முன்னாள் சகோதரி ஆன உ.பி. சகோதரி சசிகலா: கோபத்தில் திவாகரன்

divakaran dinakaran - 2026

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் உடன்பிறவா சகோதரியாக அறியப்பட்ட சசிகலா, உடன்பிறந்த சகோதரியாகக் கொண்டு அரசியல் செய்து வந்த திவாகரனால் இப்போது முன்னாள் சகோதரியாக அறியப் படுகிறார்.

சசிகலாவை இனி நான் என்னுடைய சகோதரி என்று அழைக்க மாட்டேன் என்றும், சசிகல இனி என் முன்னாள் சகோதரி என்றும் கடுங் கோபமாகக் கூறியுள்ளார் சசிகலாவின் சகோதரர் திவாகரன்.

சசிகலா குடும்பத்தில் அரசியல் தகராறு இப்போது சூடு பிடித்துள்ளது. அதிமுக.,வை கைப்பற்றுவோம், அதிமுக., அலுவலகம் இரட்டை இலை சின்னத்தைக் கைப்பற்றுவோம் என்று கூறி அரசியல் செய்யத் துவங்கிய தினகரனால், எதுவும் செய்ய முடியாமல், தனிக்கட்சியும், ஒரு எம்.எல்.ஏ., பதவியும்தான் பெற முடிந்தது. அதிமுக., என்ற கட்சி மரியாதை மதிப்புடன் வலம் வந்த தினகரன் ஆதரவாளர்களால் இப்போது அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தை வைத்து அரசியல் செய்ய முடியவில்லை.

இதனால் அதிமுக., அம்மா அணியை உயிர்ப்பிக்க சசிகலாவின் சகோதரர் திவாகரன் மேற்கொண்ட முயற்சிகள் பலன் தரவில்லை. சசிகலாவே, தன்னை சகோதரி என்று கூறிக்கொண்டு, தன் பெயரை பயன்படுத்தி அரசியலில் ஈடுபட வேண்டாம் என்று வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பினார். இது தினகரனுக்கு ஆதரவாக சசிகலா செயல்படுவதையும், திவாகரனுக்கு எதிராக செயல்படுவதையும் வெளிப்படுத்தியது.

ALSO READ:  சபரிமலை கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களும் நுழையலாமா?

sasikala - 2026

இந்நிலையில், தினகரனும் திவாகரனும் ஒருவரை ஒருவர் கடுமையாக குற்றம் சுமத்தி ஊடகங்களில் பேசி வருகின்றனர். உடல் நிலை சரியில்லாதவர், மன நிலை சரியில்லாதாவர் என்றெல்லாம் பேசி வந்த நிலையில், திவாகரன் தன் அரசியல் பயணம், சசிகலாவின் நோட்டீஸால் ஒன்றும் நின்றுவிடாது என்று கூறியிருக்கிறார்.

இது குறித்து மன்னார்குடியில் திவாகரன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில்,  தினகரனின் மிரட்டல் அரசியலின் உச்சம்; எங்கள் அரசியல் பயணம் நின்று விடாது. சசிகலாவை இனி நான் சகோதரி என்று அழைக்க மாட்டேன்; அவர் என் முன்னாள் சகோதரி.. என்று கூறியுள்ளார்.

ஜெயலலிதாவிடம் இருந்து அதிமுக.,வை ஒட்டுமொத்தமாகக் கைப்பற்ற நினைத்த சசிகலாவின் குடும்பம் இப்போது சிக்கி சின்னாபின்னமாகிக் கிடக்கிறது; இதற்கு ‘பழிவாங்கும் அம்மாவின் ஆன்மா’தான் காரணம் என்று அதிமுக., விசுவாசிகள் கூறிவருகின்றனர்.

அதே நேரம், சசிகலா குடும்பத்தினர் இப்போது ஆடுவது ஒரு நாடகம். தினகரை வைத்து ஒரு புறமும் திவாகரனை வைத்து இன்னொரு புறமும் நாடகம் ஆடி, அதிமுக.,வில் திவாகரனை கோர்த்து விட்டு வேறு வகையில் குடும்ப ஆதிக்கத்தை நிலைநாட்ட மேற்கொள்ளும் முயற்சி என்று அரசியல் கண்ணோட்டத்தில் பார்க்கின்றனர் அதிமுக., மூத்த தலைகள்.

ALSO READ:  எர்ணாகுளம் - வேளாங்கண்ணி- செங்கோட்டை ,மதுரை வழி புதிய ரயில்..

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

Topics

பஞ்சாங்கம் – ஜூன் 3 – புதன் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், ராசிபலன்கள், ஜோதிடம், பொன்மொழிகள், திருக்குறள்,

தாமிரபரணிக் கரை ஆலயத்தில்… வழிபாட்டில் திருவள்ளுவர்!

தெய்வத் தமிழ் வளர்த்த நம் நெல்லையம்பதியில் தாமிரபரணிக் கரை சிவாலயம் ஒன்று திருவள்ளுவரை தெய்வத்தின் வரிசையில் தன்னுள் தாங்கியுள்ளது...

சோழவந்தான் ஜெனகை மாரியம்மன் வைகாசி தேரோட்டம் கோலாகலம்!

ஜெனகை மாரியம்மன் கோவில் அர்ச்சகர் சண்முகவேல் தலைமையில் அர்ச்சகர்கள் பூஜைகள் செய்தனர் வழிநெடுகிலும் பொதுமக்கள் தேங்காய் உடைத்து ஜெனகை மாரியம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர்

பஞ்சாங்கம் ஜூன் 2 – செவ்வாய் | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம் தகவல்கள், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்கள், திருக்குறள், சிந்தனைகள்...

அண்ணாமலையில் அரசியல் பயணம் இனி…!

அண்ணாமலை தனிக்கட்சியா என்ற கேள்வி தான் உள்ளூர் மீடியா முதல் நேஷனல் மீடியா வரை விவாதிக்கப்படுகிறது. அண்ணாமலை தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் என்று வதந்தி கிளம்புவது இது ஒன்றும் முதல் முறை கிடையாது.

பழங்குடியினர் சலுகைகள் – யாருக்கு?

பழங்குடியினரின் இந்த உணர்வுபூர்வமான கோரிக்கை கடந்த 60 ஆண்டுகளுக்கும் மேலாக கவனிக்கப்படாமல் உள்ளது. இப்போது ஜார்கண்ட் எனப்படும் பகுதியில் இருந்து 1960 இல் கார்த்திக் ஓரான் என்ற பழங்குடியின நாடாளுமன்ற உறுப்பினர் காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்தான் மதம் மாறியவர்களுக்கு சலுகை கூடாது என்ற விஷயத்தை முதன் முதலில் எழுப்பினார்.

வங்கத் தீர்ப்பு: இந்திய அரசியலில் நிலநடுக்கம்!

நேற்று எனக்கு ஒரு தகவல் கூறப்பட்டது. 'இண்டி' கூட்டணியில் உள்ள எந்தக் கட்சித் தலைவர்களும் மம்தா பானர்ஜியின் தொலைபேசி அழைப்புகளை எடுக்கவில்லை என்று கூறப்பட்டது. சில மாதங்களுக்கு முன்பு இதை நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் அது இனி வெளிப்படவிருக்கும் நிகழ்வுகளுக்கான ஒரு முன்னோட்டம் மட்டுமே.

முப்பெரும் ஊழல்களில் முதற் பெரும் ஊழல் துறை!

அற நிலையத்துறையைப் போன்ற சட்ட விரோதமான, சாசன விரோதமான, சமூக விரோதமான, சனாதன விரோதமான ஒரு அமைப்பு இந்த உலகில் எங்குமே இருக்கமுடியாது. உலகிலேயே சனாதன வாழ்வியல் ஆதி காலம் தொட்டு உன்னத நிலையில் இருந்துவந்த தமிழகத்தில்தான் இந்த நிலைமை என்பது மிகப் பெரிய, மிக வேதனையான நகைமுரண் தான்.

Entertainment News

Popular Categories