December 5, 2025, 4:16 PM
27.9 C
Chennai

4 நாட்களாக தொடரும் லாரி ஸ்டிரைக் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு

01 June17 Lorry - 2025இந்தியாவில் கடந்த 4 நாட்களாக நடைபெறும் லாரி ஸ்டிரைக்கால் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. போராட்டத்தில் பங்கேற்க பெட்ரோல் டீசல், டிரைலர், கன்டெய்னர் லாரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதால் போராட்டம் மேலும் தீவிரமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இந்தியாவில் டீசல், பெட்ரோல் மீதான விலையை ஜி.எஸ்.டி.யின் கீழ் கொண்டுவர வேண்டும். காலாவதியான சுங்கசாவடிகளை மூட வேண்டும். மூன்றாம் நபர் காப்பீடு தொகை உயர்வை கண்டித்தும் லாரி உரிமையாளர்கள் கடந்த 20ம் தேதி முதல் காலவரையற்ற போராட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த போராட்டம் நேற்று 4வது நாளாக நீடித்தது. இந்த நிலையில் லாரி உரிமையாளர்கள் சார்பில் சென்னையில் நேற்று மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாநில லாரி உரிமையாளர்கள் சம்ேமளன தலைவர் எம்.ஆர்.குமாரசாமி தலைமை தாங்கினார். இதில் அகில இந்திய மோட்டார் டிரான்ஸ்போர்ட் காங்கிரஸ் அகில இந்திய செய்தி தொடர்பாளரும், தமிழ்நாடு மாநில மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் எஸ்.யுவராஜ் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொடர்ந்து யுவராஜ் அளித்த பேட்டி: இந்தியா முழுவதும் லாரி ஸ்டிரைக் 4வது நாளாக நீடித்துள்ளது. இந்த ஸ்டிரைக்கால் இந்தியா முழுவதும் 30,000 ஆயிரம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஸ்டிரைக்கால் 20 லட்சத்துக்கும் அதிகமான தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.700 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. லாரி உரிமையாளர்களுக்கு தினந்தோறும் 200 கோடி இழப்பு ஏற்பட்டு வருகிறது.

இந்த ஸ்டிரைக்கில் பங்கேற்குமாறு டிரைலர் லாரி உரிமையாளர்கள் சங்கம், பெட்ரோல், டீசல் லாரி உரிமையாளர்கள் சங்கம், கன்டெய்னர் லாரி உரிமையாளர்கள் சங்கத்தினருடன் இன்று போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்க உள்ளோம். அவர்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றால் போராட்டம் மேலும் விஸ்வரூபம் எடுக்கும். துறைமுகங்களில் சரக்கு போக்குவரத்து அடியோடு பாதிக்கப்படும். எனவே, மத்திய அரசு உடனடியாக எங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்தி கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும். இல்லாத பட்சத்தில் போராட்டத்தை மேலும் தீவிரமாக்குவோம். இவ்வாறு கூறினார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories