வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

WhatsApp Image 2019 04 01 at 10.13.18 AM 1 - 2026

திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் காட்பாடி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து அவர்களின் சிமெண்டு குடோனில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காட்பாடி, காந்திநகர் பகுதியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் நேற்று நள்ளிரவு 3 மணி முதல், காலை 8.30 மணி வரை வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது.

வருகின்ற மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகா் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு 10 மணிக்கு வந்ததாகவும், அப்போது துரைமுருகன், கதிரானந்த் வீட்டில் இல்லை என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

ALSO READ:  திமுக வேட்பாளர் வீட்டில் நகை கொள்ளை - வேட்பாளரின் மருமகள் உள்ளிட்ட 3 பேர் கைது...

மேலும் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாாிகளுக்கு கடிதம் வாயிலாக தொிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த கோாிக்கையை ஏற்க மறுத்த அதிகாாிகள் சோதனையிடும் நோக்கில் துரைமுருகனின் வீட்டு வாயிலில் காத்திருந்தனர். அவா்களுடன் அப்பகுதி திமுக தொண்டா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் காவல் துறைனா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் துரைமுருகன் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வந்தனர். அப்போது ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

மேலும், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் வேலூர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளிலும் சோதனை நடைபெற்றது.

ALSO READ:  மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலம்..

அதனை தொடர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துரைமுருகன் வீட்டுக்கு வெளியில் திமுக-வினர் பலர் இருந்ததால் பரபரப்பு ஏதேனும் நிகழாமல் தடுக்க, சோதனை முடித்துக் கொண்ட அதிகாரிகளில் சிலர் முன்னதாக வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories