சென்னை :
ஆர்.கே.நகரில் இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் டிச.21ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், இன்று முதல் வேட்பு மனு தாக்கல் தொடங்கியது.
இதனிடையே, சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய ஆர்.கே.நகர் இடைத்தேர்தலை நடத்தும் தேர்தல் அலுவலர் வேலுசாமி, ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தலில் காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை ஓட்டுப்பதிவு நடக்கும் என தெரிவித்துள்ளார்.