தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்?!: ராம.கோபாலன் கேள்வி

rama-gopalan சென்னை: தாய் மதம் திரும்புதலுக்கு ஏன் இந்த பதட்டம்? என்று இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், கிறிஸ்தவர்களும், முஸ்லீம்களும் இந்துக்களை மதமாற்றம் செய்கிறார்கள். அப்போதெல்லாம் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுப்பதில்லை, வலியுறுத்தி கேட்டால், அவர்கள் விருப்பப்படி மதமாறுகிறார்கள் என்பதை உறுதி செய்து அனுப்பிவிடுகிறார்கள். அப்படி இருக்கும்போது முஸ்லீம்களும், கிறிஸ்தவர்களும் தாய் மதமான இந்து மதத்திற்கு திரும்புதல் என்பதிலும் சட்டம் அதே கண்ணோட்டம்தானே இருக்க முடியும்? அதனை தடுக்க காவல்துறைக்கு எந்த அதிகாரமோ, முகாந்திரமோ இல்லை. காவல்துறை தை வெள்ளிக்கிழமையான நேற்று சென்னை மேற்கு மாம்பலம் காமாட்சி அம்மன் கோயிலில் வழிபட பக்தர்களை அனுமதிக்கவில்லை. இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மசூதியிலோ, சர்ச்சிலோ இதுபோல காவல்துறை தன் இஷ்டத்திற்கு சட்டத்தை கையில் எடுத்துக்கொள்ளுமா?! இந்துக்கள் என்றால் அலட்சியம், தான் வைத்தே சட்டம் என அரசு செயல்படுகிறது என்பதை இந்துக்கள் புரிந்துகொள்ள வேண்டும். மதமாற்றத் தடைச் சட்டத்தை கொண்டு வராதவரை மதமாற்றம் என்பதைத் தடுக்க முடியாது. இதற்கு அரசியல் கட்சிகள் தயாரில்லை எனில் தாய் மதம் திரும்புவதைக் கண்டு பதட்டம் அடைவது சந்தர்ப்பவாதம் மட்டுமல்ல, ஜனநாயக விரோதமானதும், சட்டவிரோதமானதும் கூட. கிறிஸ்தவர்களோ, முஸ்லீம்களோ இந்துக்களாகி தாய்மதம் திரும்புவதற்குக் காரணம் தன்மானமும், மற்றும் பாரம்பரிய எனும் வேர்களை நோக்கிய பயணம். இதனைத் தடுக்க முனைவதை இந்து முன்னணி கடுமையாக கண்டிக்கிறது. என்று கூறியுள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

Topics

பஞ்சாங்கம் – மே 7 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

பஞ்சாங்கம் மே 5 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

மக்கள் தீர்ப்பு 2026: ஐந்து மாநிலங்களில் என்ன நிலைமை?

தவெக., தனிப்பெரும் கட்சியாக அதிக இடங்களைப் பெற்றுள்ளது என்ற போதிலும் ஆட்சிக்குத் தேவையான பெரும்பான்மையைப் பெறவில்லை என்பதால் தொங்கு சட்டசபை நிலை உருவாகியுள்ளது.

பஞ்சாங்கம் மே 4 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் மே 3 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

குருவித்துறை; வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர்! பக்தர்கள் வேதனை!

குருவித்துறையில் தண்ணீர் இன்றி வறண்ட வைகையில் இறங்கிய கள்ளழகர் அதிகாரிகளின் திட்டமிடாத செயலே காரணம் என பக்தர்கள் வேதனை!

தேர்தலைக் காரணம் காட்டி கொள்முதல் தாமதம்! வெயில் மழையில் சேதமாகும் நெல் மூட்டைகள்!

வாடிப்பட்டி அருகே, போடிநாயக்கன்பட்டி பகுதியில் 20 நாட்களுக்கு மேலாக கொள்முதல் செய்யாததால் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நெல் மூட்டைகள் மழையில் நனைந்தும் வெயிலில் காய்ந்தும் சேதம்; விவசாயிகள் வேதனை!

இருதரப்பு மோதலில் எஸ்பி., சமரசம்; அமைதியாக நடைபெற்ற ஸ்வாமி ஊர்வலம்!

உசிலம்பட்டி அருகே எழுமலை அடுத்துள்ள ஆத்தங்கரைப்பட்டியில் சுமார் 400 ஆண்டுகள் பழமையான இந்து அறநிலையத்துறைக்கு

Entertainment News

Popular Categories