மே மாதம் முதல் வெள்ளிங்கிரி மலை ஏற தடை விதித்து வனத்துறை அறிவித்துள்ளது.
தற்போது திருவிழா காலங்கள் முடிவடைந்து விட்டது. மேலும் கோடை வெயில் அதிகமாக இருக்கிறது. இதனால் தண்ணீருக்காகவும், உணவுக்காகவும் வன விலங்குகளின் நடமாட்டம் மலைப்பாதையில் அதிகமாக இருக்கும்.
இதையடுத்து வரும் மே மாதம் முதல் பக்தர்கள் வெள்ளிங்கிரி மலைக்கு அனுமதிக்கப் படமாட்டார்கள். பொது மக்களும், பக்தர்களும் வனத்துறைக்கு ஒத்துழைப்பு கொடுத்து மலைக்கு செல்ல வேண்டாம், என வனத்துறை அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
![வெள்ளிங்கிரி மலை ஏற தடை: 1 images 25 3](https://dhinasari.com/wp-content/uploads/2022/04/images-25-3.jpeg)