அமமுக செய்தி தொடர்பாளர் சசிரேகா பல்வேறு தொலைக்காட்சி விவாத நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு ஆவேசமாக பேசி அக்கட்சியினர் மத்தியில் பிரபலமானார். மேலும் வழக்கறிஞரான இவர் தினகரனின் நம்பிக்கைக்கு உரியவராக இருந்தவர்.
அவர் இன்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியை சந்தித்து அதிமுகவில் ஐக்கியமானார். இது அமமுகவினருக்கும் தினகரனுக்கும் அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
இது குறித்து இன்று காலையே முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் டிவிட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டுவிட்டது. அமமுக.,வில் இருந்து திமுக.,வுக்கு தாவிய தங்க தமிழ்ச்செல்வன் குறித்த பரபரப்பு சூடுபிடித்த போது, அமமுக.,வில் இருந்து தாய்க் கழகமான அதிமுக.,வுக்கு இவர் தாவியுள்ளார்.
அமமுக செய்தித் தொடர்பாளரும் தகவல் தொழில்நுட்பப் பிரிவு மாநில துணை செயலாளருமான திருமதி A.சசிரேகா அவர்களும், சட்டக் கல்லூரி மாணவர்களும் நேரில் சந்தித்து தங்களை அஇஅதிமுகவில் அடிப்படை உறுப்பினர்களாக இணைத்துக் கொண்டனர். #AIADMK pic.twitter.com/Y7JIwMBYVj
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) June 28, 2019
தினகரன௠கடà¯à®šà®¿à®¯à®¿à®²à®¿à®°à¯à®¨à¯à®¤à¯, அநà¯à®¤ கடà¯à®šà®¿à®¯à®¿à®©à¯ செயà¯à®¤à®¿ தொடரà¯à®ªà®¾à®³à®°à®¾à®¯à®¿à®°à¯à®¨à¯à®¤ சசிரேகா à®….தி.à®®à¯.க.வில௠à®à®•à¯à®•à®¿à®¯à®®à®¾à®© செயà¯à®¤à®¿ ஸà¯à®Ÿà®¾à®²à®¿à®©à¯à®•à¯à®•à¯ தெரியà¯à®®à®¾ ?