வேலூரில் திமுக பொருளாளர் துரைமுருகனின் நண்பர் சீனிவாசன் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை

WhatsApp Image 2019 04 01 at 10.13.18 AM 1 - 2026

திமுக பொருளாளர் துரைமுருகன் அவர்களின் காட்பாடி வீட்டில் வருமான வரித் துறையினர் சோதனை செய்ததை தொடர்ந்து அவர்களின் சிமெண்டு குடோனில் மறைத்து வைக்கப்பட்ட கோடிக்கணக்கான பணம் நேற்று காலை பறிமுதல் செய்யப்பட்டது. இதனால் வேலூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் கதிர்ஆனந்துக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

காட்பாடி, காந்திநகர் பகுதியில் உள்ள திமுக சட்டமன்ற உறுப்பினரும், அக்கட்சியின் பொருளாளருமான துரைமுருகன் வீட்டில் நேற்று நள்ளிரவு 3 மணி முதல், காலை 8.30 மணி வரை வருமான வரித்துறை சோதனை நடந்து வந்தது.

வருகின்ற மக்களவைத் தோ்தலில் வேலூா் தொகுதியில் திமுக பொருளாளா் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்த் போட்டியிடுகிறார். இந்த நிலையில் துரைமுருகன் வீட்டில் வாக்காளா்களுக்கு பட்டுவாடா செய்யப்படுவதற்காக, பணம், பரிசுப்பொருட்கள் இருப்பதாக தகவல் கிடைத்தது.

இதனைத் தொடா்ந்து வேலூா் மாவட்டம் காட்பாடி அருகே காந்திநகா் பகுதியில் அமைந்துள்ள துரைமுருகன் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள், தோ்தல் பறக்கும் படை அதிகாரிகள் இரவு 10 மணிக்கு வந்ததாகவும், அப்போது துரைமுருகன், கதிரானந்த் வீட்டில் இல்லை என அவர்களிடம் தெரிவிக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும் துரைமுருகனுக்கு நெஞ்சு வலி உள்ளிட்ட பிரச்சினைகள் இருப்பதால் இந்த நேரத்தில் சோதனை செய்ய வேண்டாம். நாங்கள் உங்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கத் தயாராக இருக்கிறோம். நீங்கள் காலையில் சோதனையைத் தொடங்குங்கள் என்று துரைமுருகன் தரப்பில் அதிகாாிகளுக்கு கடிதம் வாயிலாக தொிவிக்கப்பட்டது.

இருப்பினும் அந்த கோாிக்கையை ஏற்க மறுத்த அதிகாாிகள் சோதனையிடும் நோக்கில் துரைமுருகனின் வீட்டு வாயிலில் காத்திருந்தனர். அவா்களுடன் அப்பகுதி திமுக தொண்டா்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனா். இதனைத் தொடா்ந்து அப்பகுதியில் காவல் துறைனா் பாதுகாப்புப் பணியில் ஈடுபடத் தொடங்கினர்.

இந்நிலையில் நள்ளிரவு 3 மணியளவில் துரைமுருகன் வீட்டுக்குள் சென்ற அதிகாரிகள் தொடர்ந்து 5 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்து வந்தனர். அப்போது ஆவணங்கள் எதுவும் சிக்கவில்லை என தகவல்கள் கூறுகின்றன. எனினும் தொடர்ந்து சோதனை நடைபெற்றது.

மேலும், சித்தூர் சாலையில் துரைமுருகன் மற்றும் அவரது மகன் கதிரானந்திற்கு சொந்தமான கிங்க்ஸ்டன் பொறியியல் கல்லூரியில் வருமான வரித்துறை சோதனை நடைபெற்றது. இதற்கிடையில் வேலூர் திமுக-வின் முக்கிய நிர்வாகிகள் வீட்டுகளிலும் சோதனை நடைபெற்றது.

அதனை தொடர்ந்து, இன்று காலை 8.30 மணியளவில் சோதனை நிறைவுப் பெற்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. துரைமுருகன் வீட்டுக்கு வெளியில் திமுக-வினர் பலர் இருந்ததால் பரபரப்பு ஏதேனும் நிகழாமல் தடுக்க, சோதனை முடித்துக் கொண்ட அதிகாரிகளில் சிலர் முன்னதாக வாகனத்தில் ஏறி புறப்பட்டுச் சென்றனர். அவர்களை தொடர்ந்து மற்றவர்களும் புறப்பட்டுச் சென்றதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

Topics

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரம் இந்தியாவுக்குப் பெருமை! : டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி

டி.எஸ்.கிருஷ்ணமூர்த்தி என்கிற தருவை சுப்பைய கிருஷ்ணமூர்த்தி திருநெல்வேலிக்காரர். பட்டப்படிப்பு பெங்களூரில். மைசூர் பல்கலைக் கழகத்தில் தங்கப்பதக்கம் பெற்றவர். இங்கிலாந்தில் பட்டமேற்படிப்பு படித்தவர்.

ஞானமும் பக்தியும் கலந்த கொள்கை!

வெளிப்பார்வைக்கு எந்த மதத்தைச் சேர்ந்தவர்களாயிருந்தாலும். ஸாதாரணப் புத்திசாலிகள் தெரிந்தோ, தெரியாமலோ இந்த விசிஷ்டாத்வைத மதத்தையே பின்பற்றி, இம்மதக் கொள்கைகளையே அனுசரிக்கின்றார்கள்.

பஞ்சாங்கம் – ஏப்ரல் 22 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

ராஜபாளையம் பெரிய மாரியம்மன் கோயில் சித்திரை திருவிழா துவக்கம்

ராஜபாளையம் தென்காசி சாலையில் உள்ள புதுப்பாளையம் பெரிய மாரியம்மன் கோயிலில் ஆண்டுதோறும்...

ஹிந்து விரோதிகளைத் தோற்கடிக்க… நமக்கான ஆளுமைகளைத் தேர்ந்தெடுப்போம்!

ஜனநாயக கடமையை ஆற்றுவோம்.. 100% வாக்களிப்போம். தமிழகத்தில் நமக்கான ஆளுமையை நாம்...

ஆதிசங்கரரின் சதச்லோகி – எளிய விளக்கம்!

காசியில் ஸ்ரீ பகவத்பாதர் தம் 9 - 12 வயதுக்குள் ப்ரஸ்தானத்ரய பாஷ்யங்களை இயற்றினார். அவற்றில் சொல்லப்பட்ட விஷயங்களை மக்கள் எளிதில் புரிந்து கொள்ள 100 சுலோகங்களில் ஆன சதச்லோகியை இயற்றினார்.

ஆதிசங்கர பகவத்பாதரின் ‘நிர்வாண ஷட்கம்’!

ஆதி சங்கர பகவத் பாதர் இயற்றிய நிர்வாண ஷடகம் மிகவும் பிரபலமான ஒன்று. நிர்வாண எனில் உருவமற்ற. ஷட் எனில் ஆறு என்ற எண்ணிக்கை.

அட்சய திருதியை: கும்பகோணத்தில் 12 கருட சேவை கோலாகலம்!

கும்பகோணத்தில் ஆண்டுதோறும் அட்சய திருதியை அன்று மிகச் சிறப்பாக நடைபெறும் திருவிழா 12 கருட சேவை ஆகும்.

Entertainment News

Popular Categories