“ஒளிதீப விழா” கவிதை: மீ.விசுவநாதன்
கண்ணா கண்ணா நீதான் – மாமன்
கம்ச(ன்) உயிரை மாய்த்தாய்
கண்ணா கண்ணா நீதான் – நர
காசு ரனுயிர் ஓய்த்தாய்
கண்ணா கண்ணா நீதான் – அவன்
கடேசி ஆசை ஈந்தாய்
கண்ணா கண்ணா உந்தன் – பெருங்
கருணை தீப ஒளிதான்.
விண்ணில் உள்ள தேவ – நிலை
வேண்டு வோர்க்க ளித்தாய்
எண்ணி(ல்) உந்தன் சக்தி – தீமை
எதிர்க்க வென்றே நின்றாய்
தண்ணில் சூட்டி லெங்கும் – உன்
தன்மை உண்டு என்றாய்
மண்ணில் எங்கும் யார்க்கும் – தீப
மகிமை அறிய வைத்தாய்.
அசுர குணத்தைத் தானே – நீ
அரக்கன் என்று கொன்றாய்
உசுரக் குடிக்கும் ஆசை – அதை
ஒழிக்க கீதை சொன்னாய்
பசுவின் தலைவன் உன்னுள் – யாவும்
பார்த்தல் ஞானம் என்பாய்
நிசமாம் உன்னைக் காண -ஒளி
தீப விழாவைத் தந்தாய்.