December 5, 2025, 5:16 PM
27.9 C
Chennai

ராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

05 July23 Congress committee - 2025காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே, கரண் சிங் போன்றோர் விடுவிக்கப்பட்டு புதிய காரிய கமிட்டிக்கு 23 உறுப்பினர்கள், 18 நிரந்தர உறுப்பினர்கள், 10 சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த உத்திகளும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி அமைப்பது மற்றும் தேர்தல் பிரசார குழுவை அமைப்பது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு வழங்க காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பார்வையற்ற வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக ‘பிரைலி எபிக்’ அட்டை முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு பாராட்டு தெரிவித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை எளிதாக்கிட கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories