December 5, 2025, 3:38 PM
27.9 C
Chennai

குஜராத் கலவரத்துக்கு காரணமான கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 2 பேருக்கு ஆயுள்! 3 பேர் விடுவிப்பு!

godhra train fire case - 2025

குஜராத் மாநிலம் ஆமதாபாத்திலிருந்து 120 கி.மீ., தொலைவிலுள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002ஆம் ஆண்டு பிப்.27 அன்று சபர்மதி ரயிலின் எஸ்6 பெட்டி, வெளியில் இருந்து வந்த இஸ்லாமியர்கள் சிலரால் தீ வைத்து எரிக்கப்பட்டது. இதில் ராம சேவகர்கள் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம், அதற்குப் பின்னர் நடந்த குஜராத் கலவரம் ஆகியவை தொடர்பான வழக்குகள் தனித்தனியே விசாரிக்கப்பட்டு வருகின்றன. இதில் கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக கடந்த 2011-ஆம் ஆண்டு தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில் 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். 63 பேர் போதிய ஆதாரங்கள் இல்லாததால் விடுவிக்கப்பட்டனர். குற்றவாளிகள் 31 பேரில் 11 பேருக்கு மரணதண்டனையும் 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது.

குற்றவாளிகளில் சிலர், தண்டனைக்கு எதிராக மேல்முறையீடு செய்தனர். இதன் மீதான விசாரணை குஜராத் உயர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. அப்போது 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனை, ஆயுள் தண்டனையாகக் குறைக்கப் பட்டு கடந்த வருடம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதனிடையே, குற்றவாளிகளில் 6 பேர் தலைமறைவாயினர். சில நாள்களுக்குப் பின் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்று, இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், குற்றம் சாட்டப்பட்ட 6 பேரில் இரண்டு பேர் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது. அவர்களில் மூவரை விடுவித்து உத்தரவிடப்பட்டது. 6 பேரில் ஒருவர் ஏற்கெனவே மாரடைப்பால் உயிரிழந்துவிட்டார்.

முன்னர், லாலு பிரசாத் ரயில்வே அமைச்சராக இருந்தபோது, கோத்ரா ரயில் எரிப்பு தொடர்பாக தாங்களாவே ஒரு விசாரணை ஆணையம் அமைத்து, ரயில் எரிப்பு வெளியில் இருந்து மேற்கொள்ளப்படவில்லை, ரயிலில் வந்தவர்கள் தாங்களாகவே தங்களை எரித்துக் கொண்டார்கள் என்று ஒரு அறிக்கையும், இது திட்டமிட்ட சதி அல்ல, ஒரு விபத்து என்றும் அரசியல் செய்யப் பட்டது. ஆனால், நீதிமன்ற தீர்ப்புகளில் காங்கிரஸ் தலைமையிலான அரசு மேற்கொண்ட மலின அரசியல் வெளிச்சத்துக்கு வந்தது!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories