ராகுல்காந்திக்கு கூடுதல் அதிகாரம்: காங்கிரஸ் காரிய கமிட்டி கூட்டத்தில் முடிவு

05 July23 Congress committee - 2026காங்கிரஸ் தலைவராக கடந்த டிசம்பர் மாதம் ராகுல்காந்தி பதவி ஏற்றுக்கொண்டார். அதன்பிறகு அவர் கடந்த 17-ந் தேதி கட்சியின் காரிய கமிட்டியை மாற்றியமைத்தார். திக்விஜய் சிங், ஜனார்த்தன் திவேதி, கமல்நாத், சுசில்குமார் ஷிண்டே, கரண் சிங் போன்றோர் விடுவிக்கப்பட்டு புதிய காரிய கமிட்டிக்கு 23 உறுப்பினர்கள், 18 நிரந்தர உறுப்பினர்கள், 10 சிறப்பு அழைப்பாளர்கள் நியமிக்கப்பட்டனர்.

புதிய காரிய கமிட்டி கூட்டம் டெல்லியில் நாடாளுமன்ற வளாக இணைப்பு கட்டிடத்தில் நேற்று நடந்தது. இதில் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், ஏ.கே.அந்தோணி, ப.சிதம்பரம், குலாம்நபி ஆசாத், மல்லிகார்ஜூன கார்கே, அகமது பட்டேல் உள்ளிட்ட பல முக்கிய தலைவர்கள் பங்கேற்றனர்.

காரிய கமிட்டி கூட்டத்தில் கலந்துகொள்ள காங்கிரஸ் முதல்-மந்திரிகள், முன்னாள் மத்திய மந்திரிகள், முன்னாள் முதல்-மந்திரிகள், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

நேற்றைய காரிய கமிட்டி கூட்டத்தில் 2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலை எதிர்கொள்வது குறித்த உத்திகளும் ஆலோசிக்கப்பட்டது. அப்போது பா.ஜனதாவுக்கு எதிராக வலுவான கூட்டணி அமைத்து போட்டியிட முடிவு செய்யப்பட்டது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பும், பின்பும் கூட்டணி அமைப்பது மற்றும் தேர்தல் பிரசார குழுவை அமைப்பது ஆகியவற்றை முடிவு செய்யும் அதிகாரத்தை ராகுல்காந்திக்கு வழங்க காரிய கமிட்டி ஒப்புதல் அளித்தது.

கர்நாடக சட்டமன்ற தேர்தலின்போது பார்வையற்ற வாக்காளர்கள் ஓட்டுப்போடுவதற்காக ‘பிரைலி எபிக்’ அட்டை முறையை தேர்தல் கமிஷன் அறிமுகம் செய்திருந்தது.

இதற்கு பாராட்டு தெரிவித்து தலைமை தேர்தல் கமிஷனர் ஓ.பி. ராவத்துக்கு கடிதம் எழுதியுள்ள ராகுல்காந்தி, மாற்றுத்திறனாளிகள் அனைவரும் வாக்களிப்பதை எளிதாக்கிட கூடுதல் நடவடிக்கை எடுக்கவேண்டும். இதற்கு காங்கிரஸ் தனது ஆதரவை அளிக்கும் என்று கூறி உள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

Topics

பஞ்சாங்கம் மார்ச் 14 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

கொல்லங்கோடு பத்ரகாளி கோவில் தூக்கத்திருவிழா துவக்கம்..

தமிழகம் கேரளா மாநிலத்தில் பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கொல்லங்கோடு...

ஈரான் விவகாரத்தில்… காங்கிரஸின் ‘யு டர்ன்’!

ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் மூன்று முறை, 2005, 2006, 2009 ஆண்டுகளில், சர்வதேச அணுசக்தி முகாமையில் ஈரானின் அணு ஆயுத தயாரிப்பை எதிர்த்து

எர்ணாகுளம் – வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

எர்ணாகுளம் - வேளாங்கண்ணி-எர்ணாகுளம் இடையே கொல்லம் செங்கோட்டை மதுரை வழி...

பங்குனி மாத பூஜைகளுக்காக சபரிமலை கோயில் நாளை நடை திறப்பு

பங்குனி மாத பூஜைகளுக்காக கேரளாவில் பிரசித்தி பெற்ற சபரிமலை சுவாமி ஐயப்பன்...

அரசியல்வாதிகள் போல் செயல்படும் அரசு அதிகாரிகள்: இந்து முன்னணி கண்டனம்!

எனவே அரசியல் சாசன சட்டத்தை மதித்து மக்கள் நலனை கருத்தில் கொண்டு அரசு அதிகாரிகள் செயல்பட வேண்டும் என்று இந்துமுன்னணி சார்பில் கேட்டுக் கொள்கிறோம்.

தமிழகத்தில் பெட்ரோல் டீசலுக்கு தட்டுப்பாடா? உண்மை என்ன?

தமிழ்நாடு முழுவதும் பெட்ரோல் மற்றும் டீசல் தடையின்றி தொடர்ந்து கிடைக்கும் என்பதை மீண்டும் உறுதி செய்கிறது.

Entertainment News

Popular Categories