புது தில்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக மசூத் ஹூசைன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது குறித்து வெளியிடப் பட்ட செய்திக் குறிப்பில், காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைமையிடமாக புது தில்லி செயல்படும் என்றும், மத்திய நீர் ஆணையத்தின் தலைவராக உள்ள மசூத் ஹூசைன் காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவராக நியமிக்கப்படுவதாகவும் கூறப் பட்டுள்ளது.
காவிரி மேலாண்மை ஆணைய செயலராக ஏ.எஸ் கோயல் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழகத்தின் சார்பில் பொதுப்பணித்துறை முதன்மை செயலாளர் எஸ். கே.பிரபாகர் பகுதி நேர உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தின் சார்பில் பகுதி நேர உறுப்பினராக பொதுப்பணித்துறை செயலர் கே. அன்பரசு, கேரள மாநிலம் சார்பில் பகுதி நேர உறுப்பினராக டிங்கு பிஸ்வால் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். கர்நாடக மாநிலத்தின் சார்பில் இது வரை எவரும் பரிந்துரைக்கப் படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது.