறிவைக்கபட்டார்
காங்கிரஸின் சில மர்ம நடவடிக்கைகளை கேள்வி கேட்டதால் காங்கிரஸும், பிரிவினை மற்றும் நாத்திக இம்சைகளை கண்டித்ததாலும் ஒரு மாதிரி சர்ச்சை பிம்பம் அவர்மேல் சூட்டபட்டது, வாக்கு அரசியல்,பிரிவினை அரசியல் என ஏகபட்ட சூழ்ச்சி அதில் உண்டு
ஆம் வஞ்சக திட்டமே அவர்மேல் பழியாய் சுமத்தபட்டது, ஒரு தேசாபிமானியை மத அபிமானியாய் முடக்க வேண்டும் என்ற திட்டத்துடனே சுமத்தபட்டது
ஆனால் முருகபெருமான் தேவரோடே இருந்தார்
ஆம், தேவரின் வீழ்ச்சிக்கு பின் காங்கிரஸும் வீழ ஆரம்பித்தபொழுதுதான் தன் அஸ்திவாரத்தையே இழந்ததை காங்கிரஸ் உணர்ந்தது.
பிரிவினைவாத திமுக தேவரை மிக தந்திரமாக பயன்படுத்திவிடு தூர எறிவதை பார்த்து முருகபெருமான் சிரித்துகொண்டிருந்தது பலருக்கு அன்று தெரியவில்லை பின்பு தெரிந்தது
ஆம் இன்னொரு முருகபெருமானின் பக்தனான ராமசந்திரன் அந்த திண்டுக்கல் இடைதேர்தலில் மாய தேவர் என்பவரை முன்னிறுத்தி மாயவேலைகள் செய்து வென்றபொழுது தேவரின் மகத்துவம் புரிந்தது
ஆளாளுக்கு தேவரின் சமாதி நோக்கி ஓடினார்கள், மண்டியிட்டார்கள்
ஆம் தேவரின் தேசபற்றும் மதஅபிமானமும் மகா உண்மையாய் இருந்திருக்கின்றது, இன்றும் தமிழக அரசியலில் முக்கிய இடம் வகிப்பது அவர் உருவாக்கி வைத்த அஸ்திவாரமே
இது பொய்யென சொல்வீராயின் திமுக தலமைகள் அங்கு ஓடுவது ஏன்?
காலம் கடந்து உணரபட்டிருக்கின்றார் அவர், இன்றும் பாருங்கள் அவரின் அடிப்பொடிகள் தேசவிரோதம் பேசாது, மத வெறுப்பு பேசாது, இந்துமதத்தை கண் என காத்து நிற்கும்
ஆனால் அவர் வாழ்நாளெல்லாம் எதிர்த்த காங்கிரஸ், நீதிகட்சி தொடங்கி வைத்த திராவிட மற்றும் இதர போராட்டவாதகுழுக்கள் பேசுவெதெல்லாம் பிரிவினைவாதமும் மத துவேஷமும்
ஆக அன்றே மிக சரியான பாதை கண்டிருக்கின்றார் பசும்பொன் சிங்கம்
வெளுத்துவிட்ட காங்கிரஸ் சாயம், வாக்குக்காக பழனிக்கும் காவடி தூக்கும் திராவிட இம்சைகள், பிரிவினையும் இந்துமத வெறுப்பும் கக்கும் போராளிகள் என இன்றைய காட்சிகளை காணுங்கள் தேவரின் தனித்துவம் புரியும்
இன்று காணும் பாஜகவினை அன்றே கனவு கண்ட மனிதன் அவன் என்பது புரியும்
இன்று நிச்சயம் அம்மனிதனே வென்றிருக்கின்றான், நாடும் தமிழகமும் அவன் கண்ட பாதையிலேதான் நடைபோடுகின்றன, அவரின் மாபெரும் வெற்றி இது
அதை எங்கும் அழுத்தமாக சொல்லலாம், சந்தேகமில்லை. அம்மகான் கண்ட பாரதம் இதுதான்.
இன்று அவர் இருந்திருந்தால் அவரும் அவர்கள் பாஷையில் சந்தேகமில்லாமல் சங்கியே, அது அவருக்கு பெருமை, சங்கிகளுக்கும் பெருமை..
அம்மனிதன் கடைசிவரை உண்மையான முருக பெருமான் அடியானாய் வாழ்ந்தான் இறந்தான்,
வாக்குக்காகவும் பதவிக்காகவும் தன்நிலை தாழ்த்திகொண்டவன் அல்ல. அவன் தூய இந்துவாய் வாழ்ந்தான், அதுதான் அவனை வழிநடத்தியது, எல்லா சிக்கலில் இருந்தும் காத்தது
அவரை சரித்தால் இங்கு இந்துமதம் சரியும், சாதிய சிக்கல் குழப்பம் வரும் என பல கணக்குகளில் திட்டமிட்டுத்தான் கனைகளை பாய்ச்சினார்கள்,
ஆனால் ஒரு சக்தி அம்மனிதரை காத்து நின்றது, இன்றும் என்றும் அவனுக்கோர் தனி இடம் கொடுத்திருப்பதும் அந்த முருகபெருமானே.
தான் வாழ்ந்த வரையில் வருடாவருடம் ஒரு சகோதரனாய் வாஞ்சியின் விதவை மனைவிக்கு வாஞ்சிநாதன் நினைவுநாளில் பணமும் வெள்ளை சேலையும் தட்டில் வைத்து கொடுத்து அவள் காலில் விழுந்து வணங்கிய தேவரின் குணம் கண்ணீர்சிந்த வைக்கும் நினைவுகள்
வடக்கன்குள கிறிஸ்தவ ஆலய சாதி சண்டையில் ராம்சாமி கள்ள மவுனம் காக்க, அங்கு தலையிட்டு அமைதி ஏற்பட பாடுபட்ட தேவரின் அந்த உண்மையான சாதி ஒழிப்பு எக்காலமும் நினைவில் நிற்பது.
தூய இந்து என்பதற்காகவும் அப்பழுக்கற்ற நாட்டுபற்றாளன் என்பதற்காகவுமே அம்மனிதன் குறிவைத்து தாக்கபட்டான் விரட்டபட்டான் பல சர்ச்சை பெயர்கள் சூட்டபட்டான் என்பதை தவிர வரலாற்றில் ஒன்றுமில்லை..
திருநீறு பூசிய அந்த கம்பீர முகமும், அந்த மகான் காட்டிய யோக நிலையும் ஒரு பரிபூரண இந்துவாக அவன் காட்டிய பெருவழியும் ஒரு காலமும் மறக்கமுடியாதது, அந்த வழிதான் இன்று தமிழகத்துக்கு அவசியம், மிக அவசியம்
காமராஜர் நல்லவர்தான் ஆனால் அவர் திருநீறு பூசியோ இல்லை ஆலயம் சென்றோ யாராவது பார்த்ததுண்டா? இந்து ஆலயம் பற்றி சனாதான தர்மம் பற்றி அவர் கவலைபட்டதுண்டா?
அங்கே இஸ்லாமியருக்கு நாடு கொடுத்து இத்தேசத்தை பிரிக்கும்பொழுது இங்குள்ள இந்துக்களுக்கு என்ன எதிர்காலம் என அவர் கேட்டதுண்டா?
காமராஜர் கேட்க தவறியதையெல்லாம் தேவர் கேட்டார் முழங்கினார் என்பதுதான் கவனிக்கதக்கது
இதையெல்லாம் சிந்தித்தால் காமராஜருக்கும் தேவருக்குமான மோதலின் தொடக்கபுள்ளியும், முதுகுளத்தூர் கலவரமும் இன்னும் பல சர்ச்சைகளின் உண்மை முகமும் தெரியும்
அந்த அப்பழுக்கற்ற தேசியவாதிக்கு, மத நல்லிணக்கம் பேணிய மாமனிதனுக்கு, சாதிகளை கடந்து எல்லோரையும் அரவணைத்த நல்லவருக்கு, தென்னாட்டு வீரதுறவிக்கு இறுதிவரை பிரம்மச்சாரி கோலம் பூண்டு மகா சன்னியாசனான முருகபெருமானின் அடியவராய் வாழ்ந்து சென்ற அந்த மகானுக்கு ஆழ்ந்த அஞ்சலிகள்..
“பாகிஸ்தான் கேட்டவனும் முட்டாள், அதை கொடுத்தவன் அவனை விட முட்டாள்” என மிக தீர்க்கதரிசமான உண்மையினை கம்பீரமாக சொன்ன அந்த தெய்வ திருமகனுக்கு எத்தனை குருபூஜைகள் நடத்தினாலும் தகும்.
தேசியம் தெய்வீகமும் இந்த நாட்டின் கண்கள் என காத்து நின்ற தென்னகத்து வீரசிவாஜி அப்பெருமகன், அவனை தொழ தொழத்தான் இங்கு தேசியமும் தெய்வீகமும் மலரும்
ஆம், அந்த ஞானதிருமகனை வீரபெருமகனை தமிழரின் தனிபெரும் தலைமகனை வணங்காமல் அந்த மகானின் ஆசியில்லாமல் இங்கு தேசியமில்லை இந்துமதம் இல்லை
தமிழகம் அந்த தெய்வமகனை வணங்கட்டும், நலம்பெறட்டும்
தேவரின் சாயலில் இன்று எழும் இளஞ்சிங்கம் அண்ணாமலை பசும்பொன் சென்று அந்த பெருமகனின் ஆசியினை பெறட்டும், அந்த ஆசியில் தேவர் கண்ட கனவெல்லாம் இங்கு நனவாகட்டும், தேசியமும் தெய்வீகமும் உணவும் சுவாசமுமாக தமிழரில் கலக்கட்டும்