கட்டளை காவிரி ஆற்றில் குளித்த பள்ளி மாணவன், நீச்சல் தெரியமால் நீரில் முழ்கி இறந்து விட்டான்.
கிருஷ்ணராயபுரம் அடுத்த, கட்டளையை சேர்ந்த ரஜினி மகன் ரித்விக், 9, கரூர் தனியார் பள்ளியில் மூன்றாம் வகுப்பு படித்து வந்துள்ளான்.
நேற்று மாலை, 3:00 மணிக்கு மூன்று நண்பர்களுடன் கட்டளை காவிரி ஆற்றில் குளிக்க சென்றுள்ளனர். இதில், ரித்விக் மட்டும் நீச்சல் தெரியாமல் நீரிழ் மூழ்கி விட்டான்.
மற்ற சிறுவர்கள் பெற்றோரிடம் தகவல் அளித்தனர். அதன்படி, தீயணைப்பு வீரர்கள் காவிரி ஆற்றில் இறங்கி தேடினர்.
மாலை, 5:30 மணிக்கு இறந்து போன ரித்விக் உடலை மீட்டு, கரூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து, மாயனூர் போலீசார் விசாரித்து வருகின்றனர்.