― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeசினிமாசினி நியூஸ்என்னடா இது அநியாயமா இருக்கு? குலதெய்வம் கோவிலுக்கு போகக் கூடாதாடா?

என்னடா இது அநியாயமா இருக்கு? குலதெய்வம் கோவிலுக்கு போகக் கூடாதாடா?

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல பிரபலங்களுடன் இணைந்து நடித்து முன்னணி காமெடி நடிகராக கொடிகட்டி பறந்தவர் நடிகை வடிவேலு.

இவர் எந்த காலத்திலும் எவராலும் அழிக்க முடியாத மாபெரும் இடத்தை மக்கள் மனதில் பிடித்துள்ளார். இந்நிலையில் ஒரு சில காரணங்களால் சினிமா துறையிலிருந்து விலகி இருந்த வடிவேலு தற்போது மீண்டும் கமல்ஹாசனுடன், தலைவன் இருக்கின்றான் என்ற படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது.

இந்நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் என்பவர் சமீபத்தில் வடிவேலின் உதவியாளர் மணிகண்டன் உட்பட 3 பேரின் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எலி படத்தினால் எனக்கு 14 கோடி நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக அவர் இரண்டு படங்களில் நடித்து தருவதாக கூறியிருந்தார்.

இந்நிலையில் வடிவேலுவின் உதவியாளர் மணிகண்டன் 2 பேருடன் வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்டனர். மேலும் அவரது உறவினர்கள் சம்பள பாக்கி இருப்பதாக மிரட்டல் விடுகின்றனர் என கூறியுள்ளார்.

வடிவேலுவும் தலைமறைவாக இருப்பதாகவும் வெளியானது.
இந்நிலையில் இதனை வடிவேலு மறுத்துள்ளார். மேலும் தான் தலைமறைவாகவில்லை எனவும் குடும்பத்துடன் குலதெய்வ கோவிலுக்கு சென்றதாகவும் கூறியுள்ளார்.

என்னைக் களங்கபடுத்தவும் எனது எதிர்காலத்தை வீணாக்கவும் இப்படி குற்றம்சாட்டுகின்றனர் எனவும் வடிவேலு கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version