December 5, 2025, 4:43 PM
27.9 C
Chennai

திருப்பதி ஏழுமலையான் முன்னிலையில் கொடுத்த வாக்குறுதிகளை கூட நிறைவேற்றாத மோடி: தெலுங்கு தேசம் எம்.பி

21 July20 Telugana MP - 2025மத்திய அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மக்களவையில் இன்று விவாதம் நடைபெற்று வருகிறது. 5 கோடி ஆந்திர மக்களின் எதிர்பார்ப்பை மத்திய அரசு பூர்த்திசெய்யவில்லை என்று தீர்மானத்தை முன்மொழிந்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.பி. ஜெயதேவ் கல்லா உரையாற்றினார். அப்போது அவர், “பிரதமர் மோடியும், அமித்ஷாவும் வாக்குறுதிகளை ஆந்திர மக்களுக்கு அள்ளி வீசினார்கள். மத்திய பாஜக அரசு எங்களை நிச்சயமற்ற தன்மைக்கு அழைத்துச் சென்று கொண்டிருக்கிறது. ஆந்திரா பிரிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் எதுவும் நிறைவேற்றப்படவில்லை. வாக்குறுதிகளை அளித்து ஏமாற்றியதால் தான் இந்த தீர்மானத்தை கொண்டு வர வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.

ஒரு பிளாக் பஸ்டர் திரைப்படத்தின் புகழ்பெற்ற வசனம் என்ன கூறுகிறது எனில், “ஒரு மனிதன், கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாவிட்டால், அவன் தன்னை மனிதன் என்று கூற உரிமையில்லாதவன் ஆகிறான்” என்று எம்.பி. ஜெயதேவ் கல்லா, பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்துள்ளார்.

தொடர்ந்து பேசிய கல்லா, “ஆந்திர மாநிலத்திற்கு மோடி காட்டிய பாகுபாட்டிற்கு எதிரான போர் இது. மத்திய அரசுக்கு எதிரான தர்மயுத்தம் இது. நியாயமின்மை, நம்பிக்கை இல்லாமை, முன்னுரிமை இல்லாதது, நடுநிலை அணுகுமுறை இல்லாதது என பாகுபாடு காட்டி நடந்து கொண்ட மத்திய அரசு மீது ஆந்திர மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். ஜனநாயகமற்ற வழியில் ஆந்திர பிரதேச மாநிலம் பிரிக்கப்பட்டது. நிச்சயமற்ற நிலையில் இருந்து எங்களுக்கு நிவாரணம் தேவை. மோடியின் ஆட்சி நமக்கு இன்னும் நிச்சயமற்ற தன்மையையும், சவால்களையும் உருவாக்கி வருகிறது.

ஆந்திர பிரதேசம் ஒரு தென் மாநிலம். அதன் வளர்ச்சி இயந்திரமே அதன் தலைநகரமான ஹைதராபாத் தான். அங்கு மிகப்பெரிய வளர்ச்சி உருவாக்கப்பட்டு இருந்தது. ஆந்திரா முழுவதும் உள்ள மக்களின் பங்களிப்போடு அந்த வளர்ச்சி உருவாக்கப்பட்டது. ஆனால், இப்போது குறைந்த மக்கள் தொகை கொண்ட தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தின் வளர்ச்சியை அனுபவித்துக் கொண்டிருக்கிறது.

எங்களுடைய கோரிக்கை எல்லாம், ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்பது தான். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் எங்களுக்கு அளித்த 6 உத்தரவாதங்களில் இதுவும் ஒன்றாகும். அதைத் தான் நாங்கள் கேட்கிறோம்.

பாஜக தங்களது தேர்தல் அறிக்கையில், பத்து வருடங்களுக்கு ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படும் என உறுதியளித்தது. நீங்கள் எப்போதும், எல்லா மக்களையும் முட்டாளாக்க முடியாது.

எங்கள் மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வேண்டும்” என்று எம்.பி. ஜெயதேவ் கல்லா தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories