சீர்காழி அருகே அரிய வகை இனமான ஆலிவர் ரெட்லி ஆமை குஞ்சுகள் திங்கள்கிழமை கடலில் விடப்பட்டது.
சீர்காழி அருகே கூழையார், கொட்டையாமேடு கிராமத்தில் வனத்துறையின் ஆமைக் குஞ்சுகள் பொறிப்பகம் செயல்பட்டு வருகிறது, இங்கு ஆண்டுதோறும் ஆமை முட்டைகள் பாதுகாக்கப்பட்டு குஞ்சு பொறித்த பின் அவை கடலில் விடப்படும், அரிய வகை ஆமை இனமான ஆலிவர் ரெட்லி பசுபிக் பெருங்கடல் பகுதியில் மட்டுமே வசிக்கும், இவ்வகை ஆமையானது ஆண்டுதோறும் டிசம்பர் மாதம் இனப்பெருக்கத்திற்காக தமிழக கடற்கரை பகுதிக்கு வரும் அவ்வாறு கடற்கரைக்கு வரும் ஆமைகள் ஒவ்வொன்றும் சுமார் 150 முதல் 180 முட்டைகள் வரை குழி நோண்டி முட்டையிடும், கடற்கரை மணல் பரப்பில் ஆமைகள் இடும் முட்டைகளை சேகரித்து வனத்துறைக்கு சொந்தமான ஆமை குஞ்சுகள் பொறிப்பகத்தில் பாதுகாப்பாக வைத்து குஞ்சுகள் பொரித்த பின்பு கடலில் விடப்படும் , இதில் இவ்வாண்டு கூழையார் கடல் பகுதியில் சேகரிக்கப்பட்ட ஆமைகள் இட்ட சுமார் 1000 முட்டைகள் பொறிப்பகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு முட்டைகள் அனைத்தும் இன்று குஞ்சு பொரித்தது. இந்த ஆமைக் குஞ்சுகளை வனத்துறையினர் கடலில் விட்டனர்.