ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் என்.ஜி.ஓ., அலுவலகங்களில் அமலாக்கத்துறை சோதனை

amnesty international - 2026

பெங்களூரில் உள்ள ஆம்னஸ்ட்டி இன்டர்நேஷனல் அலுவலகத்தில் நேற்று பிற்பகலில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீரென சோதனையில் ஈடுபட்டனர். இது பெரும் பரப்பை ஏற்படுத்தியது. இந்த சோதனை குறித்து தெரிவித்த அதிகாரிகள், ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் அந்நியச் செலாவணி மோசடிகளில் ஈடுபட்டிருப்பதாகக் கூறினர்.

ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல் நிறுவனத்திற்கு சொந்தமான இரண்டு இடங்களில் பல மணி நேரம் சோதனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. லண்டனை மையமாகக் கொண்ட என்ஜிஓ நிறுவனமான ஆம்னெஸ்டி இண்டர்நேஷனல், உலகம் முழுவதும் 150 நாடுகளில் சுமார் 70 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.

தொண்டு நிறுவனமாக செயல்படுவதாகக் கூறிக் கொள்ளும் இந்த நிறுவனம், வெளிநாடுகளில் இருந்து பெறப்படும் நிதியை பயன்படுத்தி அதனை வர்த்தக ரீதியாகப் பயன்படுத்தி வருவதாக அமலாக்கத்துறையினர் குற்றம் சாட்டியுள்ளனர். ரூ.36 கோடி வெளிநாட்டு நிதியை உள்துறை அமைச்சகத்தின் உரிய அனுமதியின்றி அது பெற்றுள்ளதாகவும் அமலாக்கத்துறை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனத்தின் கூட்டத்தில் காஷ்மீர் பிரச்னை எழுப்பப்பட்டு, இந்தியாவுக்கு எதிரான கோஷங்கள் எழுப்பப்பட்டதும், தொடர்ந்து தேச துரோக வழக்குப் பதிவானதும் நினைவுகூரத் தக்கது. வேறு எந்த ஒரு நாட்டிலும், அந்த நாட்டின் இறையாண்மைக்கு எதிராக, அந்த நாட்டின் சட்ட திட்டங்களுக்கு எதிராக எந்த ஒரு நிறுவனமும் செயல்பட முடியாது என்பதும், அம்னெஸ்ட்டி இண்டர்நேஷனல் போன்ற ஏமாற்றுப் பேர்வழிகளின் சொர்க்க பூமியாகவும் எளிய இலக்காகவும் மதசார்பற்ற ஜனநாயக இந்தியா  திகழ்வது வெளிப்படையாகத் தெரிகிறது.

இந்நிலையில், அம்னெஸ்டி இண்டர்நேஷனல் அலுவலகங்களில் சோதனை நடத்தப் பட்டதை மனித உரிமை மீறல் எனவும், இந்திய அரசு மனித உரிமை மீறல் செயல்களில் ஈடுபடுவதாகவும் அந்த நிறுவனம் உலகளாவிய அளவில் விஷமப் பிரசாரத்தை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories