― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஉரத்த சிந்தனைஒரே நூற்றாண்டில் ஜிகாதிகள் சீரழித்த காஷ்மீரம்

ஒரே நூற்றாண்டில் ஜிகாதிகள் சீரழித்த காஷ்மீரம்

- Advertisement -

தொலைந்து போன ஸ்வர்கத்தைப் பற்றிய ஒரு பார்வை..!

இந்தப் படம் ஶ்ரீநகரில் (காஷ்மீர்) உள்ள ஸீலம் நதிக்கரையைப் பற்றிய சித்திரம். வரைந்த ஆண்டு 1872. வரைந்தவர் சீக்கிய சமூகத்தைச் சேர்ந்த பிஷன்சிங்.

அந்த காலகட்டங்களில் ஶ்ரீநகர் ஒரு அமைதியான நகரமாக இருந்தது. கல் எரிபவர்களோ, தீவிரவாதிகளோ, புர்கா அணிந்தவர்களோ, கையில் ISIS கொடி பிடித்தவர்களோ எங்கும் காணப்படவில்லை.

அதற்கு பதிலாக காஷ்மீரி ஹிந்து பண்டிட்டுகள் ஸீலம் நதிக்கரையில்.. அதிகாலை வேளையில் சூரிய நமஸ்காரம் செய்து கொண்டும், அந்த ஊர் ஹிந்து பெண்கள் முழங்கால் அளவு இருக்கும் தங்களின் விசேஷ உடைகளை அணிந்து கொண்டும் இந்த சித்திரத்தில் காணப்ப

அதோடு பிரயாணிகள் ஶ்ரீநகரில் உள்ள ஸீலம் நதியின் மேல் கட்டப்பட்ட ஸைனா காடல் பிரிட்ஜை பயன்படுத்துவதாக வரையப் பட்டுள்ளது. இந்த நதியின் கரையில்தான் மிகவும் பழமை வாய்ந்த கான்க்வா இ மௌலா என்னும் மசூதி இப்போது இருக்கிறது. இது முன் காலத்தில் ஒரு காளி கோவிலாக இருந்தது. அங்கு இந்த காஷ்மீர் பண்டிட்டுகள் காளியை வணங்கி வந்தனர்.

இப்போது மசூதியான இந்த இடத்தில் ஒரு ராம்ஜி கோவிலும் அதற்கான தனிப்பட்ட ப்ரத்யேக சிகாராவும் (நம் ஊர்களில் இதனை விமானம் என்று அழைப்போம். கோவில்களில் உள்ள விமானம்) இருந்து வந்தது. 1990 ஆம் ஆண்டு இந்த சிகாராவின் மேல் குண்டு வீசப்பட்டு கோவிலும் சேர்ந்து உருக்குலைந்தது.


இந்தப் படம் ஶ்ரீநகரில் உள்ள தால் ஏரியில் ஒரு காஷ்மீரி பண்டிட் வேதம் ஓதும் காட்சி.

இந்த படம் எடுக்கப்பட்ட ஆண்டு 1903. தால் ஏரியின் உண்மையான பெயர் மஹாசரிதா ஏரி (महासरिता). காலம் காலமாக இந்த ஏரியின் கரையில் காஷ்மீரி பண்டிட்கள் அதிகாலையில் சூரிய பகவானுக்கு அர்க்யம் விட்டு வேதங்களையும் மந்திரங்களையும் ஓதுவார்கள். இது பாரம்பரியமாக தொன்று தொட்டு நிகழ்ந்து வந்து கொண்டிருந்தது.

பிறகு.. 1931 – 32 ஆம் ஆண்டுகளில்.. காஷ்மீர் கலகம் ஏற்பட்டது. ஷேக் அப்துல்லாவின் முஸ்லீம் கான்பரன்ஸ் குண்டர்கள் (பின்னர் இது நேஷனல் கான்பரன்ஸ் – NC என்று மாற்றப்பட்டது) மஹாசரிதா ஏரியில் வேதம் ஓதும் காஷ்மீர் பண்டிட்கள் மீது கற்களை எரிவது போன்ற செயல்களில் ஈடுபட்டார்கள். கொஞ்சம் கொஞ்சமாக இவர்களின் தொல்லைகள் அதிகரிக்க அதிகரிக்க ஒரு கட்டத்தில் அங்கு வரும் பண்டிட்டுகளின் எண்ணிக்கை குறையத் தொடங்கியது.

இவர்களின் அட்டகாசங்கள் கட்டுக்கடங்காமல் போய் முடிவாக காஷ்மீரி பண்டிட்டுகள் தங்கள் வீடு வாசல், சொத்து சுகம் அனைத்தையும் விட்டு விட்டு சொந்த தேசத்தில் அகதிகளாக பல மாநிலங்களில் தங்கும் நிலை ஏற்பட்டு.. இன்றுவரை தொடர்கிறது.

காஷ்மீரின் மஹாசரிதா ஏரி.. தால் லேக் ஆக மாறி அங்கிருந்த பண்டிட்டுகளை ஒழித்துக்கட்டி.. வேத பிராமணர்களுக்கும் அந்த ஏரிக்கும் இப்போது தொடர் பொழிந்து போனது.

TrueIndology
பிரேமா எஸ்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe
Exit mobile version