தோல்விக்குக் காரணமான அழுக்குகள் கட்சியை விட்டு விலக வேண்டும்: ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்

Published:

சென்னை: காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு கட்சியை அவதூறாகப் பேசுபவர்கள் காங்கிரஸில் இருந்து விலக வேண்டும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் கேட்டுக்கொண்டுள்ளார். அகில இந்திய கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கத்தின் 20-ஆவது மாநில மாநாடு சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமராஜர் அரங்கில் ஞாயிற்றுக்கிழமை இன்று நடைபெற்றது. இந்த மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன்… கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி எதிர்பாராத அளவுக்கு தோல்வியைச் சந்தித்தது. இந்தத் தோல்விக்குக் காரணம் கட்சியில் இருந்த சிலரே. அவர்களே, காங்கிரஸ் தோற்கும் என்பது எங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே தெரியும் என்று செல்கிறார்கள். அந்த சில அழுக்குகள் கட்சியில் இருந்ததால்தான் காங்கிரஸ் தோல்வியடைந்துள்ளது. அவர்கள் கட்சியை விட்டு வெளியே சென்றாலேயே காங்கிரஸ் வெல்லும். காங்கிரஸ் கட்சியில் இருந்து கொண்டு மாதம் ஒரு முறை தமிழகத்திற்கு வந்து கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசி வருகிறார்கள். இது போன்று அவதூறாகப் பேசுபவர்களுக்குத்தான், ஆட்சிக்கு வந்ததும் அமைச்சர் பதவி வழங்கப்படுகிறது. ஆனால், எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் கட்சிக்காக உழைப்பர்கள் பலர் இருக்கிறார்கள். கட்சியில் இருந்து கொண்டு கட்சியைப் பற்றி அவதூறாகப் பேசுபவர்கள், கட்சியில் இருந்து விலகி எங்குச் செல்ல வேண்டுமோ அங்கே போய் சேர்ந்து கொள்ளட்டும். மதம், மொழி என பல்வேறு வேற்றுமைகள் இருந்தாலும் ஒரே அன்னையின் குழந்தைகளாய் இருந்து வரும் நிலையில், மதத்தின் பெயரால் மக்களை பிளவுபடுத்த நினைக்கிறது மோடி தலையிலான பாஜக அரசு. பொய் வாக்குறுதிகளைக் கொடுத்து ஆட்சிக்கு வந்த பாஜக அரசின் மக்கள் விரோத மனப்பான்மை இரண்டு, மூன்று ஆண்டுகளில் மக்களுக்கு தெரிய வரும் என நினைத்திருந்த நிலையில் 10 மாதங்களிலேயே தெரியத் தொடங்கிவிட்டது… என்று பேசினார்.

ALSO READ:  மாநில ஆளுநரின் அதிகாரங்களும், ஆட்சிப் பொறுப்பு ஒப்படைப்பும்!
செங்கோட்டை ஸ்ரீராம்
செங்கோட்டை ஸ்ரீராம்https://www.dhinasari.com
பத்திரிகையாளர், எழுத்தாளர். | தமிழ் தினசரி இணைய நிறுவுனர், ஆசிரியர் |விஜயபாரதம் இதழில் உதவி ஆசிரியர், மஞ்சரி டைஜஸ்ட், விகடன் பிரசுரம், சக்தி விகடன், கல்கியின் தீபம் இதழ்களில் பொறுப்பாசிரியராகப் பணி புரிந்தவர். |தினமணி இணையம் (dinamani.com), Asianet News Tamil ஆகியவற்றில் செய்தி ஆசிரியராக பணியாற்றியவர். |சென்னை அகில இந்திய வானொலிக்காக, தேசியத் தலைவர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், காஞ்சி மகா பெரியவர் தொடர்பான பல்வேறு செய்திக் கட்டுரைகளை எழுதியுள்ளார். |* வானொலி ஆர்.ஜே., பொதிகை தொலைக்காட்சியில் செய்தி அலசல் நேரலை நிகழ்ச்சி என ஊடகத் துறையின் பல்வேறு தளங்களிலும் பணியாற்றியவர். |விகடன் பிரசுரத்தின் மூலம் இவரது ஆறு நூல்கள் வெளியாகியுள்ளன. |இவரது இதழியல் பணிக்காக, கோல்கத்தா பாரதிய பாஷா பரிஷத் அமைப்பு ‘யுவ புரஸ்கார்-08 தேசிய இலக்கிய விருது’ வழங்கியுள்ளது. |

Related articles

Recent articles

spot_img