சினிமாவில் நடிகைகள் இணங்கி சென்றால்தான் வாய்ப்புகள் கிடைக்கும் என்றும், இந்த நிலையில் அனைத்து துறைகளில் இருந்தாலும் மற்ற துறைகளில் பெண்கள் ஏமாற்றப்படுவார்கள் என்றும், ஆனால் திரையுலகில் இண்ங்கி சென்றாலும் வாய்ப்புகள் கிடைக்கும் என்று கூறியுள்ளார்.
சர்ச்சைக்குரிய இந்த கருத்துக்கு சரோஜ்கானுக்கு பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர். இருப்பினும் ஒருசிலர் திரையுலகில் நடக்கும் உண்மைகளைத்தான் சரோஜ்கான் கூறியுள்ளார். திரையுலகில் எந்த நடிகையும் பலாத்காரம் செய்யப்படுவதில்லை என்றும் நடிகைகள் ஒப்புக்கொண்டே பாலியலுக்கு சம்மதிப்பதாகவும் ஒருசிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
சரோஜ்கானின் இந்த கருத்துக்கு நடிகை ஸ்ரீரெட்டி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். ஒரு பெண்ணிடம் இருந்தே இப்படி ஒரு கருத்து வெளிவரும் என்று தான் எதிர்பார்க்கவில்லை என்றும், அவர் மீது நான் வைத்திருந்த அளவுகடந்த மரியாதை நொறுங்கிவிட்டது என்றும் கூறியுள்ளார்.