சென்னை: சென்னையில் வரும் மார்ச் 24, 25ஆம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ள நிலையில் தமிழக மீனவர்கள் 29 பேர் மீண்டும் கைது செய்யப் பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமேசுவரம் பகுதியில் இருந்து நேற்று காலை மீன்பிடிக்க கடலுக்குச் சென்ற மீனவர்கள் தனுஷ்கோடி – கச்சத்தீவு கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்தனர். அப்போது, அங்கு வந்த இலங்கைக் கடற்படையினர் 5 படகுகளை சுற்றி வளைத்து, அதிலிருந்த 29 மீனவர்களைக் கைது செய்தனர். பின்னர் இரவு 8.30க்கு மீனவர்கள் அனைவரும் தலைமன்னாருக்கு கொண்டு செல்லப்பட்டதாக ராமேஸ்வரம் மீனவர் சங்கத் தலைவர் எமரிட் கூறியுள்ளார். கைது செய்யப்பட்ட மீனவர்கள் இத்தகவலை எமிரிட்டுக்கு அனுப்பியதாகக் கூறினார். மீனவர் பிரச்னைக்கு தீர்வு காண்பது தொடர்பாக சென்னையில் மார்ச் 24,25ஆம் தேதிகளில் இந்திய – இலங்கை மீனவர்கள் பேச்சுவார்த்தை நடக்கவுள்ளது. இந்நிலையில், மீனவர்கள் மீண்டும் கைது செய்யப்பட்டிருப்பது தமிழக மீனவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
To Read this news article in other Bharathiya Languages
சென்னையில் பேச்சுவார்த்தை: கச்சத்தீவு பகுதியில் தமிழக மீனவர்கள் கைது
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari