சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு கட்சியை அவதூறாகப் பேசுபவர்கள் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்கு தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குக் காரணம் கட்சியில் இருந்த சிலரே. அவர்களே, காங்கிரஸ் தோற்கும் என்பது எங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று செல்கிறார்கள். அந்த சில அழுக்குகள் கட்சியில் இருந்ததால்தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் கட்சியை விட்டு வெளியே சென்றாலேயே காங்கிரஸ் வெல்லும். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மாதம் ஒரு முறை தமிழகத்திற்கு வந்து கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள். இது போன்று அவதூறாகப் பேசுபவர்களுக்குத்தான், ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைப்பர்கள் பலர் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து கொண்டு கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள், கட்சியில் இருந்து விலகி எங்குச் செல்ல வேண்டுமோ அங்கே போய் சேர்ந்து கொள்ளட்டும். மதம், மொழி என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே அன்னையின் குழந்தைகளாய் இருந்து வரும் நிலையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது மோடி தலையிலான பாஜக அரசு. பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் மக்கள் விரோத மனப்பான்மை இரண்டு, மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு தெரிய வரும் என நினைத்திருந்த நிலையில் 10 மாதங்களிலேயே தெரியத் தொடங்கிவிட்டது… என்று பேசினார்.
Hot this week
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!

Topics
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!
பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்
ஆன்மிகச் செய்திகள்
குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!
குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!
மதுரை
தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!
வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!
சற்றுமுன்
இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!
உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு
ஆன்மிகச் செய்திகள்
சிவசைலநாதர் பரமகல்யாணி எழுந்தருள, மீன்பிடி திருவிழா!
ஸ்ரீ சிவசைலநாதரும் ஸ்ரீ பரமகல்யாணி அம்பாளும் மீன்பிடிக்கக் கிளம்பும் திருவிழா!
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 2 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.
ஆன்மிகச் செய்திகள்
பக்தர்கள் திரளில் மதுரை – வைகை நதியில் இறங்கிய கள்ளழகர்!
மதுரையில் வைகை நதியில் கள்ளழகர் வைகை ஆற்றில் இறங்கி பக்தர்களுக்கு காட்சி அளித்தார்.
பஞ்சாங்கம்
பஞ்சாங்கம் மே 1 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!
இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

