24-03-2023 1:05 PM
More
    Homeஇந்தியாசபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

    To Read in other Indian Languages…

    சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்த எஸ்பி., இடமாற்றம்!

    ponnar sp yatheesh - Dhinasari Tamil

    சபரிமலையில் பொன்.ராதாகிருஷ்ணனை தடுத்து நிறுத்திய எஸ்பி பணியிட மாற்றம் செய்யப் பட்டார்.

    சபரிமலைக்கு இருமுடி கட்டுடன் சென்ற மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் நிலக்கல் பகுதியில் பாதுகாப்பு பணியில் இருந்த எஸ் பி யதீஸ் சந்திராவினார் தடுத்து நிறுத்தப் பட்டார். மேலும் அவரிடம் மரியாதைக் குறைவாகவும் வரம்பு மீறியும் விவாதம் நடத்தினார்.

    இதுகுறித்து பாஜக மாநில தலைவர் ஸ்ரீதரன் பிள்ளை யதீஷ் சந்திரா மீது நடவடிக்கை எடுக்க கோரி மத்திய உள்துறை அமைச்சரிடம் புகார் செய்தார். இது தொடர்பாக கேரளாவில் போராட்டங்களும் நடைபெற்றன. ஆனால் யதீஷ் சந்திரா எந்த தவறும் செய்யவில்லை என கேரள முதல்வர் பினராயி விஜயன் கூறினார்

    எஸ்பி யதீஷ் சந்திராவுக்கு கடந்த 15ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை சபரிமலையின் பாதுகாப்புப் பணி போடப்பட்டிருந்து. இந்த நிலையில் அவர் மீது எதிர்ப்பு வலுத்ததால் அவரை சபரிமலை பாதுகாப்பு பணியில் இருந்து மாற்றப்பட்டு மீண்டும் திருச்சூருக்கு திரும்ப கேரள அரசு உத்தரவிட்டது

    நாளை கேரள சட்டசபை கூட்டத் தொடர் தொடங்குகிறது. இதில் ராதாகிருஷ்ணனை எஸ்பி அவமதித்தது தொடர்பான விவகாரத்தை எதிர்க்கட்சிகள் கிளப்ப வாய்ப்புள்ளது. இதைத் தவிர்ப்பதற்காக அரசு முன்கூட்டியே எஸ்பி.,யை மாற்றியதாகக் கூறப்படுகிறது.

    இதனிடையே சபரிமலையில் நேற்று முன்தினம் இரவு பத்தரை மணி அளவில் திடீரென பக்தர்கள் சரண கோஷம் எழுப்பியபடி நாமஜெபம் நடத்தினர். இதையடுத்து போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர். 144 தடை உத்தரவு உள்ள இந்த இடத்தில் நாமஜபம் நடத்தக்கூடாது என்று போலீசார் பக்தர்களை எச்சரிக்கை செய்தனர். ஆனால் பக்தர்கள் தொடர்ந்து சரண கோஷம் எழுப்பினர். இதை அடுத்து நாம ஜபத்தில் ஈடுபட்ட 82 பேரை போலீசார் கைது செய்து பம்பைக்கு அழைத்துச் சென்றனர்

    நாம ஜபம் செய்பவர்களை கைது செய்யக் கூடாது என்று உயர் நீதிமன்றம் கூறியும், உயர் நீதிமன்ற உத்தரவையும் மீறி நாம ஜபத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ததற்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில் பம்பை காவல் நிலையத்தில் கைது செய்யப்பட்ட பக்தர்கள் அனைவரும் விசாரணைக்கு பின் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.

    உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
    தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

    https://t.me/s/dhinasari

    1 COMMENT

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    15 + two =

    This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

    Most Popular

    மக்கள் பேசிக்கிறாங்க

    ஆன்மிகம்..!

    Follow Dhinasari on Social Media

    19,035FansLike
    388FollowersFollow
    83FollowersFollow
    74FollowersFollow
    4,632FollowersFollow
    17,300SubscribersSubscribe

    சமையல் புதிது..!

    COMPLAINT BOX | புகார் பெட்டி :

    Cinema / Entertainment

    லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை..

    திருவண்ணாமலையில் நேற்று படமாக்கப்பட்ட லால் சலாம் பட சூட்டிங் பிரச்சனை எதிரொலி ஐஸ்வர்யா ரஜினிகாந்தின்...

    கண்ணை நம்பாதே-படம் எப்படி?..

    அவரவர் குற்றத்திற்கு தண்டனை உண்டு என்கிற கருவை அடிப்படையாக் கொண்டு உருவான படம் கண்ணை நம்பாதே. தான்...

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once..

    7 ஆஸ்கர் விருதை வென்ற Everything Everywhere All At Once திரைப்படம் .சிறந்த...

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது..

    ஆர் ஆர் ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது.விருதைபெரும் மகிழ்ச்சி...

    Latest News : Read Now...