#MeToo விவகாரம்: கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் ஏன் மௌனம் சாதிக்கிறார்கள்?: லீனா கேள்வி

leena manimekalai - 2026

சென்னை: கோடம்பாக்கத்தில் மீடு விவகாரத்தில் ஏன் முக்கியத் தலைகள் மௌனம் சாதிக்கிறார்கள் என்று கேள்வி எழுப்பியுள்ளார், இயக்குனரும் கவிஞருமான லீனா மணிமேகலை.

பணியிடங்களில் அதிகார துஷ்பிரயோகம் செய்து நடத்தப்படும் பாலியல் துன்புறுத்தல்கள்” தொடர்பான அனுபவங்களை ஏராளமான பெண்கள் பொதுவெளியில் பகிர்ந்து கொண்டிருக்கும் உலகளாவிய #metoo இயக்கம் இந்தியாவிலும் பரவலான விவாதங்களை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறது.

அதன் தொடர்ச்சியாக எனக்கு ஏற்பட்ட அனுபவத்தை என் முகநூலில் பகிர்ந்திருந்தேன். அதைக் குறித்த எதிர்வினைகளுக்கு, பல ஊடக நண்பர்கள் என் பதிலை எதிர்பார்ப்பதால், அனைவரையும் சந்திக்கிறேன் என்று குறிப்பிட்ட லீனா, இன்றைய பத்திரிகையாளர் சந்திப்பில் அதிகம் கேட்கப்பட்ட கேள்வி ஏன் தாமதம்? உடனே சொல்லியிருக்கலாமே என்பதுதான்.

பத்திரிகையாளர்கள் ஒருவர் விடாமல் கேட்கும் கேள்வி; ஏன் தாமதம். ஏன் குற்றம் நடந்தவுடன் முறையிடவில்லை?

அடுத்து, ஏன் கோடம்பாக்கத்தில் முக்கிய தலைகள் மெளனம் சாதிக்கிறார்கள்? மெளனம் சாதிக்கிறவர்கள் குற்றத்திற்கு துணை போகிறவர்கள். குற்றவாளிகளை விட மோசம் அவர்கள். இன்னும் சரியாக சொன்னால், மெளனம் சாதிக்கிறவர்களை நான் வெகுவாக சந்தேகிக்கிறேன்… என்று குறிப்பிட்டுள்ளார்.

ALSO READ:  ஆப்கானிஸ்தான் அணி உடனான டெஸ்ட்; இந்திய அணி இன்னிங்ஸ் வெற்றி!

இப்போது இவ்வளவு படைப்பு வேலைகள் செய்து ஒரு ஆளாகி நிற்கும்போதே இவ்வளவு பேச்சு வாங்க வேண்டியிருக்கிறதே! அப்போதே சொல்லியிருந்தால் என்ன குற்றவாளியை பிடித்து ஜெயிலுக்கு அனுப்பி என்னை பாதுகாத்திருப்பீர்களா? என்ற கேள்வியை முன்வைக்கிறார் லீனா மணிமேகலை!

முறையிடும் பெண்களுக்கு ஏன் பாதுகாப்பு இல்லை என உங்களிடமே அந்தக் கேள்வியை திருப்புங்கள்! முறையிடும் பெண்ணை ஏன் களங்கப் படுத்துகிறீர்கள் என சமூகத்திடம் கேளுங்கள்! ஏன் இந்தக் குற்றங்கள் நடக்கிறது என அதிகாரத்திடம் கேளுங்கள். முறையிடுவதில் ஏற்படும் தாமதங்களுக்கு பாதிக்கபட்ட பெண் மட்டுமே பொறுப்பாக முடியாது. #metoo என்று பதில் கூறும் லீனா மணிமேகலை, முன்னதாக இயக்குனர் சுசி கணேசன் தன்னிடம் அத்துமீற முயன்றார் என்றும், தன் கையில் கத்தி வைத்திருந்ததால் தாம் தப்பித்ததாகவும் கூறியிருந்தார். அதை அடுத்து பரவலான வாதப் பிரதிவாதங்கள் எழுந்தன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

Topics

அன்புத் தம்பி அண்ணா மலைக்கு…

உயர்திரு. அண்ணாமலை அவர்களுக்கு, மனமுவந்த ஆசிகள். எனக்கு வயது 81. அந்த வயதின் உரிமையிலும் தைரியத்திலும் உங்களை வாழ்த்தி ஆசீர்வதிக்கிறேன்!

ஒருவர், தன் இந்து மதத்தை வீட்டுக்குள் வைத்து எதற்குப் பூட்ட வேண்டும்?

ஒரு விஷயத்தை வெளியில் காட்டிக் கொள்ளமாட்டேன் என்று சொன்னால் அதை வெளியில் காட்டத் தகுந்ததாக மதிக்கவில்லை என்றுதான் அர்த்தம்.

பஞ்சாங்கம் ஜூலை 13 – திங்கள் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான பலன்கள், நட்சத்திர பலன்கள், அதிர்ஷ்ட எண்கள், அதிர்ஷ்ட நிறம், திருக்குறள், சிந்தனைகள்...

பஞ்சாங்கம் ஜூலை 12 – ஞாயிறு | இன்றைய ராசி பலன்கள்!

பஞ்சாங்கம், தினசரி திதி நட்சத்திரம் நல்ல நேரம் ராகு காலம் எமகண்டம் பன்னிரு ராசிகளின் ராசிபலன்கள் தினம் ஒரு திருக்குறள்

விதிமீறல் பட்டாசு ஆலைகளின் உரிமங்களை ரத்து செய்து போலீஸார் நடவடிக்கை!

மேலும் இது போன்ற தொடர் ஆய்வுகள் நடத்தப்படும் எனவும் விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உரிமைத்தை தற்காலிகமாக ரத்து செய்யும் நடவடிக்கை தொடரும் எனவும் அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

சிவகாசி அச்சக அதிபர் வீட்டில் கொள்ளை; கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்த 4 பேர் கைது!

விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் அச்சக அதிபர் வீட்டில் 75 பவுன் நகையை கொள்ளையடித்த கொள்ளையர்களுக்கு அடைக்கலம் கொடுத்து கொள்ளைக்கு உதவியதாக 4 பேரை போலீசார் கைது செய்தனர்!

பிரபல பின்னணி பாடகி எஸ்.ஜானகி மைசூரில் காலமானார்!

பல ஆயிரக்கணக்கான பாடல்களால் ரசிகர்களைக் கவர்ந்து இழுத்த பிரபல பின்னணிப் பாடகி எஸ். ஜானகி தமது 88வது வயதில் மைசூரில் இன்று காலமானார்.

முக்கிய அரசு விழாக்களில் ‘வந்தே மாதரம்’ பாடலே முதலில் : உள்துறை அமைச்சகம்!

இந்தியாவின் தேசியப் பாடலான 'வந்தே மாதரம்'-பாடலை இசைப்பது அல்லது பாடுவது குறித்த விரிவான வழிகாட்டுதல்களை அரசு வெளியிட்டுள்ளது.

Entertainment News

Popular Categories