உன்னிடம் வேண்டுகோளாகவும், பிரார்த்தனையாகவும் வைக்கிறேன்
உலகையே நாளுக்கு நாள் அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரானோ வைரஸை எப்படி ஒழிப்பது என நாடுகள் திணறிக் கொண்டிருக்கின்றன. கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை பல நாடுகள் எடுத்து வருகின்றன.இந்தியாவில் நேற்று இரவு 9 மணிக்கு 9 நிமிடம் மக்கள் வீட்டில் விளக்கேற்ற வேண்டும் என்ற வேண்டுகோளை ஏற்று பலரும் ஏற்றினார்கள்.

சினிமா பிரபலங்களில் ஒரு சிலர் மட்டுமே அதைச் செய்தார்கள்.நடிகை நயன்தாரா விளக்கு ஏற்றிய புகைப்படத்தைப் பதிவிட்டு அவருடைய காதலர் விக்னேஷ் சிவன் கொரானோவுக்கு ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளார்.”டியர் கொரோனோ, கடவுளுக்காக எங்களது பிரார்த்தனையாக மட்டுமே இதைச் செய்வோம். ஆனால், இப்போது உனக்காகச் செய்கிறோம்.
, எங்களை பழையபடி வர வழிவிடு. கொரோனாவே போ, கொரோனாவே கொஞ்சம் கருணை காட்டு, தயவு செய்து போய்விடு,” என வேண்டுகோள் விடுத்துள்ளார்.


