இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற முதல்வர் உத்தரவிட வேண்டும்: ராம.கோபாலன்

சென்னை: இந்து முன்னணியினர் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளை உடனே வாபஸ் பெற முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் உத்தரவிட வேண்டும் என்று அந்த அமைப்பின் நிறுவுனர் ராம.கோபாலன் கேட்டுக் கொண்டுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கை: தமிழக காவல்துறையில் ஒரு காலத்தில் உலகின் மிகச்சிறந்த அதிகாரிகள் இருந்தனர். தற்போது, அது பொய், புரட்டு, புளுகுன்னிகளின் ராஜ்யமாக அது விளங்கி வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை! இதனை கூறும்போது நமக்கே கூசுகிறது, மனம் வேதனைப் படுகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்ற இந்து இயக்கப் பொறுப்பாளர்கள் படுகொலையை திசைத்திருப்ப அப்போதைய காவல்துறை தலைவர் அவதூறான அறிக்கையை வெளியிட்டதை மக்கள் மறந்திருக்க மாட்டார்கள். அதே நிலையைத் தான் தொடர்ந்து காவல்துறை பின்பற்றி வருகிறது. சமீபத்தில் புதிய தலைமுறை தொலைக்காட்சிக்கு எதிராக, அந்த அலுவலகத்திற்கு ஒரு கிலோமீட்டர் தூரத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம் செய்த இந்து முன்னணி பொறுப்பாளர்களை காவல்துறை கைது செய்து பொய் வழக்குப் போட்டது. அதுபோல, கடந்த ஜனவரி மாதம் 12ஆம் தேதி கோவையில் நடைபெற்ற சுவாமி விவேகானந்தரின் 151வது பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் பேசியவர்கள் மீது வழக்குத் தொடர்ந்தது. அதனைத் தொடர்ந்து பிப்ரவரி 10ஆம் தேதி காந்தி பூங்காவில் உட்கார்ந்து பொது அமைதிக்கு எதிராக சதி செய்ததாக மாநிலப் பொறுப்பாளர்கள் கிஷோர், சிங்கை பிரபாகரன் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் குணா, சதீஷ், ஜெய்சங்கர் ஆகியோர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. மாநிலப் பொறுப்பாளர்களின் பாதுகாப்பிற்கு போலீஸ் அதிகாரிகள் உடன் இருக்கிறார்கள். காவல்துறை குறிப்பிடும் நாளில் அவர்கள் இருவரும் வேறு வேறு ஊர்களில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருப்போதோடு அவர்களோடு இருந்த காவல்துறை அதிகாரிகளின் பயணப்பதிவும் உள்ளது. இப்படியிருக்க பொய்யான குற்றச்சாட்டில் சிக்க வைக்க காவல்துறை எடுத்துள்ள நடவடிக்கை பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. கோவையில் ஜுன் 7ஆம் தேதி நடைபெற உள்ள இந்து முன்னணியின் 7வது மாநில மாநாட்டை சீர்குலைக்க காவல்துறை இதுபோன்ற நடவடிக்கை எடுக்கிறதோ என்ற சந்தேகம் மக்கள் மனதில் எழுந்துள்ளது. தமிழகம் எங்கும் கொலை, கொள்ளை, கற்பழிப்பு, பயங்கரவாதிகளின் சதிகள் தலைவிரித்தாடுகிறது. அதுபோன்ற குற்றவாளிகள் மீதும் குண்டர் சட்டத்தை ஏவ தயக்கம் காட்டும் காவல்துறை இந்து முன்னணி பொறுப்பாளர்கள் இலக்காவது ஏன்? சென்னையிலும், கோவையிலும் தொடுத்துள்ள வழக்குகளால் காவல்துறை நம்பகத்தன்மையை இழந்துவிட்டது. தமிழக அரசிற்கு தவறான வழிகாட்டுதலை தரும் அந்த அதிகார வர்க்கத்தின் இதுபோன்ற செயல்களால் தமிழக அரசு மீதும், அரசு அதிகாரிகள் மீதும் மக்கள் வெறுப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. மின்சாரப்பிரச்னை, தண்ணீர் பிரச்னை, சட்ட ஒழுங்கு முதலானவற்றில் தமிழக அரசு தோல்வியை சந்தித்து வருகிறது. ஊழலும், ஒழுங்கினமும், பயங்கரவாதமும் தமிழகத்தை ஆட்டிப்படைக்கிறது. தமிழக முதல்வர் தனது நிலையை உணர்ந்து, நியாய உணர்வுடன் செயல்பட வேண்டும். காவல்துறை அதிகாரிகளால் இந்து முன்னணியினர் மீது போட்டுள்ள பொய் வழக்குகளை வாபஸ் பெற தமிழக முதல்வர் உத்திரவிட இந்து முன்னணி கேட்டுக்கொள்கிறது.

ALSO READ:  தமிழக வளர்ச்சிக்கு பாஜக - அதிமுக கூட்டணி அவசியம்-சரத்குமார் ..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் ஜூன் 30 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூன் 29 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

ஒரு தேசத்தின் ஆன்மா, அதன் மக்கள் தாம்.  மேலும் அந்த தேசத்தின் மக்கள் உறுதி பூண்டார்கள் என்று சொன்னால், எந்த ஒரு சக்தியாலும் அவர்களை அவர்களின் கனவிலிருந்து அகற்றிவிட முடியாது.   தேச நிர்மாணத்திலே மக்களின் பங்களிப்பின் இந்தச் சக்தி

கட்டுப்பாடற்ற நடத்தை பண்பாடு ஆகாது!

ஆண் பெண் உறவை நெறிப்படுத்த தர்மமும் மரபும் சில விதிமுறைகளை வகுத்தன. அவை குடும்ப அமைப்பை வலுப்படுத்தவும், சமுதாயத்தில் ஒழுக்கம்,  பண்பாடு, பாதுகாப்பு போன்றவற்றைப் பேணவும் உதவுகின்றன. 

பஞ்சாங்கம் ஜூன் 28 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

திரை இயக்குனர் கே.பாக்யராஜ் காலமானார்!

நடிகரும் இயக்குநருமான கே பாக்யராஜ் சென்னையில் இன்று காலை மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். அவருக்கு வயது 73.

பஞ்சாங்கம் ஜூன் 27 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

வங்காளத்தைக் கைப்பற்றியதன் பின்னணியில் உள்ள சொல்லப்படாத உண்மை!

பொதுமக்கள் இப்போது காண்பது ஒரு சாதாரண உள்ளூர் அரசியல் போராட்டமாகத் தோன்றலாம். ஆனால், திரைக்குப் பின்னால் நடக்கும் உண்மை வேறொன்று: புது தில்லி தனது உள்நாட்டு எல்லைகளை மறுசீரமைக்கவும், ஒரு வலிமையான இராணுவக் கோட்டையை உருவாக்கவும் தீவிரமாக உழைத்து வருகிறது.

Entertainment News

Popular Categories