காந்தி கொலையும் பின்னணியும் (பகுதி 85): நடிகையின் சாட்சி!

40 Nathuram - 2026

அதே ரெயிலில்,சில பெட்டிகள் தள்ளி இரண்டாம் வகுப்பில் ஆப்தேயும் ,நாதுராமும் இருந்தனர். அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு சில பயணிகளே இருந்தனர். ஜன்னல் ஓரமாய் ,எதிரெதிரே இருவரும் அமர்ந்துக் கொண்டனர். திகம்பர் பாட்கே,மாறுவேடத்தில் பயணித்தார்.

ஆனால் ஆப்தேயும்,நாதுராமும் எந்த வித கவலையோ,அச்சமோ இல்லாமல்,தங்கள் அடையாளத்தை மறைக்காமல் இருந்தனர். அப்போது,அந்த கம்பார்ட்மெண்டில் ஒரு அழகிய பெண் இங்கும் அங்குமாய் அலைந்துக் கொண்டிருந்தார்.அந்த பெண்மணி ஜன்னல் ஓர இருக்கையை தேடி அலைவது ஆப்தேயிற்கு புரிந்து விட்டது.

ஆப்தே எழுந்து தன் இருக்கையை அந்த பெண்மணிக்கு அளித்து விட்டு எதிர்புறம்,நாதுராம் அருகே அமர்ந்துக் கொண்டார். ரெயில் புறப்பட்டவுடன்,அந்த பெண்மணியிடம் பேச்சு கொடுத்தார் ஆப்தே. அந்த பெண்மணி பிரபல சினிமா நடிகை பம்பாதானே என்று கேட்டார் ஆப்தே.

’’ ஆம் அதுதான் என் சினிமா பெயர் ‘’ என்று பதிலளித்தார் பம்பா. தொடர்ந்து பம்பாவுடன் பேசியப்படியே பயணித்தார் ஆப்தே. நாதுராம் தன் வழக்கமான சுபாவத்துடன் மெளனமான அமர்ந்திருந்தார்.

ரெயில் பம்பாய் புறநகர் பகுதியான தாதரை அடைந்தவுடன்,அங்கே இறங்குவதற்கு தயாரானார்கள் ஆப்தேயும்,நாதுராமும். பம்பாவும் அங்கே இறங்குவதைக் கண்ட ஆப்தே,பம்பாவை அவருடைய இருப்பிடத்தில் கொண்டு விடவா என்று கேட்டார்.

ALSO READ:  ஒரு விருது அறிவிப்பு; சரித்திரம் கண்டிராத சர்ச்சை!

ஆனால் பம்பாவை அழைத்துச் செல்ல அவருடைய அண்ணன் அங்கு வந்திருந்தார். தான் சிவாஜி பார்க் அருகில் வசிப்பதாகவும்,சாவர்க்கரின் இல்லமான சாவர்க்கர் சாதனுக்கு அடுத்த வீடுதான் தன் வீடு என்றும்,ஒரு வேளை அங்கு எங்காவது போக வேண்டியிருந்தால் ,அவர்களை அங்கு இறக்கி விடுவதாக பம்பா கூறினார்.

ஆப்தேயும்,நாதுராமும் பம்பாவின் காரிலேயே பயணித்தனர். பம்பாவுடன் பயணிப்பதற்கு ஆப்தேதான் காரணம் என்று கூறவும் வேண்டுமா !

உண்மையில் கூற வேண்டுமானால்,அவர்கள் போக வேண்டிய ஹிந்து மஹா சபா அலுவலகம்,சாவர்க்கர் இல்லத்திலிருந்து அரை மைல் தொலைவில் இருந்தது. ஆனால் தேவையே இல்லாமல் பம்பாவுடன் பயணித்தார் ஆப்தே.உடன் நாதுராமும்.

பம்பா,அவர்களை சாவர்க்கர் வீட்டு வாசலில் இறக்கி விட்டுச் சென்றார்.ஆனால் அவர்கள் சாவர்க்கர் வீட்டிற்குள் நுழைந்தார்களா இல்லையா என்று கவனிக்கவில்லை.

இந்த பயணத்தின் காரணமாக,தனக்கு எதிராக ஒரு சாட்சியை உருவாக்கினார் ஆப்தே என்றே கூற வேண்டும். அது மட்டுமில்லாது,சாவர்க்கருக்கு எதிராக சாட்சியம் உருவாகவும் காரணமானார்.

ஆப்தேயும்,நாதுராமும் என்ன திட்டமிடுகிறார்கள் என்பதே சாவர்க்கருக்கு தெரியாது. ஆனால் காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது சாட்சியாக விசாரிக்கப்பட்ட அந்த நடிகை பம்பா, ஒரு தடாலடி நபரையும்,அவருடன் அதிகம் பேசாத ஒருவரையும்,சாவர்க்கர் வீட்டு வாசலில் இறக்கி விட்டதாக வாக்குமூலம் அளித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : மேகாலயா

இந்த சாட்சியம்,காந்தி கொலைக்கான சதித்திட்டத்தின் மூளையே சாவர்க்கர்தான் எனும் போலீஸின் வழக்கிற்கு வலுச் சேர்த்தது. நடிகை பம்பாவுடனான இந்த கார் பயணத்தின் காரணமாக,தாங்கள் பாட்கேயை சந்திப்பதாகச் சொல்லி இருந்த ஹிந்து மஹா சபாவை அடைவதற்கு இரவு 8.30 மணி ஆகி விட்டது.

நடிகை பம்பாவுடனான எதிர்பாரா சந்திப்பை பற்றியும்,தங்களை சாவர்க்கர் வீட்டிற்கு அருகே பம்பா இறக்கி விட்டது பற்றியும், ஆப்தே ,திகம்பர் பாட்கே மற்றும் சங்கர் கிஷ்டய்யாவிடமும் கூறியதின் காரணமாக அவர்களுக்கும் அந்த சந்திப்பை பற்றி தெரிந்து போனது.

அதுவும்,காந்தி கொலை வழக்கு விசாரணையின் போது ஆப்தேயிற்கும்,நாதுராமிற்கும் எதிராகப் போனது.

( தொடரும் )

#காந்தி கொலையும் பின்னணியும்

  • எழுத்து: யா.சு.கண்ணன்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories