டெல்லியில் மதுபான உரிமம் முறைகேடு 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு..

images 50 1 - 2026

டெல்லியில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது.

டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி கட்சி ஆட்சி நடைபெற்று வருகிறது. கெஜ்ரிவால் மந்திரி சபையில் மணீஷ் சிசோடியா துணை முதல்-மந்திரியாக பதவி வகித்து வருகிறார். அவர் கல்வி, ஆயத் தீர்வை உள்ளிட்ட இலாக்காக்களை கவனித்து வருகிறார். கடந்த ஆண்டு டெல்லியில் கொண்டுவரப்பட்ட கலால்வரி கொள்கைப்படி மதுபானம் உரிமம் வழங்கியதில் முறைகேடு நடந்ததாக மணீஷ் சிசோடியா உள்பட 15 பேர் மீது சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்தது. மணீஷ் சிசோடியாவுக்கு நெருக்கமானவர்களுக்கு மதுபான நிறுவனங்கள் ரூ.4 கோடி முதல் ரூ.5 கோடி வரை வழங்கியதாகவும் சி.பி.ஐ. குற்றம்சாட்டியது. இந்த முறைகேடு தொடர்பாக சிசோடியா வீடு உள்பட 31 இடங்களில் சி.பி.ஐ. அதிகாரிகள் கடந்த 9-ந் தேதி சோதனை நடத்தினார்கள். இந்தநிலையில் மதுபான உரிமம் முறைகேடு தொடர்பாக டெல்லி கலால் துறை அதிகாரிகள் 11 பேரிடம் விசாரணை நடத்த சி.பி.ஐ. முடிவு செய்துள்ளது. இதற்காக அவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட உள்ளது. கலால் வரி கமிஷனர் அர்வா கோபி கிருஷ்ணா, துணை கமிஷனர் ஆனந்த் திவாரி உதவி கமிஷனர் பங்கஜ் பட்னார்கர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்படுகிறது. இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கடந்த வாரம் துணை நிலை கவர்னர் சக்சேனா பரிந்துரை செய்து இருந் தார். இதன் அடிப்படையில் அவர்களிடம் விசாரணை நடத்தப்பட இருக்கிறது. இந்த குற்றச்சாட்டுக்கு ஆளான இன்டோ ஸ்பிரிட் நிறுவனத்தின் மேலாண் இ யக்குனர் சமீர் மகேந்து உள்பட பலரிடம் சி.பி.ஐ. ஏற்கனவே விசாரணை நடத்தி இருந்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

Topics

பஞ்சாங்கம் மார்ச் 22 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

தகுந்த வைத்தியம் தேவை!

ஒரு பெண்மணி கால்நடை மருத்துவரிடம் வந்தார், அவருடன் ஒரு உயர் இன...

திருப்பரங்குன்றம் மலை மீது தொழுகைக்குச் சென்றவர்கள் போலீஸாருடன் வாக்குவாதம்!

திருப்பரங்குன்றம் மலைப்பாதையில் பரபரப்பு; மலைமேல் நெல்லி தோப்பில் ரம்ஜான் தொழுகைக்குச் சென்ற இஸ்லாமியர்கள்பெயர் முகவரி பதிவு செய்ய எதிர்ப்பு போலீசாருடன் வாக்குவாதம்!

பஞ்சாங்கம் மார்ச் 21 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

துரந்தர் 3.0 படம் எடுக்கலாம்! அவ்வளவு விஷயங்கள் கொட்டிக் கிடக்கிறது இதில்!

துல்லிய தகவல்களும் மிக ஆழமான வலைப் பின்னல்களும் கச்சிதமாக செயல்பட்டதால் இவர்களை இந்திய உளவுத்துறையால் கைது செய்ய முடிந்தது.  அவர்களுக்கு பாராட்டுகள். 

1 முதல் 9ம் வகுப்பு வரை… முழு ஆண்டுத் தேர்வு தேதிகள் விவரம்!

சட்டமன்றத் தேர்தல் நடக்க இருப்பதன் காரணமாக பள்ளி மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வுகள் இந்த ஆண்டு முன்கூட்டியே நடத்தப்படுகின்றன.

சரணாகதி அரசல்ல, சாதுர்யமான அரசு!

இந்தியாவில் உள்ள முற்போக்குவாதிகள் பலரும் தங்கள் எரிச்சலை உள்முகமாக திருப்பி உள்ளனர். ஈரானுக்கு எதிரான அமெரிக்க - இஸ்ரேல் போரில் இந்திய அரசு அமைதி காப்பதை கோழைத்தனம் என்று

பஞ்சாங்கம் மார்ச் 20 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

Entertainment News

Popular Categories