December 5, 2025, 2:24 PM
26.9 C
Chennai

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

ponnar sp yatheesh - 2025

சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.

சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் பி யதீஸ் சந்திராவினார் தடுத்து நிறுத்தப் பட்டார். மேலும் அவரிடம் மரியாதைக் குறைவாகவும் வரம்பு மீறியும் விவாதம் நடத்தினார்.

இதுகுறித்து பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை யதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக கேரளாவில் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் யதீஷ் சந்திரா எந்த தவறும் செய்யவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்

எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சபரிமலையின் பாதுகாப்புப் பணி போடப்பட்டிருந்து. இந்த நிலையில் அவர் மீது எதிர்ப்பு வலுத்ததால் அவரை சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து மாற்றப்பட்டு மீண்டும் திருச்சூருக்கு திரும்ப கேரள அரசு உத்தரவிட்டது

நாளை கேரள சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் ராதாகிருஷ்ணனை எஸ்பி அவமதித்தது தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்ப வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக அரசு முன்கூட்டியே எஸ்பி.,யை மாற்றியதாகக் கூறப்படுகிறது.

இதனிடையே சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு பத்தரை மணி அளவில் திடீரென பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி நாமஜெபம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு உள்ள இந்த இடத்தில் நாமஜபம் நடத்தக்கூடாது என்று போலீசார் பக்தர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பினர். இதை அடுத்து நாம ஜபத்தில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்து பம்பைக்கு அழைத்துச் சென்றனர்

நாம ஜபம் செய்பவர்களை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியும், உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி நாம ஜபத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பம்பை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பக்தர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

1 COMMENT

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories