தந்தையும் மகளும் கோயிலுக்கு செல்கின்றனர்.
திடீரென மகள் அங்கே தூணில் உள்ள சிங்கத்தின் சிற்பத்தை பார்த்து ” அப்பா ஓடுங்கள் இல்லையென்றால் அந்த சிங்கம் நம்மை தின்று விடும்” என்றாள் …
அதற்கு அப்பா மகளிடம் “அது சிற்பம்தான். ஒன்றும் செய்யாது” என்றார் …
மகள் அப்பாவிடம் “சிங்கத்தின் சிற்பம் நம்மை ஒன்றும் செய்யாது என்றால் கடவுளின் சிற்பம் மட்டும் நமக்கு என்ன செய்யும்” என்றாள்…
தந்தை சொன்னார்… சிங்கத்தின் சிற்பத்தைப் பார்த்ததும் உனக்கு அது தின்றுவிடும் என்று பயம் வந்தது. ஆனால் கடவுளின் சிற்பத்தைப் பார்க்கும் போது நமக்கு அடுத்தவரைக் காப்பாற்றும் கருணையும் அன்பும் ஏற்படும்… நீ சாலையில் போகும்போது பார்த்திருக்கிறாய் அல்லவா… ஊருக்கு ஊர் பஸ் ஸ்டாண்ட்களில் கறுப்பாக கண்ணாடிபோட்டு தாடி வைத்த சிலைகளையும், கையில் புத்தகம் வைத்துக் கொண்டு ஊரில் சுடுகாடு எங்கே இருக்கும் என்று ஒற்றை விரல் காட்டி வழி சொல்லும் சிலைகளையும். அதைப் பார்க்கும் போது நமக்கு எப்படி அருவருப்பாக இருக்கிறது. அதுமாதிரி… எந்த எந்த உருவத்தை பார்க்கும் போது நம் மனதில் என்ன எண்ணங்கள் ஏற்படுகிறதோ அதற்காகத்தான் அதை வைத்திருக்கிறார்கள். எல்லாம் கல்தான். ஆனால் அது இருக்கும் இடத்தைப் பொறுத்து நமக்கு உணர்வை கிளறச் செய்கிறது என்றார்…
தந்தையின் விளக்கத்தில் மகள் நல்லறிவு பெற்றுத் தெளிந்தாள்…
To Read this news article in other Bharathiya Languages
தந்தை மகளுக்குச் சொன்ன கதை
உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari