‘சங்கி’ நாமக்கல் கவிஞர்

namakkal kavignar - 2026

-ராகவேந்திரன் SS

“தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லடா…”
“தமிழன் என்றோர் இனமுண்டு
தனியே அதற்கோர் குணமுண்டு…”

இவை எல்லாம் எண்ணற்ற திராவிட மேடைகளில் காலம் காலமாக முழங்கி வரும் வரிகள். இவற்றுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர், வே ராமலிங்கம் பிள்ளை. இந்த வரிகளை மட்டும் படித்துவிட்டு, இன்றைய திராவிட மாடல்களுக்கு அடித்தளம் அமைத்தவர்களில் இவரும் ஒருவர் என்ற எண்ணம் தோன்றலாம்.

இன்றைய சமூக நீதி வியாபாரிகள் எப்படி தாதாஸாஹேப் அம்பேத்கரை தவறாக மேற்கோள் காட்டுகிறார்களோ, அப்படித்தான் நாமக்கல் கவிஞரையும் தமிழ் வியாபாரிகள் மேற்கோள் காட்டுகிறார்கள். நாமக்கல் கவிஞர் அடிப்படையில் ஒரு தேசியவாதி, அதிலும் குறிப்பாக காந்தியவாதி.

கத்தி யின்றி ரத்த மின்றி
யுத்த மொன்று வருகுது
சத்தி யத்தின் நித்தி யத்தை
நம்பும் யாரும் சேருவீர்

மகாத்மா காந்தியடிகளின் உப்பு சத்தியாகிரகத்திற்கு தென்னிந்தியாவில் ஊக்கமளித்த இந்த அமர கவிதை நாமக்கல் கவிஞர் எழுதியது.

நாமக்கல் கவிஞர் முதல், மாபோசி, ஜீவானந்தம், புலமைப்பித்தன் வரை எந்த உண்மையான தமிழறிஞரும் அரசியல் சார்ந்த மொழிவாதத்தை ஏற்கவில்லை. சொல்லப்போனால், நாமக்கல் கவிஞர் திராவிட அரசியல் கருத்தியலை நேரடியாகவே எதிர்த்துள்ளார். இதற்கு அவரது தேசியவாத சிந்தனை மட்டும் காரணமல்ல. தேசியத்துடன் சேர்த்து, தெய்வீகத்தையும் அவர் போற்றினார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

“தேவாரம் திரு வாசகமும்
திகழும் சேக்கிழார் புகழும்
ஓவாப் பெருங்கதை ஆழ்வார்கள்
உரைகளும் தமிழன் வாழ்வாகும்”

தமிழ் மொழியின் வாழ்வுக்கே தமிழ்மொழியின் ஆன்மீகம்தான் காரணம் என்கிறார் கவிஞர். வழக்கம் போல, இந்த வரிகளை “தமிழ்! தமிழ்!” என்று முழங்கும் எந்த திராவிட மேடையிலும் கேட்க முடியாது.

திராவிட மாடல் பஹூத்தறிவுவாதிகள் எந்தக் கருத்தையும் முழுமையாக ஆழமாகப் பார்க்க மாட்டார்கள் என்பது யதார்தம். நுனிப்புல் மேய்வது மட்டும்தான் அவர்களுக்குக் கைவந்த கலை. இதனால், இன்றும் அந்த மேடைகளில் நாமக்கல் கவிஞரைக் கேட்க முடிகிறது. ஒரு நான்கு வரிகள் கீழே சென்று படித்தால், உடனே நாமக்கல் கவிஞரை “சங்கி!” என்று சொல்லிவிடுவார்கள்.

உண்மையான மொழிப்புலமை, அது சார்ந்த ஆய்வு இவற்றில் ஈடுபடும் எந்த அறிஞரும் பொய்யை ஏற்க மாட்டார். மொழிப்பிரிவினை, தனித்தமிழ், பார்பனர் சூழ்ச்சி, இத்யாதிக் கருத்துகள் ஆழமில்லாத பொய்கள். திராவிட இயக்கம் அதன் உச்சத்தில் செயல்பட்ட காலத்திலேயே இவற்றைப்பற்றி கேள்வி கேட்டவர் நாமக்கல் கவிஞர்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

“தமிழர் வேறு, சம்ஸ்க்ருதம் வேறு, என்பது பாதிரியார்களால் தோண்டப்பட்ட பள்ளம். இந்தப் பள்ளத்தைப் பதுங்கு குழியாக மாற்றியவர் மறைமலை அடிகள்.” என்பார் ஆனது ஆசான் திராவிடமாயை சுப்பு. தமிழை வளர்க்கிறேன், காக்கிறேன் என்ற பெயரில் ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சி சுதந்திர இந்தியாவிலும் தொடர்கிறது என்பதை நாமக்கல் கவிஞர் உணர்ந்தார். இதனால், துவக்கத்தில் இருந்தே தனித்தமிழ் இயக்கத்தை எதிர்த்தார்.

கவிஞர் தனித்தமிழ் பற்றிக் கூறும்போது,
“அந்நிய மொழிப் பெண்ணை மணந்துக்கொண்டு, இடைவிடாது கடலோடி, தூர தேசங்களோடு நெடுங்காலமாக வியாபாரம் செய்துகொண்டு இருந்தவர்கள் நாட்டில் வழங்கிய மொழி எப்படித் தனித்தமிழாக இருந்திருக்க முடியும்?” என்கிறார்
(தமிழ் மொழியும், தமிழரசும் ப. 22).

மேலும், இந்த தனித்தமிழ் அரசியல் துவங்கிய காலத்திலேயே வாழ்ந்தவர் நாமக்கல் கவிஞர். அவர் செந்தமிழ் கடுந்தமிழ் என்று அந்நாளைய தமிழை இரண்டாகப் பிரிக்கிறார். “இயல்பான தமிழ்மொழியில் பிறமொழிக் கலப்பு இருந்தது, இருக்கிறது. அந்த மொழிகள் பிடிக்காதவர்கள் யாருக்கும் புரியாமல் தமிழ் சொற்களை மட்டுமே பயன்படுத்திப் பேசுகிறார்கள். இந்தக் கடுந்தமிழைத்தான் தனித்தமிழ் என்று சொல்கிறார்கள்.” என்ற மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த ஓர் உண்மையை வெளிப்படுத்துகிறார் கவிஞர்.

ALSO READ:  அண்ணாமலை இளந்தலைமுறையால் ஈர்க்கப்பட்டவர்; பாஜக.,வோ தலைமுறைகளாக பெருவளர்ச்சி கண்டது!

இறுதியாக தமிழ் என்ற பெயரில் இங்கு நடந்த கேலிக்கூத்துகளைப் பார்த்து அந்த உண்மையான தமிழறிஞர் சொன்னது,

“ஐரோப்பிய அநாகரீகங்களில் மோகங்கொண்டு தெய்வ நிந்தனை பேசித் திரிவதற்குத் தமிழ் நாட்டில் தமிழரசு வந்தாலென்ன? இங்கிலீஷ் அரசே இருந்தாலென்ன?”

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

Topics

பஞ்சாங்கம் ஜூலை 10 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

FIFA 2026: ரவுண்ட் 16… கடைசி நான்கு ஆட்டங்கள், அதிர்ச்சித் தோல்விகள்!

காலிறுதிச் சுற்றுக்கு முந்தைய சுற்றின் கடைசி ஆட்டம் வான்கூவரில் சுவிட்சர்லாந்து, கொலம்பியா அணிகளுக்கிடையே நடந்தது. இதில் இருஅணிகளும் ஆட்டநேர முடிவு வரை கோல் எதுவும் போடவில்லை. எக்ஸ்ட்ரா டைமான அடுத்த 30 நிமிடத்திலும்

பஞ்சாங்கம் ஜூலை 09 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

IND Vs ENG-T20-மூன்றாவது போட்டியிலும் சொதப்பிய இந்திய அணி!

          இது இந்தியாவின் மிக மோசமான தொள்வியாகும். இதற்கு முன்னர் இவ்வளவு ரன் வித்தியாசத்தில் தோற்றதில்லை. அணியில் வரிசையாக இடதுகை மட்டையாளர்களாக இருப்பது அணிக்குப் பிரச்சனையாக உள்ளது. இதனால் அடுத்த ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் மீண்டும் அணியில் இடம்பெற வாய்ப்புள்ளது. 

காஷ்மீர் பண்டிட் நர்ஸ் கொலை; 36 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசாரணை… முக்கியத்துவம் என்ன?

இந்த கருத்துதான் பண்டிட்களின் வெளியேற்றம் பற்றிய விவாதத்தை கட்டமைக்க முடியும். இல்லாவிட்டால், காஷ்மீர் குறித்த எந்த பேச்சும் வெறும் சொற் சிலம்பமாகவே பார்க்கப்படும்.

கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

சபரிமலையில் நடைபெறும் மாதாந்திர பூஜையின் போது, ​​பல முக்கியமானநெய்யாபிஷேகம், படி பூஜை, உதயாஸ்தமன பூஜை, புஷ்பாபிஷேகம், உஷ பூஜை, உச்ச பூஜை, அஷ்ட அபிஷேகம். சடங்குகள் நடத்தப்படுகின்றன.

நடத்தையில் சந்தேகம்… நடந்த சண்டை… மனைவி குத்தியதில் கணவன் உயிர் இழப்பு!

நடத்தையில் சந்தேகப்பட்டு நடந்த சண்டையில் மனைவியே கணவனை கத்தியால் குத்திக் கொலை செய்த சம்பவம் இப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

பஞ்சாங்கம் – ஜூலை 08 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

Entertainment News

Popular Categories