அளவுக்கு அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார்
கடந்த 2016- ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் தமிழ்நாடு சவுத் பட்டம் பெற்றவர் தமிழ்செல்வி என்கிற மீரா மிதுன். இவர் சூர்யாவின் தானா சேர்ந்த கூட்டம் மற்றும் 8 தோட்டாக்கள் உள்ளிட்ட படங்களிலும் துணை நடிகையாக நடித்துள்ளார்.

தனியார் டிவி ஒன்றின் பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளே நுழைந்தார். மாடலிங் துறையில் மோசடி செய்ததாக இவர் மீது காவல்துறையில் புகார்கள் உள்ள நிலையில் பிக்பாஸ் வீட்டையும் பரபரப்பாகவே வைத்திருந்தார். மேலும் பிக்பாஸ் வீட்டில் அனைவரிடமும் வாக்கு வாதத்திலும் ஈடுபட்டு வந்தார்.

ஒரு டாஸ்க்கின் போது சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று இவர் வைத்த குற்றச்சாட்டு அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. அப்போது சேரன் உடைந்து கண்ணீர்வடித்தார். இதைக் கண்ட பிக்பாஸ் பார்வையாளர்கள் அவருக்கு எதிராக வாக்களித்து வெளியேற்றினர். வெளியேறும்போது கூட அவர் சேரன் மீது பழிசுமத்தினார்.

கொலை மிரட்டல் ஆடியோ, பரபரப்பான வீடியோ என்று தொடர்ந்து செய்திகளில் அடிபட்ட மீரா மிதுன் பட வாய்ப்புகளுக்காக இப்படி நடந்துகொள்வதாக கூறப்பட்டது தற்பொழுது அளவுக்கு அதிகமான கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார் அதனை நெட்டிசன்கள் திட்டி கமெண்ட் செய்து வருகின்றனர் தற்பொழுதும் அவர் நான் ஒரே நேரத்தில் கவர்ச்சியாகவும் கடினமாகவும் இருப்பது வேடிக்கையாக உள்ளது என கேப்ஸன் இட்டு வெகு கவர்ச்சியான உடையணிந்தபடி புகைப்படம் வெளியிட்டுள்ளார் இதில் ட்ரென்ஸ்பரண்டாக ஒரு ட்ரஸ் அணிந்துள்ளார் இதற்கு பல்வேறு கமெண்ட் கொடுத்துள்ளனர் நெட்டிசன்ஸ்.
I have fun being sexy and tough at the same time ? pic.twitter.com/ZBSf3zD3rB
— Meera Mitun (@meera_mitun) April 23, 2020


