December 5, 2025, 3:32 PM
27.9 C
Chennai

வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு தினம்: நினைவு தூணுக்கு இன்று மரியாதை

23 July09 Vellor sippai kalakam - 2025இன்றைக்கு சுதந்திரக்காற்றை சுவாசிக்கும் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்ட முதல் புரட்சி வேலூர் சிப்பாய் புரட்சி 1806ம் ஆண்டு ஜூலை 10ம் தேதி நள்ளிரவு இப்புரட்சி நடந்தது. இந்த நாள் இந்திய வரலாற்றில் இந்திய சுதந்திரப்போராட்ட வீரர்களின் ரத்தத்தினால் எழுதப்பட்ட நாள். வேலூர் கோட்டையில் ஆங்கிலேயர்களுக்கு எதிராக இந்திய சிப்பாய்கள் புரட்சி நடத்தினர். ஆனால் அதற்கு ‘வேலூர் சிப்பாய் கலகம்’ என்றே வரலாற்றில் பதிவு செய்தனர். இந்திய விடுதலை போராட்டத்தின் முதல் வித்து இந்த புரட்சி தான் என்பதை வீரசாவர்க்கர் உட்பட பலர் உணர்த்தியுள்ளனர். இதற்காக அவர்கள் இந்த போராட்டத்தை ‘வேலூர் சிப்பாய் புரட்சி’ என்றே அழைக்க வேண்டும் என்று வற்புறுத்தினர்.

1805ம் ஆண்டு, வேலூர் கோட்டையில் மெட்ராஸ் ரெஜிமெண்டை சேர்ந்த தென்னிந்திய துருப்புகள் பாதுகாப்புப்பணியில் அமர்த்தப்பட்டனர். அந்த ஆண்டில்தான் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களால், இந்தியப்படை வீரர்கள் யாரும் தங்கள் சமய அடையாளங்களை அணிவதோ, தலையில் குடுமி வைத்திருப்பதோ கூடாது என்றும், ஐரோப்பிய ராணுவ உடைகளை மட்டுமே அணிய வேண்டும் உள்ளிட்ட கடுமையான விதிமுறைகள் உருவாக்கப்பட்டன. இந்த விதிமுறை மூலம் இந்திய சிப்பாய்கள் ஐரோப்பிய முறையில் தொப்பி அணிய வேண்டும் என்பதும், மாட்டுத் தோலால் ஆன பட்டையை அணிய வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டது. இந்து மற்றும் முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த 1,500 படை வீரர்களுக்கும் கோபத்தை ஏற்படுத்தியது. இதன் காரணமாக அவர்கள் ஆங்கிலேயர்களுக்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட முற்பட்டனர்.

இப்படியாக கிளர்ச்சியில் ஈடுபட முயன்றவர்களுக்கு தலா 600 பிரம்படி தண்டனை வழங்கப்பட்டது. இந்த நடவடிக்கை இந்திய சிப்பாய்களுக்கு மேலும் கோபத்தை உண்டாக்கியது. வேலூர் கோட்டையில் அப்போது சிறை வைக்கப்பட்டிருந்த திப்பு சுல்தான் மகன்கள்தான் இந்த கிளர்ச்சிக்கு காரணம் என குற்றம் சாட்டி கடுமையான சித்ரவதைகள் தொடர்ந்தன. இதுவும் இந்திய சிப்பாய்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஆத்திரமடைந்த இந்திய சிப்பாய்கள் 1806ம் ஆண்டு ஜூலை 10 ஆம் தேதி நள்ளிரவு உறக்கத்தில் இருந்த ஆங்கிலேய அதிகாரிகள் பலரை கொன்று குவித்தனர். 350 அதிகாரிகளில் 100 பேர் கொல்லப்பட்டனர், இதனால் ஆத்திரமடைந்த ஆங்கிலேய படைகள் கர்னல் கில்லஸ்பி தலைமையில் ஆற்காட்டில் இருந்து விரைந்து வந்து சில மணி நேரத்தில் இந்திய சிப்பாய்கள் 350க்கும் மேற்பட்டோரை கொன்று புரட்சியை அடக்கினர்.

இந்த புரட்சியில் கொல்லப்பட்ட இந்திய வீரர்களை வேலூர் கோட்டைக்குள் இருந்த கிணறு ஒன்றில் வீசி அக்கிணற்றை மூடிவிட்டதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த புரட்சியினால் கொல்லப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, கோட்டையின் எதிரே அடக்கம் செய்யப்பட்டு கல்லறைகள் எழுப்பப்பட்டன. இன்றைக்கும் அந்த இடத்தில் அடக்கம் செய்யப்பட்ட ஆங்கிலேய அதிகாரிகளின் பெயர்கள் தாங்கிய கல்லறைகளை பொதுமக்கள் காண முடியும். இந்த சிப்பாய் புரட்சியில் உயிர் நீத்த வீரர்களின் நினைவாக வேலூர் மக்கான் பகுதியில் நினைவுத் தூண் ஒன்றும் நிறுவப்பட்டது. 2006ம் ஆண்டில் சிப்பாய் புரட்சியின் இரு நூற்றாண்டு நினைவை போற்றும் வகையில், வேலூர் சிப்பாய் புரட்சி நினைவு அஞ்சல் தலையும் வெளியிடப்பட்டது. இத்தகைய சிறப்புமிக்க வேலூர் சிப்பாய் புரட்சியை நினைவுகூறும் வகையில் நாளை சிப்பாய் புரட்சி தினம் கடைபிடிக்கப்பட உள்ளது. இதையொட்டி வேலூர் மக்கானில் அமைக்கப்பட்டுள்ள சிப்பாய்புரட்சி நினைவு தூணுக்கு மரியாதை செய்யப்படுகிறது. புரட்சியின் மூலம் தேசத்தின் விடுதலை வேட்கையை சுதந்திரப்போராட்டத்தை தங்களின் இன்னுயிர் தந்து தொடங்கி வைத்த நமது வீரர்களின் நினைவை போற்றுவோம்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories