நகைச்சுவை நடிகைக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியது தில்லியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமூக வலைதளங்களில் மிகவும் ஆக்டீவாக இருப்பவர் பெண் நகைச்சுவை நடிகை அஞ்சல் அகர்வால். இவருக்கு இளைஞர் ஒருவர் தனது சுயஇன்ப வீடியோவை இன்ஸ்டாகிராமில் அனுப்பியுள்ளார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த நடிகை, குற்றம் சாட்டப்பட்டவரை அம்பலப்படுத்தினார். அத்துடன் மன்னிப்பு கேட்கும்படி கட்டாயப்படுத்தியுள்ளார்.
மேலும், நடிகை அந்த நபரின் அருவருத்தக்க வீடியோவையும் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டார். பின்னர், குற்றம் சாட்டப்பட்டவர் முகமூடியால் முகத்தை மறைத்து வீடியோவில் மன்னிப்பு கேட்டார்.
இன்ஸ்டாவில் வீடியோவை வெளியிட்ட பிறகு, நடிகையின் நண்பர் அந்த வீடியோவை சைபர் செல்லுக்கு அனுப்பினார். குற்றம் சாட்டப்பட்டவரை போலீசார் தொடர்பு கொண்ட பிறகு, அவர் மன்னிப்பு கேட்டார் என்று பாதிக்கப்பட்ட பெண் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளார்.
பின்னர் போலீசார் அந்த பெண்ணிடம் மன்னிப்பு கேட்டனர். ஆனால் நடிகை தன்னிடம் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று போலீசாரிடம் கூறினார்.
இதனைத் தொடர்ந்து, அந்த நடிகை தனது டுவிட்டர் பக்கத்தில், ‘இந்த மனிதர்கள் எல்லாவற்றிலும் மிகவும் பயந்த இனம். அதனால்தான் அவர்கள் தங்களை சக்தி வாய்ந்தவர்களாக உணர இந்த நிலைக்குச் செல்கிறார்கள்.
தகவலறிந்த ஒரு நபர் அந்த நடவடிக்கையை எடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். சைபர் செல் மிக விரைவாக நடவடிக்கை எடுத்தது. விஷயங்கள் மாறிவருவதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்’ என்று பதிவிட்டார்.