December 5, 2025, 7:08 PM
26.7 C
Chennai

கொண்டு போயிட்டாங்க.! பிடிபட்ட ரூ.570 கோடி பணத்தை கொண்டு போயிட்டாங்க.!

 
திருப்பூர் அருகே கடந்த 14ம் தேதி மூன்று, 3 கண்டெய்னர் லாரிகளில் தேர்தல் பறக்கும் படையினரால் உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது.
 
தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று (மே 17) காலை 5.30 மணிக்கு கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டது.
 
காவல் துணை ஆணையாளர் தங்கவேல் தலைமையிலான காவல்துறையினரும், துணை ராணுவத்தினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்; ஒவ்வொரு நடவடிக்கையும்,காணொளி பதிவு செய்யப்பட்டது.
 
சிக்கிய 570 கோடி பணம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவுக்கு சொந்தமானது என மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி திட்டவட்டமாக கூறியுள்ளார்.
 
பிடிபட்ட ரூ.570 கோடி முதலமைச்சர் ஜெயலலிதாவுடையது என்றும் அந்த பணம் வாக்காளர்களுக்கு கொடுக்க வைத்து இருந்த பணம் எனவும் தோல்வி பயத்தால் கொடநாட்டில் இருந்து ஆந்திராவுக்கு கடத்த முயன்றபோது பிடிபட்டுள்ளது என வைகோ யூகிப்பதாக கூறியுள்ளார்.
 
திமுக தலைவர் கருணாநிதி 3 கண்டெய்னர்களில் சிக்கிய 570 கோடி ரூபாயை விடுவிக்க தமிழகத்தை சேர்ந்தவர்கள் கோரிக்கை விடுத்ததின் காரணமாகவே மத்திய அரசாங்கத்தின் மூத்த அமைச்சர் ஒருவர் தலையிட்டுள்ளதாக தெரிவித்து இருந்தார்.
 
மேலும் வங்கி அதிகாரிகள் பணத்திற்கு உரிமை கோர 18 மணி நேரம் கழித்து ஏன் முடிவு செய்தார்கள் என்று வங்கி அதிகாரிகள் மூலம் கசிந்த தகவல் பொது மக்கள் மத்தியில் விவாதிக்கப்பட்டு வருகிறதே இதற்குச் சம்பந்தப்பட்டவர்கள் என்ன விளக்கம் தரப்போகிறார்கள்?
 
இதற்குப் பிறகும் அரசினர் என்ன சொல்கிறார்கள் என்று தமிழக மக்கள் ஆவலோடும், பரபரப்போடும் எதிர்பார்க்கிறார்கள் என்று கருணாநிதி கூறியுள்ளார்.
 
தமிழகத்தில் 3 கண்டெய்னர்களில் சிக்கிய ரூபாய் 570 கோடி சமூக ஊடகங்களிலும், பொதுமக்கள் மத்தியிலும் கீழ் கூறபட்டுள்ள கேள்விகள் எழுந்து பெரும் விவாதமாகி உள்ளது.
570 கோடி ரூபாயைக் கொண்டு சென்ற மூன்று கண்டெய்னரை பறக்கும் படையினர் தடுத்து நிறுத்த முயன்ற போது ஏன் நிற்க வில்லை ?
மூன்று கண்டெய்னரில் கொண்டு செல்லக் கூடிய அளவுக்கு எந்த ஒரு வங்கியிலாவது பணம் வைத்திருக்கலாமா .?
ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு 570 கோடி ரூபாய் பணத்தை மூன்று கண்டெய்னரில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
அந்த வங்கியின் அங்கீகாரம் பெற்ற அதிகாரி எவரேனும் கன்டெய்னருடன் செல்லவில்லை ?
570 கோடி ரூபாய் பணத்தை எடுத்துச் செல்ல மூன்று கன்டெய்னர்கள் தேவையா .?
லுங்கி அணிந்த நிலையில் காவல்துறையினர் நிலையில் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் பணத்திற்கு இன்சூரன்ஸ் ஆவணங்கள் இல்லாமல் இருப்பதின் காரணம் .?
எந்த உரிய ஆவணங்களும் இல்லாமல் 570 கோடி ரூபாய் பணத்தை ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்குக் பகலில் எடுத்துச் செல்லாமல் விடுமுறை நாளில் இரவில் எடுத்துச் செல்ல காரணம் என்ன .?
570 கோடி ரூபாய் உள்ள மூன்று கண்டெய்ருக்கும் சீல் வைக்கப்படவில்லை ?
அந்த வண்டியிலே இருந்தவர்கள் காட்டிய ஜெராக்ஸ் நகல்களிலும் முரண்பாடான தகவல்கள் இருப்பது என்ன .?
கோவை வங்கி அதிகாரிகள் திருப்பூரில் பணம் பிடிபட்டு 8 மணி நேரம் கழித்து பணத்திற்கு உரிமை கோரியது ஏன். ?
பிடிபட்ட 570 கோடி ரூபாய் குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் இது வரை ஏன் எவ்விதமான விளக்கமும் அளிக்கவில்லை ?
570 கோடி ரூபாய் பணம் பிடிபட்டுள்ள சம்பவம் குறித்து இதுவரை தமிழகத்திலே அரசாங்கத்தின் சார்பில் ஒன்றும் பேசாமல் இருப்பது ஏன். ? என்பது போன்ற மேலும் பல்வேறான கேள்வி அனைவர் மத்தியிலும் எழுகிறது .
 
மக்களால் தேர்ந்து எடுக்கப்பட்டுள்ள மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பொதுமக்கள் அனைவரும் எழுப்பும் கேள்விகளுக்கு ஆதாரங்களுடன் வெளிப்படையாக விளக்கம் அளிக்க வேண்டும் எனும் பொதுமக்கள் கோரிக்கையும் வலுத்துள்ளது.
 
இந்த நிலையில் தேர்தல் செலவின பார்வையாளர் எஸ்பால் சாவ்லா தலைமையிலான விசாரணைக்குழு அளித்த அறிக்கையின் அடிப்படையில் திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தி இருந்து இன்று பிடிபட்ட 3 கண்டெய்னர் லாரிகளில் இருந்த 570 கோடி ரூபாய் கோவை பாரத ஸ்டேட் வங்கிக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது.
 
 
 
 

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

Topics

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்த்ல் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

நீதிமன்றத் தீர்ப்பை அவமதித்த திமுக., அரசு! திருப்பரங்குன்றத்தில் பக்தர்கள் கொந்தளிப்பு!

சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டும் திருப்பரங்குன்றம் மலை மேலுள்ள...

Entertainment News

Popular Categories