அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜூ, பெரியபுள்ளான், அய்யப்பன், ராஜன் செல்லப்பா ஆகியோர் கூட்டாக செய்தியாளர்களிடம் பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது…
கொரானா தொற்றால் ஒரு உயிர் கூட பலியாகக் கூடாது. ஆனால், தமிழகத்தில் கள நிலவரம் மாறாக உள்ளது. முன்களப் பணியாளர்களின் தியாகப் பணியால் தொற்று குறைந்துள்ளது. உயிரிழப்பு அதிகரித்துள்ளது கவலை அளிக்கிறது.
தமிழகத்தில் கொரானா பரிசோதனைகளை அதிகப்படுத்த வேண்டும். அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை அதிகமாக செய்தோம். பாதிப்பு அதிகம் இருக்கும் போதே பரிசோதனை 1 லட்சமாக மேற்கொண்டோம். தற்போது கொரானா பரிசோதனையை 3 லட்சமாக உயர்த்த வேண்டும்.
அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை ரிசல்ட் 24 மணி நேரத்தில் கிடைத்தது. தற்போது 3நாள் ஆகிறது காலதாமதம் ஆகிறது. இதனால் கொரானா தொற்று சமூக பரவலாக மாற வாய்ப்புள்ளது.
தமிகத்தில் அதிமுக ஆட்சியில் கொரானா பரிசோதனை செய்தவரை தனிமைப்படுத்தும் நடைமுறையை கடைப்பிடிக்க வேண்டும். கிரமங்களில் காய்ச்சல் பரிசோதனை முகாம்கள் தீவிரமாக நடைமுறை படுத்த வேண்டும்.
தமிழகத்தின் கள நிலவரமும் அரசு தெரிவிக்கும் விவரமும் வேறு வேறாக உள்ளது. தமிழகத்தில் ஆக்ஸிஜன் படுக்கைகளை தேவையான அளவு உருவாக்க வேண்டும். அசாதாரண சூழ்நிலை உள்ளதால் கொரானா மரணத்தை அரசு வெளிப்படையாக அறிவித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கொரானா இறுதிச் சடங்கில் அரசு வழிமுறைகள் கேள்விக்குறியாக உள்ளது. மக்கள் எதிர்ப்பார்பு கோரிக்கையை, வேண்டுகோளை அரசுக்கு கொண்டு வருவது தான் எதிர்க்கட்சியின் இலக்கணம்.
தடுப்பூசி குறித்து இளைஞர்களிடம் அதிக விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. தடுப்பூசி மையங்களில் கட்டுங்கடங்காத கூட்டம் உள்ளதால் தொற்று பரவும் அபாயம் உள்ளது. அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் இருக்கும் தொகுதிக்கு தமிழக அரசு வேறுபாடு காட்டுகிறதோ என்ற அச்சம் நிலவுகிறது… என்றனர்.
செல்லூர் ராஜூ பேசியபோது… அல்வா கொடுப்பது போல வெறும் நூறு பேருக்கு ஊசி போட்டுவிட்டு இல்லையென்று சொல்கின்றனர். எம்ஜிஆரை காண கூட்டம் கூடுவது போல தடுப்பூசி செலுத்திக் கொள்ள கூட்டமாக கூடியுள்ளனர்.
வெளிநாட்டில் தடுப்பூசி போட்டால்தான் அனுமதி என்றெல்லாம் சொல்கிறார்கள். தமிழகத்தில் தடுப்பூசி அதிகமாக கிடைக்க வேண்டும். மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது.
அதிமுகவினர் தங்கள் கெளரவத்தை பார்த்தில்லை. மக்கள் நலன் தான் எங்களுக்கு முக்கியம். முன்னாள் முதல்வரும் துணை முதல்வரும் கெளரவம் பார்க்காமல் தேவையான உதவிகளை கேட்டுப் பெற்றனர்.
மத்தியில் இருந்த காங்கிரஸ் மற்றும் பாஜக ஆட்சியோடு இணக்கமாக இருந்து தமிழகத்திற்கு தேவையானவற்றை பெற்றோம். இதனால் எங்களை திமுகவினர் விமர்சிக்கவும் செய்தனர்.
ஒரு மாநில முதல்வர் கெளரவம் பார்க்கக் கூடாது.கொரானா நடவடிக்கைகளுக்காக ஸ்டாலின் பாரதப் பிரதமரை பார்க்க நேரடியாக சென்றிருக்க வேண்டும்! என்றார்.