ஏற்காடு கோடை விழா இன்று தொடக்கம்: முதல்வர் பங்கேற்பு

Published:

14 May 12 yerkadu - 2026சேலம் ஏற்காட்டில் 43-ஆவது கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சியை இன்று தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைக்கிறார்.

சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மே 12-ஆம் தேதி முதல் 16-ஆம் தேதி வரை 43-ஆவது ஏற்காடு கோடை விழா மற்றும் மலர்க் கண்காட்சி நடைபெற உள்ளது.

இந்த விழாவை முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி தொடங்கி வைத்து, நலத் திட்ட உதவிகளை வழங்கிப் பேசுகிறார். விழாவில், வனத் துறை அமைச்சர் திண்டுக்கல் சி.சீனிவாசன், வேளாண் துறை அமைச்சர் இரா.துரைக்கண்ணு, சுற்றுலாத் துறை அமைச்சர் வெல்லமண்டி என்.நடராஜன் ஆகியோர் பங்கேற்று பேசுகின்றனர்.

ஏற்காடு அண்ணா பூங்காவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட மலர்களைக் கொண்டு மலர்க் கண்காட்சி தோட்டக்கலைத் துறையின் சார்பில் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட உள்ளது. மேலும், காய்கறிக் கண்காட்சி, பழக் கண்காட்சி ஆகியவை நடத்தப்படுகின்றன. கோடை விழாவில் அனைத்துத் துறைகளையும் ஒருங்கிணைந்து தமிழக அரசின் திட்டங்கள் மற்றும் சாதனைகளை விளக்கும் வகையில் பல்துறை பணிவிளக்க முகாம் நடத்தப்படவுள்ளது. கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் நாய்க் கண்காட்சி, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஆரோக்கிய குழந்தைகள் போட்டி, பாரம்பரிய உணவுப் போட்டி, மகளிர் திட்டத்தின் சார்பில் கோலப்போட்டி, சுற்றுலாத் துறையின் சார்பில் சுற்றுலாப் பயணிகளுக்கும், பத்திரிகையாளர்களுக்கும் படகுப் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.

ALSO READ:  அரசு உத்தரவை மீறி பள்ளியில் செபக்கூட்டம்; புகாரளித்த இந்து முன்னணியினர் கைது!

Related articles

Recent articles

spot_img