புது தில்லி: பிரதமர் மோடி ஆக.15 நாளை வழங்கும் சுதந்திர தின உரை கூகுள், யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று தில்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக் கொடியை ஏற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றுகிறார். இந்த உரையை வழக்கம்போல் தூர்தர்ஷன் ஒளிபரப்புகிறது.
இந்நிலையில் பிரதமர் மோடியின் சுதந்திர தின உரை இன்னும் அதிக அளவில் மக்களிடம் கொண்டு சேர்க்கும் வகையில், கூகுள் மற்றும் யுடியூப்பில் நேரலையாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.
இந்த நேரலை ஒளிபரப்பு கூகுளின் முகப்பு பக்கத்தில் இடம்பெறவுள்ளது. இதற்கு முன்னர் அமெரிக்க அதிபர் டிரம்ப் பதவியேற்பு விழாவை கூகுள் நேரலையாக ஒளிபரப்பியது குறிப்பிடத் தக்கது.