மும்பை:
மும்பை காவல் நிலையத்தில் கால் சென்டரில் பணிபுரியும் இளம் காதல் ஜோடியை காவல்துறையினர் சரமாரியாகத் தாக்கும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.
அந்த வீடியோவில் இளம் காதலர்களை காவல்துறையினர் தாக்குகின்றனர். வலி தாங்காமல் அந்த இளம் பெண் கதறி அழுகிறார். எங்களை விட்டுவிடுங்கள் என்று அந்த காதல் ஜோடி கெஞ்சிக் கேட்கிறது. ஆனாலும் , மும்பை போலீஸார் அவர்களை அடித்து உதைத்து மிருகனத்தனமாக நடந்துகொள்கின்றனர்.
மும்பையில் உள்ள மகேந்திரா கால் சென்டரில் வேலை பார்க்கும் இந்த இளம் காதல் ஜோடியை,விசாரணை என்ற பெயரில் மும்பையில் உள்ள அந்தேரி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்ற போலீஸார், விசாரணைக்கு அவர்கள் ஒத்துழைக்கவில்லை என்பதால் இளம் ஜோடியை தாக்கியுள்ளதாக கூறப்படுகிறது.
காவல் நிலையத்தில் இளம் பெண்ணை பலமுறை கன்னத்தில் அடிக்கிறார் பெண் போலீஸ். அப்போது அவரது வாயில் இருந்து இரத்தம் கொட்டியதாம். பின்னர் இளைஞரை போலீஸார் தாக்க, அவருடன் வந்த இளம் பெண் அவரை அடிக்க வேண்டாம் என கதறி அழுதுக்க் கேட்டும் போலீஸார் தாக்குகின்றனர். இந்த வீடியோ இப்போது வைரலாக இணையதளத்தில்பரவி வருகிறது.