வாஜ்பாய் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்: பரவும் வதந்திகள்!

vajpayee karunanidhi - 2026

புது தில்லி: முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக் கிடமாகவே இருப்பதாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனை  மருத்துவ குறிப்பு வெளியிட்டது.

உடல்நலம் பாதிக்கப்  பட்ட நிலையில் முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய்க்கு கடந்த 9 வாரங்களாக தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில், தீவிர சிகிச்சையில் உள்ளார். நேற்று குடியரசு துணை தலைவர் வெங்கையாநாயுடு, பிரதமர் மோடி உள்ளிட்டோரும் மத்திய அமைச்சர்களும் மருத்துவமனைக்கு நேரில் சென்று வாஜ்பாய் உடல்நிலை குறித்து விசாரித்தனர்.

இந்நிலையில் நேற்று இரவு மருத்துவமனை வெளியிட்ட செய்திக் குறிப்பில் வாஜ்பாய் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

தொடர்ந்து, இன்றும்  11 மணியளவில் மீண்டும் ஒரு செய்திக்குறிப்பு வெளியிட்டுள்ளது. அதில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாகவே உள்ளதாகக் கூறியுள்ளது. உயிர்காக்கும் கருவிகளின் துணையோடு தீவிர சிகிச்சை தொடர்வதாக மருத்துவ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று காலை முதலே பா.ஜ.க. தலைவர் அமித்ஷா, மத்திய அமைச்சர்கள், பல்வேறு கட்சித் தலைவர்கள், வாஜ்பாயின் உறவினர்கள் என மருத்துவமனைக்கு வந்த வண்ணம் உள்ளனர்.  தொண்டர்கள் மருத்துவ மனை முன் குவிந்து வருகின்றனர். பா.ஜ.க ஆளும் மாநில முதலமைச்சர்கள் அனைவரும் தில்லிக்கு வருமாறு அக்கட்சியின் தலைமை அழைப்பு விடுத்துள்ளது.

இதனிடையே திரிபுரா ஆளுநர் போட்ட டிவிட்டர் பதிவு பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது. வாஜ்பாய்க்கு இரங்கல் தெரிவிப்பதாக அவர் வெளியிட்ட டிவிட்டர் பதிவுக்கு கண்டனம் எழுந்தது. வாஜ்பாய் உடல் நலம் குறித்து சமூக வலைத்தளங்களில், குறிப்பாக வாட்ஸ் அப் குழுக்களில் பலரும் வதந்திகளைப் பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

Topics

தாம்பரம் – தென்காசி ஈஸ்டர் சிறப்பு ரயில்; இன்று முன்பதிவு தொடக்கம்!

திருச்சி மதுரை திருநெல்வேலி தென்காசி வழியாக தாம்பரம் தென்காசி/செங்கோட்டை புனித வெள்ளி...

பஞ்சாங்கம் ஏப்ரல் 2 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

மண்ணின் மணத்தை மலர வைத்த ஒடிஷா!

இன்று ஏப்ரல் - 1, ஒடிஷா மாநிலம் தோன்றிய நாள் என்று சமூக வலைத்தளத்தில் செய்தி வந்ததும் நான் நான்கு ஆண்டுகளுக்கு முன் மூன்று நாட்கள் ஒடிஷாவில் உள்ள தாமன்ஜோடி

IPL 2026: வெற்றிகரமான தொடக்கம்!

ஐபிஎல் 2026 மார்ச்சு 28ஆம் தேதி பெங்களூருவில் ஹைதரபாத், பெங்களூரு அணிகளுக்கிடையேயான ஆட்டத்துடன் தொடங்கியது.

கமலாலயத்துக்கும் சத்தியமூர்த்தி பவனுக்கும் வேறுபாடில்லை!

முரளி சீதாராமன்1) காலையில் நயினார் நாகேந்திரன் செய்தியாளர் சந்திப்பில்:- "ஏப்ரல் 4...

அதிகாரத்தில் இல்லாததற்காக, இவர்களுக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன்!

இந்த இக்கட்டான சூழ்நிலையில் ஏதாவது ஒரு விஷயத்திற்கு நாம் நன்றிக்கடன் பட்டுள்ளோம் என்றால் அது, இப்போது காங்கிரஸ் கட்சி அதிகாரத்தில் இல்லாததற்கே!

பஞ்சாங்கம் – ஏப்ரல் 1 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

‘தனி’ தொகுதிகளில் தனியா கவனித்து மனுவை தள்ளுபடி செய்யுங்க: இந்து முன்னணி வலியுறுத்தல்!

போலிச் சான்றிதழ் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுத்து அதனை ரத்து செய்து இந்து பட்டியலின மக்கள் உரிமைகளை பாதுகாக்க வேண்டும் என இந்துமுன்னணி வலியுறுத்துகிறது!

Entertainment News

Popular Categories