சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.
கொரோனா தாக்கம் உலகம் முழுக்க இருக்கும் நிலையில், இனி திரைப்படங்களில் முத்தக்காட்சிகளை எப்படி படமாக்குவது என பிரபல பாலிவுட் இயக்குநர் சூஜித் சிர்கார் கவலை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், முக்கியமான முத்தம் மற்றும் கட்டியணைக்கும் காட்சிகளை இனி எப்படி படமாக்கப் போகிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு நடிகை தியா மிர்சா, காலம் தான் பதில் சொல்லும் என தெரிவித்துள்ளார்.
முத்தக்காட்சிகள் மட்டுமல்லாமல் படப்பிடிப்புகளில் எல்லாப் பணிகளுமே நெருக்கமாகத்தானே நடக்கும் என்றும், ஒரு காட்சியை உருவாக்க அனைவரும் இணைந்துதான் பணியாற்ற வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.