இப்பூங்காவில் 109 பெர்சிமன் பழ மரங்கள் உள்ளன. இம்மரங்களில் தற்போது பழங்கள் ஏராளமாக காய்த்துத் தொங்குகின்றன.ஜூலை, ஆகஸ்ட், செப்டம்பர் வரை பெர்சிமன் சீசன் இருக்கும்.
காய் வடிவில் பறிக்கப்படும் இப்பழத்தை எத்தனால் என்ற திரவத்தில் ஊறவைத்தால் இரண்டு நாள்கள் கழித்துதான் பழுக்கும். தென் இந்திய அளவில் குன்னூர் சிம்ஸ் பூங்கா தோட்டக்கலைப் பண்ணையில் மட்டும்தான் இப்பழ மரங்கள் உள்ளன.
இப்பழங்கள் கிலோ ரூ. 150 வரை விற்கப்படுகின்றன. இதன் நாற்றுகளும் தோட்டக்கலைப் பண்ணையில் விற்கப்படுகின்றன. பெர்சிமன் பழ சீசன் துவங்கியுள்ளதை அடுத்து இங்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது